வீட்டில் செல்வம் கொழிக்க இந்த விளக்கை ஏற்றுங்கள்..!

பொதுவாக வீட்டில் தினமும் விளக்கு ஏற்றுவது வழக்கம். அதிலும் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அதுபோல பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ப்பார்கள் நமது முன்னோர்கள்.. அது என்ன பஞ்சகவ்ய விளக்கு? அது எப்படி செய்யபப்டுகிறது? அந்த தீபத்தை ஏற்றும் முறை என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

பஞ்சகவ்ய விளக்கு என்பது சாணம், பால், தயிர், கோமியம், நெய் என இந்த ஐந்து பொருட்களால் செய்யப்படும் விளக்காகும்.. இது ஹோமம் செய்வதற்கு இணையான பலன்களை கொடுக்கக்கூடியது.. இதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும். பஞ்சகவ்ய விளக்கிலிருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவ செய்து வீட்டில் இருக்கும் எல்லா எதிர்மறை ஆற்றல்களையும் வெளியேற்றி பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும்.

benefits of worship the panjakavya vilakku

பஞ்சகவ்ய விளக்கேற்றும் முறை

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழையிலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்கவும். பின்பு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். சாதாரணமாகவே நெய் ஊற்றி, தாமரை தண்டு திரியில் விளக்கேற்றுவது செல்வத்தை பெருக்கும் என்பது ஐதீகம். பஞ்சகவ்ய விளக்கில் விளக்கின் திரி எரிந்த பின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். இந்த திருநீறை பூசிக் கொள்வதால் நன்மைகள் ஏற்படும்.

எப்போது ஏற்ற வேண்டும்?

பஞ்சகவ்ய விளக்கை கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் கோ பூஜை மற்றும் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கும், ஹோமம் நடத்துவதற்கும் சமமாக கருதப்படுகிறது. குறிப்பாக வாரவாரம் வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்றினால் நல்லது..

பலன்கள்

பஞ்சகவ்ய விளக்கு பூஜை முறை வீட்டில் மன நிம்மதியை சந்தோஷத்தை சுபீட்சத்தை லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமே கிடையாது. இந்த பஞ்ச காவ்ய விளக்கு எரிந்து முடிந்த சாம்பல் இருக்கும். அந்த சாம்பலை டப்பாவில் போட்டு தினமும் நெற்றியில் விபூதி போல பூசிக் கொண்டாலும் நமக்கு நிறைய நல்லது நடக்கும். ஏதோ ஒரு பண கஷ்டம். கடன் வாங்க போறீங்க. அல்லது கடன் கொடுக்க போறீங்க. அந்தப் பண பரிவர்த்தனை சரியாக நடக்க வேண்டும் என்றாலும் இந்த சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு போங்க. மகாலட்சுமி உங்களுடன் துணையாக வருவாள். குடும்பத்தில் நல்லதே நடக்கும். வருமானம் பெருகும்..

Story first published: Monday, May 13, 2024, 12:17 [IST]
Desktop Bottom Promotion