Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்களுடன் பகை வைச்சுக்கிறது உங்களுக்கு மரணத்தை வரவைக்குமாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, சிலருடன் பகைமை கொண்டால், மரணம் நம்மைத் தேடி வரலாம் அல்லது வாழ்க்கை சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி நாம் யாருடன் பகைமை கொள்ளக்கூடாது. இவர்களை தெரியாமல் கூட பகைத்துக் கொள்ளக்கூடாது.
ஒருவர் முன்னேறவும், பிரச்சனைகளை தவிர்க்கவும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் விரும்பினால், இந்த 7 பேருடன் பகை கொள்ளவே கூடாது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மன்னர் அல்லது ஆட்சியாளர்
ராஜாவோடு அல்லது ஆட்சியோடு நேரடியாகப் பகை கொள்வது என்பது சிறைக்குச் செல்வது அல்லது உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். அவர்களுடன் பகை கொள்ளும் போது அல்லது போருக்குச் செல்லும்போதும் நாம் கவனமாக இருப்பது அவசியம்.
தன்னுடன் பகை கொள்ளக்கூடாது
ஒருவர் தன்னை வெறுத்து, தன்னை அவமரியாதை செய்து, தன் உடலையும் மனதையும் கவனித்துக் கொள்ளாமல் இருந்தால், மரணம் எப்போது வேண்டுமானாலும் அவர்களை நெருங்கலாம். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன் நாம் நம்மை மதிக்க வேண்டும்.
வலிமையானவர்கள்
பணரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அல்லது ஆயுதங்களுடன் வலிமையாக இருக்கும் நபருடன் சண்டையிடுவது மரணத்தை அழைப்பதாகும். ஞானிகளுடன் அல்லது வலிமையானவர்களுடன் சண்டையிடும்போது நாம் அவர்களைப் போலவே வலிமையாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
முட்டாள்கள்
முட்டாள்களுடனான நட்பு எவ்வளவு கெடுதலோ அவர்களுடனான பகையும் கெடுதலாகும். அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்பெயரைக் கெடுக்க முட்டாள்கள் எதையும் செய்வார்கள், அவர்களுடன் பகை கொள்வது உங்களுக்கு மரணத்தை மட்டுமல்ல அவமானத்தையும் ஏற்படுத்தும்.
மருத்துவர்கள் அல்லது சமையல்காரர்கள்
உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது சமையல்காரரிடம் ஒருபோதும் சண்டையிடக் கூடாது. மருத்துவர்கள் உங்களுக்கு தங்கள் மருந்துகள் மூலம் தீங்கு விளைவிக்கலாம் மற்றும் உங்களின் சமையல்காரர் தங்களின் உணவு மூலம் கூட உங்களுக்கு தீங்கு செய்யலாம்.
நெருங்கிய நண்பர்கள்
உங்களின் அனைத்து ரகசியங்களும் தெரிந்த நண்பர் உங்களுக்கு எதிரியானால் அதைவிட ஆபத்தானது எதுவுமில்லை. உங்கள் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்த நண்பருடன் பகைமை கொள்வது என்பது உங்களுக்கான குழியை நீங்களே தோண்டிக் கொள்வது போன்றது.



Click it and Unblock the Notifications
