Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சாணக்கிய நீதி படி இந்த 5 குணமுள்ள பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
Chanakya Niti: ஒரு ஆணுக்கு கடவுள் கொடுக்கும் மிகச்சிறந்த பரிசு புரிதலுள்ள மனைவி. ஏனெனில் வாழ்க்கையில் வெற்றிபெறும் அனைத்து ஆண்களுக்கும் பின்னால் எப்போதும் ஒரு பெண் இருப்பார் என்பது பழமொழி. அதேபோல ஒரு பெண்ணால் எவ்வளவு வலிமையான ஆணையும் வீழ்த்தி விட முடியும். இந்தியாவின் தலைசிறந்த ராஜதந்திரியான சாணக்கியரும் இதைத்தான் கூறியுள்ளார்.
ஒருவர் தனது வாழ்க்கையில் பெரிய உயரங்களுக்குச் சென்றால், அவரது மனைவி அவருக்குப் பின்னால் இருப்பார் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தால், அந்த வீடு நரகமாக மாறும் மற்றும் அவரின் கணவர் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. சாணக்கிய நீதி படி மோசமான மனைவியை அடையாளம் காண்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண் தன் கணவருக்கோ அல்லது குடும்பத்திற்கோ எந்த முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்வது நல்லதல்ல. ஏனென்றால் அவர்கள் பொருள் சார்ந்த உலகில் வாழ்கிறார்கள். அத்தகைய பெண்கள் எப்போதும் ஆடம்பரமான வாழ்வை வாழ விரும்புகிறார்கள். அது நிறைவேறாத போது அவர்கள் மூர்க்கமானவர்களாக மாறுகிறார்கள்.
மற்றவர்களை அவமதிக்கும் பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் மற்றவர்களை அவமதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அத்தகைய பெண் ஒருபோதும் குடும்பத்தை நன்றாக வழிநடத்த முடியாது. அத்தகைய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். விருந்தினரை வரவேற்காத, பெரியவர்களை மதிக்காத பெண்ணை திருமணம் செய்து கொள்வது உங்களை குடும்பம் மற்றும் உறவினர்களிடமிருந்து பிரித்து வைக்கும். அத்தகைய பெண் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய் சொல்ல தயங்காத பெண்
ஒருவரின் நிம்மதியான வாழ்க்கை என்பது அவர்கள் பொய் கூறாமல் இருக்கும் வரைதான். எப்பொழுதும் பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ள பெண்கள் தங்கள் கணவருக்கு துன்பம் தருவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் எப்போதும் கணவனைத் தூண்டிவிட முயற்சிப்பதாகவும், குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் சாணக்கியர் கூறுகிறார்.
ஏமாற்றும் குணமுள்ள பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி, மக்களை ஏமாற்றும் அல்லது ஒருவரை தங்கள் சொந்த லாபத்திற்காக பயன்படுத்தும் பெண்கள் ஒருபோதும் குடும்பத்தில் அமைதியையம், மகிழ்ச்சியையும் உருவாக்க மாட்டார்கள். அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர். அத்தகைய பெண்களை திருமணம் செய்து கொள்வது மட்டுமல்ல அவர்களிடம் பழகாமல் இருப்பதே நல்லது.
படிப்பறிவு இல்லாத பெண்
கல்வியறிவு இல்லாத பெண், தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்து, தன் குழந்தைகளுக்கு நல்ல குணங்களையும், பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டை பொருளாதாரரீதியாக நிலையற்றதாக ஆக்குகிறார்கள். மேலும், இதுபோன்ற பெண்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினரையும் முட்டாளாக வளர்ப்பார்கள். குடும்பத்தின் நிலை என்னவாக இருந்தாலும், பெண்கள் தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்வதும், குழந்தைகளைக் கவனிக்காமல் இருப்பதும் குடும்பச் சிதைவுக்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.



Click it and Unblock the Notifications
