Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
சாணக்கிய நீதி படி எவ்வளவு பலம் வாய்ந்த எதிரியையும் வீழ்த்த இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுனா போதுமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் சாணக்கிய நீதி இன்றும் பிரபலமான நூலாக இருக்கிறது, மேலும் நமது கலாச்சாரத்தில் சாணக்கிய நீதிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சாணக்கியர் இந்தியாவின் சிறந்த வழிகாட்டி மற்றும் அறிஞர் என்பதை நாம் அறிவோம். சாணக்கியர் வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றித் தனது சாணக்கிய நீதியில் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையில் ஒருவர் வெற்றிபெற அவர்களின் எதிரிகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம் என்று சாணக்கிய நினைவூட்டுகிறார். அதேசமயம் பலமான எதிரியை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான உத்திகளையும் சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எதிரியை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்
ஒருவர் உங்களுக்கு எதிரியாக மாறிவிட்டார் என்று நீங்கள் உணர்ந்தால், அவர்களை வெல்வதற்கான முதல் படி அவர்களை விரிவாகப் புரிந்துகொள்வதாகும். அவர்களின் திறன்கள், பலங்கள், பலவீனங்கள், திட்டங்கள் மற்றும் இலக்குகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சேகரிக்கத் தொடங்க வேண்டும்.
எப்போதும் தயாராக இருக்க வேண்டும்
எதிரியை நேரடியாக எதிர்க்கும் முன் நாம் அதற்கு தயாராக வேண்டும். எதிரியை எதிர்கொள்ள நாம் அனைத்து விதத்திலும் தயாராக இருக்க வேண்டும். அதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் . அவர்களை வீழ்த்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரியான நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்
அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டாலும், நீங்கள் உடனடியாக எதிரியை தாக்கத் தொடங்கக்கூடாது. சிறந்த வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். பொறுமையே சிறந்த முடிவுகளையும், வெற்றியையும் தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிரிகளை வீழ்த்துவதற்கான சரியான நேரத்தை உங்களால் கணிக்க முடிந்தால் உடனடியாக செயல்பட வேண்டும்.
பிரித்தாளும் சூழ்ச்சியை முயற்சிக்கவும்
எதிரியின் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ அல்லது பலசாலிகளோ இருந்தால், அவர்கள் அனைவரையும் ஒன்றாக வீழ்த்தலாம் என்று ஒருபோது முட்டாள்தனமாக நினைக்காதீர்கள். அதற்கு பதிலாக அவர்களின் கூட்டணியை உடைக்க முயற்சிக்கவும். அவர்களின் ஒற்றுமையை உடைக்க முடிந்தால், வெற்றிப் பெறுவது எளிதாக இருக்கும்.
தந்திரங்கள்
எதிரிகளை கையாளும் போது அவர்களை வீழ்த்த வியூகம் மிகவும் முக்கியமானது. உங்கள் எதிரிகளை குழப்பவும் மற்றும் உங்களின் அடுத்த நகர்வு என்னவென்று கணிக்க முடியாதபடி அவர்களை தவறாக வழிநடத்தவும். உங்களின் பலத்தைப் பற்றிய தவறான தகவல்கள் அவர்களை சென்றடைவது உங்களின் வெற்றியை எளிதாக்கும்.
பலமான கூட்டணியை உருவாக்கவும்
திறமையான நபர்களுடனும், பலம் வாய்ந்த நபர்களுடனும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவும். எதிரிகளை தனியாக வீழ்த்துவதை விட கூட்டணியுடன் சேர்த்து வீழ்த்துவது எளிதாகும். இத்தகைய கூட்டணிகள் எதிரியை எளிதாக வெல்ல உதவுகின்றன.



Click it and Unblock the Notifications
