Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி உங்க வீட்டுக்கு அருகில் இந்த 6 விஷயங்கள் இல்லனா உங்களால் நிம்மதியா வாழவே முடியாதாம்...!
Chanakya Niti: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல வீடு மிகவும் முக்கியமானது. ஆனால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, எங்கு வீடு கட்டுவது, எந்த இடத்தில் வாங்குவது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது. நம் வாழ்வில் வருமானத்தில் பெரும்பகுதி வீட்டுக்காக செலவிடப்படுவதால், நீங்கள் வீடு கட்டும்போதோ அல்லது வாங்கும் போதோ மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
வாடகைக்கு செல்வதாக இருந்தாலும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில் வீடு கெட்ட இடமாக இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைய முடியாது. வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் சாணக்கிய நீதி அனைத்தும் ஒரு மனிதன் தனது வீட்டைக் கட்ட வேண்டிய இடத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன.

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வீட்டை மோசமான இடத்தில் கட்டினால், அவர் மட்டுமின்றி அவரது குடும்பமும் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே வீட்டைப் பற்றிய சாணக்கியரின் இந்தக் கொள்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செல்வந்தர்கள் வாழும் இடம்
"தநிகா ஷ்ரோதி ராஜா நாடி வைத்யஸ்து பஞ்சம் பஞ்ச யத்ர ந வித்யந்தே தத்ர தின்னா ந வசேத்"
இந்த ஸ்லோகத்தில் செல்வந்தர்கள் வசிக்கும் இடம் வீடு கட்டுவதற்கு ஏற்றது என்று சாணக்கியர் கூறுகிறார். பணக்காரர்கள் இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்புகளும், வணிகத்திற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் வேலைக்காக அலைய வேண்டியதில்லை. அத்தகைய இடத்தில் வீட்டை வைப்பதன் மூலம், வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
அறிவாளிகள்
பக்கத்து வீட்டுக்காரர் படித்தவராகவோ அல்லது அறிஞராகவோ இருந்தால், அது குடும்பத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து உங்கள் குழந்தைகளை வளர்க்கலாம்.
அதிகாரம் மிக்கவர்களின் வசிப்பிடம்
அரசனோ, நிர்வாகமோ சரியில்லை என்றால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. மறுபுறம் அரசன் அல்லது ஆட்சியாளரை மக்கள் நேரடியாக அணுகக்கூடிய ஒரு நிர்வாக அமைப்பில், தனிநபர் பாதுகாப்பாக இருக்கிறார். எனவே அப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்டுவதுதான் நல்லது என்கிறார் சாணக்கியர்.
நீர்வளம்
ஆறு, குளம் இல்லாத இடத்தில் வீடு கட்டி எந்த பயனும் இல்லை. அத்தகைய நபர்கள் வாழ்க்கையில் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள். வீடு கட்டும் முன் அருகில் நீர்வளம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் சாணக்கியர். முழுமையான தண்ணீர் வசதி உள்ள இடத்தில்தான் வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும்.
மருத்துவ வசதி
வீடு கட்டுவதற்கு முன், வீட்டைச் சுற்றி மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். இது நோய்வாய்ப்பட்டால், உடனடியாக உடல்நலம் பெற உதவுகிறது.
வருமானம் இல்லாத இடம்
வருமானம் இல்லாத இடத்தில் உங்கள் வீட்டைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். வருமானம் அல்லது வருமானத்திற்கான ஆதாரம் இல்லாத இடத்தில் உயிர்வாழ்வது சாத்தியமற்றது. இந்த சூழ்நிலையில் அவர் தனது குடுமபத்திற்கு உணவளிக்க முடியாது அல்லது எந்த தொழிலும் இல்லாமல் அவர் மரியாதையையும் சம்பாதிக்க முடியாது.



Click it and Unblock the Notifications












