Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
பாபா வாங்கா கணிப்பு படி இந்த நோய் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...!
Baba Vanga's Shocking Prediction: தொழில்நுட்பம் நாள்தோறும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேகமான உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இது நவீன அல்லது மேம்பட்ட யுகம் என்று அழைக்கப்படுகிறது. நாம் காலையில் எழும் நொடி முதல், தூங்கச் செல்லும் இறுதி நொடி வரை, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் சூழப்பட்ட ஒரு உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாகனங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் Virtual உதவியாளர்கள் என நம்முடைய ஒவ்வொரு நாளையும் தொழில்நுட்ப உதவியுடன்தான் நாம் நகர்த்துகிறோம். சொல்லப்போனால், நாம் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் நேரத்தை விட இயந்திரங்களுடன் தொடர்பு கொள்ளும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

அறிவியலின் முன்னேற்றம் மனிதர்களுக்கும், இயந்திரத்திற்கும் இடையே உள்ள இடைவெளிகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நாம் எப்படி வாழ்கிறோம், எப்படி வேலை செய்கிறோம், தொடர்பு கொள்கிறோம் மற்றும் புதிய நண்பர்களை உருவாக்குகிறோம் என்பதில் பெரிய மாற்றங்கள் உருவாகி உள்ளது. இதில் நன்மைகள், தீமைகள் இரண்டுமே உண்டு.
பாபா வாங்காவின் பயமுறுத்தும் கணிப்பு
அறிவியலின் முன்னேற்றம் மக்களின் வாழ்க்கையில் தலையிடுவதற்கான முதன்மையான உதாரணம் ஸ்மார்ட்போன். இது உண்மையான உலகத்திலிருந்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக தூரமாக நகர்த்தி செல்கிறது, மேலும் பெரும்பாலான மக்கள் இந்த மாற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை. மக்கள் மனதில் உள்ள சுமையை குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன், இப்போது போதைப்பொருள் போல மாற்றமடைந்து மக்கள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவும் இதைப் பற்றி எச்சரித்தார். ஒரு சிறிய, ஆனால் சக்திவாய்ந்த சாதனம் மனித நடத்தை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று பாபா வாங்கா கணித்தார். அந்த நேரத்தில், அவர் இதைச் சொன்னது விசித்திரமாக இருந்தது. இப்போது, அவரது கணிப்பு முற்றிலும் துல்லியமாக பலித்துள்ளதற்கு நாமே சாட்சி.
ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் பாதிப்பு
National Commission for Protection of Child Rights (NCPCR) அறிக்கையின்படி, இந்தியாவில் 24% குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த தொடர்ச்சியான திரை நேர அதிகரிப்பு குழந்தைகளிடையே பதட்டம், மனச்சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் பிரச்சினைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. அவர்கள் நிஜ உலகலிருந்து விலகி டிஜிட்டல் உலகில் மூழ்கி கிடக்கிறார்கள். குழந்தைகளை விட பெரியவர்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாக மாறிவருகின்றனர். மொபைல் போன்களால் நீண்ட நேரமாக விழித்திருப்பது அல்லது தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது கண் சோர்வு, கழுத்து வலி மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
நீண்ட நேரம் மொபைல் திரையில் நேரத்தைச் செலவிடுவது கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். நீண்ட நேரம் தொலைபேசியைப் பார்ப்பது "டெக்ஸ்ட் நெக்" என்று அழைக்கப்படும் குறைபாட்டை ஏற்படுத்தும், இது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்மார்ட்போன் எப்படி பாதிக்கிறது?
திரைகளில் இருந்து வரும் நீல ஒளி மெலடோனின் ஹார்மோனை பாதிக்கிறது, இது தூக்க முறைகளைப் பாதிக்கிறது மற்றும் தூங்குவதை கடினமாக்குகிறது. இது பொதுவாக மனநோயாக வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிக அளவு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுடன் தொடர்புடையது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுடன் தொடர்புடையது. ஸ்மார்ட்போன்களால் பல நன்மைகள் இருந்தாலும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் புறக்கணிக்க முடியாதது.
பாபா வாங்கா 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான தீர்க்கதரிசிகளில் ஒருவராக கருதப்படுகிறார். பாபா வாங்காவின் கணிப்புகள் இன்றும் கோடிக்கணக்கான மக்களால் வியக்கத்தக்க வகையில் துல்லியமானதாகக் கருதப்படுகின்றன.



Click it and Unblock the Notifications
