Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
சாணக்கிய நீதி படி இந்த 4 நபரை அவமதிப்பது உங்கள் வாழ்க்கையில் மன்னிக்க முடியாத பாவமாக இருக்குமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் சாணக்கிய கடந்த காலம் மட்டுமல்ல இப்போதும் மிகவும் பிரபலமான புத்தகமாக உள்ளது. பண்டைய காலங்களில் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களைப் பற்றி சாணக்கியர் விளக்கியுள்ளார். எனவே வாழ்க்கையின் அனைத்து விஷயங்களைப் பற்றியும் சாணக்கியர் தனது கருத்தை சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவவாதி மற்றும் பொருளாதார ஆலோசகராவார்.
மனிதர்களுடனான தொடர்பு எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் அதனை சரியாக வளர்த்துக் கொள்ளவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் மோசமான கர்ம பலன்களைத் தரும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

சாணக்கியரின் கூற்றுப்படி நாம் வாழ்க்கையில் மதிக்க வேண்டிய சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம் ஒருபோதும் அவமரியாதையாக நடந்து கொள்ளக்கூடாது. அவர்கள் யார், அவர்களை ஏன் மதிக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெற்ற தாய்
சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் ஒருபோதும் பெற்ற தாயை அவமதிக்கக் கூடாது மற்றும் அவர்களுக்கு எதிராக பேசக்கூடாது. அவர்கள் சொல்வதையும், சொல்லாமலே சொல்ல நினைப்பதையும் அறிந்து கொண்டு அவற்றை மரியாதையுடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால், நமக்கு பேசக் கற்றுக் கொடுப்பதே நம் தாய்தான்.
எனவே உங்கள் வார்த்தைகளால் அவர்களை ஒருபோதும் காயப்படுத்தக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அதுமட்டுமல்ல, ஒருமுறை நாக்கிலிருந்து வார்த்தைகள் வெளிவந்துவிட்டால் அவற்றை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. இப்படிப் பேசுவது தெரிந்தே பாவம் செய்வது போன்றது என்கிறார் சாணக்கியர்.
தந்தை
அம்மாவைப் போலவே அப்பாவிடமும் எந்தச் சூழ்நிலையிலும் தவறாக பேசவோ அல்லது அவமதிக்கவோக் கூடாது. இந்த தவறைச் செய்தால் உங்கள் வாழ்வில் அதிக பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அவர்களின் இதயத்தில் ஏற்படும் வலி உங்களுக்கு பெரிய பின்னடைவாக மாறும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். எனவே அவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது. மேலும் இது உங்களுக்கு மீள முடியாத சாபங்களைப் பெற்றுத்தரும்.
ஆசிரியர்
ஆசிரியர் பதவி தாய் தந்தைக்கு சமம் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே, அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில், நீங்கள் அவர்களை அவமதிப்பது உங்கள் வாழ்க்கையில் சவால்களை உருவாக்குகிறது. எனவே ஆசிரியரிடம் பேசும்போது வார்த்தையை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், வாழ்க்கை மேலும் சபிக்கப்பட்டதாக மாறும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
வயதில் மூத்தவர்கள்
வயதில் மூத்தவர்களை அவமரியாதையாக நடத்துவது மிகவும் தவறான காரியமாகும். ஏனெனில் இது அவர்களின் சாபத்தால் உங்கள் வாழ்க்கையில் கெட்ட சம்பவங்கள் நடக்க காரணமாக இருக்கும். இதன் மூலம், ஒருவரின் குணாதிசயங்களையும், வாழ்க்கையையும் வடிவமைப்பதில் கல்வியும் பெற்றோரும் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள் என்று சாணக்கியர் உணர்த்துகிறார். நமது தனிப்பட்ட மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு நமது தாய், தந்தை மற்றும் குருவின் பங்களிப்பை ஒருபோதும் மறக்கக் கூடாது.



Click it and Unblock the Notifications












