சாணக்கிய நீதி படி மோசமான குணம் கொண்ட ஒருவரை அடையாளம் காண்பது எப்படி தெரியுமா?

Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியரின் சாணக்கிய நீதி, மனித மற்றும் சமூக நலன் தொடர்பான முக்கியமான தலைப்புகளைப் பற்றி பேசுகிறது மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை தொடர்பான முக்கிய விஷயங்களை முன்னிலைப்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகள் கடந்தாலும், சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகள் இன்றும் பொருத்தமானவை. ஆச்சார்யா சாணக்கியர் ஒரு திறமையான அரசியல்வாதி, புத்திசாலி இராஜதந்திரி, பொருளாதார நிபுணர் என உலகப் புகழ் பெற்றார்.

Chanakya Niti: How to Identify the Evil Person in Tamil

வெற்றிகரமான வாழ்க்கைக்கு, அனைவரும் அவற்றை அறிந்து கொள்வது அவசியம். வாழ்க்கையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தவறான பாதையில் நடப்பவர் விரைவில் அழிந்து போகிறார் என்றார்.

வெற்றிகரமான வாழ்க்கைக்கான குணங்கள்

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தாராள மனப்பான்மை, வார்த்தைகளில் இனிமை, தைரியம், அறிவுள்ள நடத்தை போன்றவற்றை யாரும் கற்றுத்தர முடியாது. இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இயலபாகவே அவர்களின் நடத்தையில் இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதனின் நடத்தையிலும் இந்த நல்ல பண்புகள் இயற்கையாக இருக்க வேண்டும்.

தவறான பாதையில் செல்லும் ஒருவருக்கு சாணக்கிய நீதியில் பல முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு மனிதன் தனது சமுதாயத்தை விட்டு வெளியேறி மற்றொரு சமுதாயத்தில் சேருபவர், அநீதியின் பாதையில் செல்லும் அரசர் போல அழிவை சந்திப்பார் என்று கூறியுள்ளார்.

யானையின் உடல் மிகவும் பெரியது, ஆனால் அது ஒரு சிறிய மணியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அதே போல், எவ்வளவு பெரிய இருளையும் ஒரு சிறிய விளக்கு விரட்டி விடுகிறது. இது போல மின்னல் மலையை உடைக்கிறது, மின்னல் மலையைப் போல் பெரியதா என்றால் நிச்சயம் இல்லை. ஆற்றலும், வலிமையும்தான் முக்கியமே தவிர அளவு அல்ல.

பேராசை கொண்டவர்கள் உண்மையைப் பேசமாட்டார்கள்

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, எப்போதும் வீட்டு வேலைகளில் மட்டுமே ஈடுபடும் ஒரு மனிதன், ஒருபோதும் உலக அறிவைப் பெற முடியாது. பேராசை கொண்ட ஒருவர் எப்போதும் உண்மையைப் பேச முடியாது, அதேசமயம் வேட்டையாடுபவர்கள் ஒருபோதும் தூய்மையான மனதுடன் இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.

நூறு முறை குளித்தாலும் மனதின் அழுக்கைக் கழுவ முடியாது

சாணக்கியக் கொள்கையின்படி, நூறு முறை புனித நீரில் நீராடினாலும், உங்கள் மனதின் அழுக்கைக் கழுவ முடியாது. அதே போல் சாராய பானை புனிதமாக இருக்க முடியாது. நீங்கள் அதை புனிதப்படுத்த விரும்பினால், அனைத்து மதுபானங்களையும் நீராவியாக்க வேண்டும்.

ஒரு துன்மார்க்கன் மனதில் எப்போதும் தூய்மையான எண்ணங்கள் இருக்காது, நீங்கள் அப்படிப்பட்டவரிடம் நல்ல குணங்களை எதிர்பார்ப்பது வேப்பிலை இனிப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றதாகும்.

Story first published: Friday, October 27, 2023, 6:10 [IST]
Desktop Bottom Promotion