Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி இந்த 5 பழக்கங்கள் உள்ளவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழவே முடியாதாம்... உடனே மாத்திக்கோங்க!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு பிரபலமான தத்துவஞானி. சாணக்கியரின் கொள்கைகள், வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல மக்களைத் தூண்டுவதாக இருந்தது. அவர் இராஜதந்திரம் மற்றும் அரசியலில் நிபுணராகக் கருதப்படுகிறார். அவர் தரும் ஆலோசனைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளலாம். சாணக்கியர் தனது கொள்கைகளில் ஒரு நபரின் வாழ்க்கையை அழிக்கும் சில பழக்கங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐந்து பழக்கவழக்கங்களால் ஒருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் இந்த பழக்கங்களை விட்டுவிட்டால் அல்லது மாற்றினால், அவர் வாழ்க்கையில் பெரிய இழப்புகளைச் சந்திக்க மாட்டார். அந்த பழக்கங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிகமான செலவு
ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார், ஒருவர் தேவைக்கு அதிகமாக பணம் செலவழிக்கக்கூடாது. அதிகமாக செலவு செய்பவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிந்திக்காமல் பணத்தைச் செலவழிக்கும் பழக்கத்தால் ஒருவருக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடு ஏற்படும். அதன் காரணமாக வேறு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணம் இல்லாததால் எப்போதும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும்.
பலவீனத்தை வெளியே சொல்லக்கூடாது
உங்கள் பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். கவலையில் இருக்கும் ஒரு நபர் தனது பலவீனத்தை தனது நண்பர் அல்லது சக ஊழியரிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் மற்றவர்கள் அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால் எதிர்காலத்தில் அவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது
சாணக்க்கியரின் கூற்றுப்படி, பாகுபாடு பார்ப்பவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிப்பவர் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. எப்பொழுதும் அதிகமாக ஆசைப்பட்டு தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறான்.
சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி என்று சாணக்கியர் கூறுகிறார். சோம்பேறிக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். அத்தகைய நபர் எப்போதும் தனது வேலையை நாளை வரை ஒத்திவைப்பார். அதனால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால் எப்போதும் வெற்றி அவரை விட்டு தள்ளிச்சென்று கொண்டே இருக்கும்.
அவசரமாக முடிவெடுத்தல்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, பாதகமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். அவசரமாக அல்லது மனக்கிளர்ச்சியுடன் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.



Click it and Unblock the Notifications












