பாபா வங்கா கணிப்புகள் படி வரப்போகிற 100 ஆண்டுகளில் உலகில் என்னென்ன பேரழிவுகள் நடக்கப்போகிறது தெரியுமா?

உலக வரலாற்றில் பலர் தங்களின் எதிர்காலத்தை கணிக்கும் திறனால் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பாபா வாங்கா. "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் பாபா வாங்கா 1996 இல் இறந்துவிட்டார் என்றாலும், அவரது பல கணிப்புகள் தொடர்ந்து பலிப்பதன் மூலம் அவரது கணிப்புகள் தொடர்ந்து உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.

பாபா வாங்காவின் சீடர்கள், இயற்கை பேரழிவுகள் முதல் அரசியல் எழுச்சிகள் வரை நவீன வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சில நிகழ்வுகளை அவர் முன்னறிவித்ததாகக் கூறுகின்றனர். அவரது சில எதிர்கால கணிப்புகள் வியக்கத்தக்கவை மற்றும் நம்ப முடியாதவை. அவர் கடந்த நூற்றாண்டு முதல் வரப்போகிற பல நூற்றாண்டுகள் வரை நடக்கப்போவதாக பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துள்ளார். வரவிருக்கும் நூற்றாண்டுகளுக்கான பாபா வாங்காவின் மிகவும் திகைப்பூட்டும் தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Baba Vanga s Deadly Predictions For Coming Centuries

2025-ல் ஐரோப்பா சுருங்கும்

பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா முழுவதும் கணிசமான மக்கள்தொகை சரிவு ஏற்படும் என்று கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது கணிப்பில் இந்த பேரழிவுக்கான சரியான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது பல வழிகளில் ஏற்படலாம், பொருளாதார வீழ்ச்சிகள், மக்களின் இடம்பெயர்வு அல்லது எதிர்பாராத ஆரோக்கிய பிரச்சினைகள் அல்லது சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் இந்த அழிவு ஏற்படலாம்.

2028-ல் உலகின் உணவு பிரச்சினை முடிவுக்கு வரும்

ஆச்சரியப்படும் வகையில், 2028 ஆம் ஆண்டுக்குள் உலகில் பசி இறுதியாக ஒழிக்கப்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இது உணவு தொழில்நுட்பம், நிலையான விவசாயம் அல்லது உலகளாவிய அரசியல் ஒத்துழைப்பில் பெரிய முன்னேற்றங்களால் இது ஏற்படலாம். இதன்மூலம் மனிதகுலத்தின் வரலாற்றில் பெரும் மைல்கல்லை எட்டும் என்று கூறப்படுகிறது, அது மட்டுமின்றி வீனஸுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் பயணம் வெற்றிகரமாக தொடங்கப்படும் என்று கணித்துள்ளார்.

2046-ல் செயற்கை மனித உறுப்புகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்

பாபா வாங்காவின் கூற்றுப்படி, 2046 ஆம் ஆண்டுக்குள், அறிவியலும் மருத்துவமும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை உறுப்புகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை பெருமளவில் உற்பத்தி செய்வதில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படலாம். இது மனிதர்களின் ஆயுளை அதிகரிப்பது, சில நோய்களை ஒழித்தல் மற்றும் உலகளவில் மருத்துவ சிகிச்சையில் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

2066-ல் ஒரு புது ஆயுதம் உருவாக்கப்படலாம்

2066 ஆம் ஆண்டளவில், அமெரிக்கா இதுவரை இல்லாத ஒரு போர் வடிவத்தைஆயுதத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது, அது சுற்றுச்சூழலைக் கையாள அல்லது அழிக்கக் கூடிய ஒரு ஆயுதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கங்கள் இராணுவ சக்தி மற்றும் சுற்றுச்சூழல் மீதான கவலைகளை அதிகரித்துள்ளன.

2088-ல் வயதாவதை விரைவுபடுத்தும் ஒரு கொடிய வைரஸ்

பாபா வாங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று 2088 இல் ஒரு மர்மமான வைரஸ் வெளிப்படக்கூடும் என்பதாகும். இந்த வைரஸ் மக்களுக்கு வயதாவதை விரைவுபடுத்தும், இதனால் மக்களின் ஆயுட்காலத்தில் விரைவான சரிவு ஏற்படலாம். இது ஹாலிவுட் படங்களில் வரும் வினோதக் கதை போல தோன்றினாலும், இது தொற்றுநோய்கள் மற்றும் எதிர்காலத்தில் புதிய ஆரோக்கிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மனிதகுலத்தின் தயார்நிலை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

2111-ல் ரோபோக்கள் உலகில் ஆதிக்கம் செலுத்தும்

22 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாபா வாங்கா, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என்று கணித்துள்ளார். AI மற்றும் ரோபாட்டிக்ஸ் இன்று ஏற்கனவே தொழில்நுட்பம் இப்போது நம்மை ஆட்சி செய்ய தொடங்கியிருக்கும் நிலையில், ரோபோ நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதர்களை கட்டுப்படுத்தும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார், இது பூமியில் மனிதர்களின் எதிர்காலம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, July 17, 2025, 12:40 [IST]
Desktop Bottom Promotion