Latest Updates
-
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
ஜூலை 16-ல் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்காய் பாயா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - ஆட்டுக்கால் பாயாவை விட சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி மோசமான குணம் கொண்ட ஒருவரை அடையாளம் காண்பது எப்படி தெரியுமா?
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியரின் சாணக்கிய நீதி, மனித மற்றும் சமூக நலன் தொடர்பான முக்கியமான தலைப்புகளைப் பற்றி பேசுகிறது மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை தொடர்பான முக்கிய விஷயங்களை முன்னிலைப்படுத்துகிறது.
பல நூற்றாண்டுகள் கடந்தாலும், சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகள் இன்றும் பொருத்தமானவை. ஆச்சார்யா சாணக்கியர் ஒரு திறமையான அரசியல்வாதி, புத்திசாலி இராஜதந்திரி, பொருளாதார நிபுணர் என உலகப் புகழ் பெற்றார்.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு, அனைவரும் அவற்றை அறிந்து கொள்வது அவசியம். வாழ்க்கையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தவறான பாதையில் நடப்பவர் விரைவில் அழிந்து போகிறார் என்றார்.
வெற்றிகரமான வாழ்க்கைக்கான குணங்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தாராள மனப்பான்மை, வார்த்தைகளில் இனிமை, தைரியம், அறிவுள்ள நடத்தை போன்றவற்றை யாரும் கற்றுத்தர முடியாது. இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இயலபாகவே அவர்களின் நடத்தையில் இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதனின் நடத்தையிலும் இந்த நல்ல பண்புகள் இயற்கையாக இருக்க வேண்டும்.
தவறான பாதையில் செல்லும் ஒருவருக்கு சாணக்கிய நீதியில் பல முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு மனிதன் தனது சமுதாயத்தை விட்டு வெளியேறி மற்றொரு சமுதாயத்தில் சேருபவர், அநீதியின் பாதையில் செல்லும் அரசர் போல அழிவை சந்திப்பார் என்று கூறியுள்ளார்.
யானையின் உடல் மிகவும் பெரியது, ஆனால் அது ஒரு சிறிய மணியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அதே போல், எவ்வளவு பெரிய இருளையும் ஒரு சிறிய விளக்கு விரட்டி விடுகிறது. இது போல மின்னல் மலையை உடைக்கிறது, மின்னல் மலையைப் போல் பெரியதா என்றால் நிச்சயம் இல்லை. ஆற்றலும், வலிமையும்தான் முக்கியமே தவிர அளவு அல்ல.
பேராசை கொண்டவர்கள் உண்மையைப் பேசமாட்டார்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, எப்போதும் வீட்டு வேலைகளில் மட்டுமே ஈடுபடும் ஒரு மனிதன், ஒருபோதும் உலக அறிவைப் பெற முடியாது. பேராசை கொண்ட ஒருவர் எப்போதும் உண்மையைப் பேச முடியாது, அதேசமயம் வேட்டையாடுபவர்கள் ஒருபோதும் தூய்மையான மனதுடன் இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
நூறு முறை குளித்தாலும் மனதின் அழுக்கைக் கழுவ முடியாது
சாணக்கியக் கொள்கையின்படி, நூறு முறை புனித நீரில் நீராடினாலும், உங்கள் மனதின் அழுக்கைக் கழுவ முடியாது. அதே போல் சாராய பானை புனிதமாக இருக்க முடியாது. நீங்கள் அதை புனிதப்படுத்த விரும்பினால், அனைத்து மதுபானங்களையும் நீராவியாக்க வேண்டும்.
ஒரு துன்மார்க்கன் மனதில் எப்போதும் தூய்மையான எண்ணங்கள் இருக்காது, நீங்கள் அப்படிப்பட்டவரிடம் நல்ல குணங்களை எதிர்பார்ப்பது வேப்பிலை இனிப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றதாகும்.



Click it and Unblock the Notifications
