Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒடிஷா ரயில் விபத்து: இந்தியா இதுவரை சந்தித்த நெஞ்சை பதைபதைக்க வைத்த கொடூர ரயில் விபத்துகள்...!
நேற்று இரவு முதல் ஒட்டுமொத்த இந்தியாவின் தூக்கத்தையும் பாதித்துள்ள விஷயம் என்னவெனில் அது பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் மோதிக்கொண்டு ஏற்பட்டுள்ள கோர விபத்துதான்.
இதுவரை இந்தியாவில் நடந்த மிகவும் கோரமான விபத்துக்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த மோசமான விபத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மேலும் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை நடந்துள்ள சில மோசமான இரயில் விபத்துக்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நவம்பர் 1956
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய இந்த ரயில் விபத்து 1956 நவம்பர் 23ஆம் தேதி அரியலூரில் நடந்தது. இந்த கொடூரமான விபத்தில் 142 பயணிகள் இறந்தனர், 110 பேர் காயமடைந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர்.
ஜூன் 1981
இந்தியா தனது மோசமான ரயில் விபத்தை ஜூன் 6, 1981 அன்று சந்தித்தது. பீகாரில் ஆற்றுப் பாலத்தை கடக்கும் போது ரயில் பாகமதி ஆற்றில் விழுந்து இதயத்தை உருக்கும் கோர விபத்து நடந்தது. ரயிலின் கடைசி 7 பெட்டிகள் ஆற்றில் மூழ்கியதில் 750-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
ஜூலை 1988
தென்னிந்தியாவில் குயிலான் அருகே பருவமழையால் எக்ஸ்பிரஸ் ரயில் ஏரியில் விழுந்ததில் 106 பேர் கொல்லப்பட்டனர். 1988 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கேரளாவில் உள்ள அஷ்டமுடி ஏரியின் மீதுள்ள பெருமான் பாலத்தில் ரயில் தடம் புரண்டு ரயிலின் 10 பெட்டிகள் தண்ணீரில் விழுந்ததில் பெருமான் ரயில் விபத்து ஏற்பட்டது.
ஆகஸ்ட் 1995
டெல்லியில் இருந்து 200 கிமீ தொலைவில் இரண்டு ரயில்கள் மோதியதில் கிட்டத்தட்ட 350 பேர் உயிரிழந்தனர். ஃபிரோசாபாத் ரயில் விபத்து ஆகஸ்ட் 20, 1995 அன்று, 02:55 மணிக்கு நீலகாயில் மோதி நின்ற ரயிலின் மீது பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
ஆகஸ்ட் 1999
கொல்கத்தா அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் 285 பேர் இறந்தனர். மேற்கு வங்கத்தில் உள்ள கெய்சல் என்ற தொலைதூர ரயில் நிலையத்தில் சுமார் 2,500 பேருடன் சென்ற ரயில்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிக்னல் பிழையால் இது நடந்தது. நான்கு வழித்தடங்களில் மூன்று தண்டவாளங்கள் பராமரிப்புக்காக மூடப்பட்டிருந்தன, இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் சென்று கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
அக்டோபர் 2005
தெற்கு ஆந்திரப் பிரதேச மாநிலம், வெலுகொண்டா அருகே பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. அக்டோபர் 29, 2005 அன்று நடந்த இந்த விபத்தில் 77 பேர் இறந்தனர்.
ஜூலை 2011
ஃபதேபூரில் அஞ்சல் ரயில் தடம் புரண்டதில் 70 பேர் இறந்தனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர். ஜூலை 10, 2011 அன்று மதியம் 12:20 மணிக்கு ஹவுரா-கல்கா மெயிலின் 15 பெட்டிகள் மால்வான் அருகே தடம் புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது.
மே 2012
மே 22, 2012 அன்று, ஹம்பி எக்ஸ்பிரஸ் விபத்தில், ஒரு சரக்கு ரயிலும், ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸும் ஆந்திராவுக்கு அருகில் மோதிக்கொண்டன. ரயில் தடம் புரண்டதில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 43 பேர் காயமடைந்தனர்.
மே 2014
மே 26 அன்று, உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில், கோரக்பூர் நோக்கிச் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நவம்பர் 2016
உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 146 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நவம்பர் 20, 2016 அன்று, இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் 19321 அதிகாலை 3.10 மணியளவில் கான்பூரின் புக்ராயன் அருகே தடம் புரண்டது மற்றும் சுமார் பதினான்கு பெட்டிகள் தடம் புரண்டன.
ஆகஸ்ட் 2017
ஆகஸ்ட் 19 அன்று, பூரி-ஹரித்வார் உத்கல் எக்ஸ்பிரஸ் முசாபர்நகரில் தடம் புரண்டதில் 23 பேர் இறந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கட்டவுலி அருகே மாலை 5:45 மணியளவில் ரயிலின் 23 பெட்டிகளில் 14 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் பூரியில் இருந்து ஹரித்வார் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 2017
பூரி ரயில் விபத்து நடந்த அடுத்த நான்கு நாட்களில் மீண்டும் இந்த விபத்து நடந்தது. ஆகஸ்ட் 23, 2017 அன்று, உத்தரப் பிரதேசத்தின் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்தனர். ரயில் பாதையில் டிப்பர் டிரக் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது, இதனால் கைஃபியாத் எக்ஸ்பிரஸின் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.



Click it and Unblock the Notifications














