Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி எவ்வளவு பலம் வாய்ந்த எதிரியையும் வீழ்த்த இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுனா போதுமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் சாணக்கிய நீதி இன்றும் பிரபலமான நூலாக இருக்கிறது, மேலும் நமது கலாச்சாரத்தில் சாணக்கிய நீதிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சாணக்கியர் இந்தியாவின் சிறந்த வழிகாட்டி மற்றும் அறிஞர் என்பதை நாம் அறிவோம். சாணக்கியர் வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றித் தனது சாணக்கிய நீதியில் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையில் ஒருவர் வெற்றிபெற அவர்களின் எதிரிகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம் என்று சாணக்கிய நினைவூட்டுகிறார். அதேசமயம் பலமான எதிரியை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான உத்திகளையும் சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எதிரியை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்
ஒருவர் உங்களுக்கு எதிரியாக மாறிவிட்டார் என்று நீங்கள் உணர்ந்தால், அவர்களை வெல்வதற்கான முதல் படி அவர்களை விரிவாகப் புரிந்துகொள்வதாகும். அவர்களின் திறன்கள், பலங்கள், பலவீனங்கள், திட்டங்கள் மற்றும் இலக்குகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சேகரிக்கத் தொடங்க வேண்டும்.
எப்போதும் தயாராக இருக்க வேண்டும்
எதிரியை நேரடியாக எதிர்க்கும் முன் நாம் அதற்கு தயாராக வேண்டும். எதிரியை எதிர்கொள்ள நாம் அனைத்து விதத்திலும் தயாராக இருக்க வேண்டும். அதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் . அவர்களை வீழ்த்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரியான நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்
அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டாலும், நீங்கள் உடனடியாக எதிரியை தாக்கத் தொடங்கக்கூடாது. சிறந்த வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். பொறுமையே சிறந்த முடிவுகளையும், வெற்றியையும் தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிரிகளை வீழ்த்துவதற்கான சரியான நேரத்தை உங்களால் கணிக்க முடிந்தால் உடனடியாக செயல்பட வேண்டும்.
பிரித்தாளும் சூழ்ச்சியை முயற்சிக்கவும்
எதிரியின் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ அல்லது பலசாலிகளோ இருந்தால், அவர்கள் அனைவரையும் ஒன்றாக வீழ்த்தலாம் என்று ஒருபோது முட்டாள்தனமாக நினைக்காதீர்கள். அதற்கு பதிலாக அவர்களின் கூட்டணியை உடைக்க முயற்சிக்கவும். அவர்களின் ஒற்றுமையை உடைக்க முடிந்தால், வெற்றிப் பெறுவது எளிதாக இருக்கும்.
தந்திரங்கள்
எதிரிகளை கையாளும் போது அவர்களை வீழ்த்த வியூகம் மிகவும் முக்கியமானது. உங்கள் எதிரிகளை குழப்பவும் மற்றும் உங்களின் அடுத்த நகர்வு என்னவென்று கணிக்க முடியாதபடி அவர்களை தவறாக வழிநடத்தவும். உங்களின் பலத்தைப் பற்றிய தவறான தகவல்கள் அவர்களை சென்றடைவது உங்களின் வெற்றியை எளிதாக்கும்.
பலமான கூட்டணியை உருவாக்கவும்
திறமையான நபர்களுடனும், பலம் வாய்ந்த நபர்களுடனும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவும். எதிரிகளை தனியாக வீழ்த்துவதை விட கூட்டணியுடன் சேர்த்து வீழ்த்துவது எளிதாகும். இத்தகைய கூட்டணிகள் எதிரியை எளிதாக வெல்ல உதவுகின்றன.



Click it and Unblock the Notifications












