1 வருடம் கழித்து மீனத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!

Budhaditya Rajyoga In Pisces On March 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மார்ச் 07 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

Budhaditya Rajyoga In Pisces On March 2024 These Zodiac Signs Will Be Lucky In Tamil

இந்த சேர்க்கையானது சுமார் 1 வருடத்திற்கு பின் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதோடு சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் உயரவுள்ளது. இப்போது புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் பணத்தைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வங்கி இருப்பு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். உறவுகளைப் பொறுத்தவரை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கூட்டு தொழில் செய்து வந்தால், நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, March 12, 2024, 23:21 [IST]
Desktop Bottom Promotion