Latest Updates
-
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது?
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருக்கும் பெண்கள் உலகின் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் நீதி சாஸ்திரம் திருமண வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களை விளக்குகிறது. ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கையை விரும்பினால், அவர்கள் சாணக்கியரின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கையை நடத்துவதற்கு ஒருவர் கொண்டிருக்க வேண்டிய சில குணங்களைப் பற்றி சாணக்கியர் விளக்கியுள்ளார். இந்த குணங்கள் ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்தால், அவர்கள் நல்ல திருமண வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கணவருக்கு இருக்க வேண்டிய குணங்களையும், மனைவிக்கு இருக்க வேண்டிய குணங்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த குணங்கள் இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை சொர்க்கம் போல் இருக்கும் என்கிறார் சாணக்கியர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மனைவியிடம் இருக்க வேண்டிய குணங்கள்
மனைவிக்கு இருக்க வேண்டிய சில குணங்களைப் பற்றி சாணக்கியர் குறிப்பிடுகிறார். அதில் முதலில் கூறப்படுவது, மனைவி விசுவாசம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதுதான். சாணக்கியர் அவர்களின் விசுவாசம் அவர்களின் குடும்பத்தை பாதுகாக்கும் என்றும் கூறுகிறார். இந்த குணமுள்ள பெண்கள் பெரும்பாலும் நல்லது கெட்டதை வேறுபடுத்திப் பார்ப்பது எளிது. எனவே விசுவாசம் கொண்டவர்களாக மாறினால் அவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்லும் என்கிறார் சாணக்கியர்.
இனிமையான பேச்சு
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் இனிமையாகப் பேசும் பெண்ணுக்கு வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை அமையும். அத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால், அவர்களின் குடும்பம் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டிருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும்.
பாதுகாக்கக் கூடியவர்கள்
உங்கள் குடும்பத்தை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாக்கும் திறன் கொண்டவராக நீங்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பதை இது குறிக்கிறது. கணவன் அல்லது குடும்பம் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் போது அவர்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையையும் மிக விரைவாக சமாளிக்கும் ஒரு பெண் இருந்தால் அவர்களின் திருமணம் வெற்றிகரமாக அமையும்.
கணவரிடம் இருக்க வேண்டிய குணங்கள்
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கணவன் கொண்டிருக்க வேண்டிய குணங்களைப் பற்றியும் பேசுகிறார். எந்தவொரு பெண்ணும் குறைவான சம்பாத்தியம் இருந்தாலும் திருப்தியடைந்து தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் ஆணைத்தான் விரும்புகிறார்கள். தங்கள் கணவரிடம் இந்த குணங்கள் இருந்தால் அவர்களின் திருமணம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று பெண்கள் நினைக்கிறார்கள்.
நேர்மையான ஆண்கள்
ஒரு ஆண் எப்போதும் தன் குடும்பத்திற்கும், மனைவிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆண்கள் ஒருபோதும் தங்கள் மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது. வேறொரு பெண்ணுடன் உறவைத் தொடங்கினால் அவர்களின் குடும்பம் நிலை குலையும் எனறு சாணக்கியர் கூறுகிறார்.
பொறுப்பானவர்கள்
ஒரு ஆண் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்ற எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதைப்பற்றிய விழிப்புடன் இருப்பது முக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் தன் குடும்பத்தை மறந்து தன் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றாவிட்டால் அவர்கள் குடும்பத்தின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
உடலுறவில் திருப்தி
கணவன் மனைவி உறவில் உடலுறவு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, ஒரு நல்ல ஆண் உடலுறவில் தன் மனைவியின் விருப்பப்படி நடக்கிறவராக இருக்க வேண்டும். சாணக்கியர் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கணவன் மனைவிக்கு இந்த குணங்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications












