Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்களுடன் பகை வைச்சுக்கிறது உங்களுக்கு மரணத்தை வரவைக்குமாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, சிலருடன் பகைமை கொண்டால், மரணம் நம்மைத் தேடி வரலாம் அல்லது வாழ்க்கை சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி நாம் யாருடன் பகைமை கொள்ளக்கூடாது. இவர்களை தெரியாமல் கூட பகைத்துக் கொள்ளக்கூடாது.
ஒருவர் முன்னேறவும், பிரச்சனைகளை தவிர்க்கவும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் விரும்பினால், இந்த 7 பேருடன் பகை கொள்ளவே கூடாது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மன்னர் அல்லது ஆட்சியாளர்
ராஜாவோடு அல்லது ஆட்சியோடு நேரடியாகப் பகை கொள்வது என்பது சிறைக்குச் செல்வது அல்லது உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். அவர்களுடன் பகை கொள்ளும் போது அல்லது போருக்குச் செல்லும்போதும் நாம் கவனமாக இருப்பது அவசியம்.
தன்னுடன் பகை கொள்ளக்கூடாது
ஒருவர் தன்னை வெறுத்து, தன்னை அவமரியாதை செய்து, தன் உடலையும் மனதையும் கவனித்துக் கொள்ளாமல் இருந்தால், மரணம் எப்போது வேண்டுமானாலும் அவர்களை நெருங்கலாம். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன் நாம் நம்மை மதிக்க வேண்டும்.
வலிமையானவர்கள்
பணரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அல்லது ஆயுதங்களுடன் வலிமையாக இருக்கும் நபருடன் சண்டையிடுவது மரணத்தை அழைப்பதாகும். ஞானிகளுடன் அல்லது வலிமையானவர்களுடன் சண்டையிடும்போது நாம் அவர்களைப் போலவே வலிமையாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
முட்டாள்கள்
முட்டாள்களுடனான நட்பு எவ்வளவு கெடுதலோ அவர்களுடனான பகையும் கெடுதலாகும். அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்பெயரைக் கெடுக்க முட்டாள்கள் எதையும் செய்வார்கள், அவர்களுடன் பகை கொள்வது உங்களுக்கு மரணத்தை மட்டுமல்ல அவமானத்தையும் ஏற்படுத்தும்.
மருத்துவர்கள் அல்லது சமையல்காரர்கள்
உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது சமையல்காரரிடம் ஒருபோதும் சண்டையிடக் கூடாது. மருத்துவர்கள் உங்களுக்கு தங்கள் மருந்துகள் மூலம் தீங்கு விளைவிக்கலாம் மற்றும் உங்களின் சமையல்காரர் தங்களின் உணவு மூலம் கூட உங்களுக்கு தீங்கு செய்யலாம்.
நெருங்கிய நண்பர்கள்
உங்களின் அனைத்து ரகசியங்களும் தெரிந்த நண்பர் உங்களுக்கு எதிரியானால் அதைவிட ஆபத்தானது எதுவுமில்லை. உங்கள் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்த நண்பருடன் பகைமை கொள்வது என்பது உங்களுக்கான குழியை நீங்களே தோண்டிக் கொள்வது போன்றது.



Click it and Unblock the Notifications
