Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
ஏன் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படுகிறது? ஏன் அந்த நாள் அவ்வளவு விசேஷமான நாள்?
Ayodhya Ram Mandir: கோயில் என்றாலே அது புனித தலமாகும். அந்த வகையில் ராமர் கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தற்போது கட்டப்பட்டு உள்ளது. இந்த ராமர் கோயிலுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. பிரான் பிரதிஷ்டை என்பது ஒரு சிலையை தெய்வமாக மாற்றும் செயலாகும். சரி, இதற்கு ஏன் ஜனவரி 22 ஆம் தேதியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பது தெரியுமா?
எந்தவொரு சுப நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றாலும் இந்து சமூகத்தை பொறுத்தவரை நல்ல நாட்கள் பார்த்து செய்வார்கள். இந்து மரபுகளில் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்து நாட்காட்டி படியும், பஞ்சாங்கத்தின்படியும் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 22 ஆம் தேதி மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாள் குறித்து மேலும் பல விவரங்களை கீழே அறிந்து கொள்வோம்.

ஜனவரி 22 ஆம் தேதி ஏன் சிறப்பான நாள்?
வாரணாசியில் உள்ள ஜோதிடரும் துறவியுமான பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி ஜனவரி 22 ஆம் நாள் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். ஜனவரி 22 ஆம் தேதி என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு " சிறந்த மஹீராத்" என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு வரை இத்தகைய மங்களகரமான நாள் கிடைக்காது என்று கூறியுள்ளார்.
கும்பாபிஷேகம் நெருங்கி வருவதால் தற்போது கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்குப் பிறகு வாராணசியைச் சேர்ந்த புகழ்பெற்ற அர்ச்சகர்கள் ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையின் நான்கு அறங்காவலர்களுடன் சேர்ந்து பிரான் பிரதிஷ்டையை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
இந்த பிரான் பிரதிஷ்டை என்பது கோயிலில் மிக முக்கியமான விழாவாகும். பிரான் பிரதிஷ்டை என்பது ஒரு சிலையை உயிர்ப்பிக்கும் விழாவாகும். அதற்கு பின் கடவுள் அந்த சிலையில் வசிக்க தொடங்குவார். இந்த நேரத்தில் வெறும் கல் ஒரு கடவுளாக மாறுகிறது. இப்பொழுது ஸ்ரீ ராமர் கருவறையில் ஆட்கொண்ட பிறகு அவர் மக்களுக்கு ஆசிகளை வழங்குவார். எனவே இந்த ஆத்மார்த்தமான சடங்கு மஹூரத்தின் போது செய்வது மிகவும் நல்லது.
ஜனவரி 22 ஆம் தேதியின் சிறப்பம்சங்கள்:
பகவான் ராமர் 'அபிஜீத் மஹுரத்தில்' பிறந்தார், எனவே பிரான் பிரதிஷ்டையை அதே வழியில் நடத்தினால் மிகவும் நல்லது. ஜனவரி 22 அன்று, மதியம் 12.30 மணியளவில் 84-வினாடிகள் 'அபிஜீத் மஹுரத்' வருகிறது. எனவே அந்த சமயத்தில் பிரான் பிரதிஷ்டை செய்வது ராமர் சிலையை உயிர்த்தெழ வைக்கும் என்பது ஆன்றோர்களின் கருத்து.
இதைத் தவிர்த்து இந்த நாளில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. பஞ்சாங்கத்தின்படி இந்நாளில் மிருகசீரிஷம் நட்சத்திரம், அமிர்த சித்தி யோகம், சர்வத சித்தி யோகம், ரவி யோகம் மற்றும் வியாழன் (குரு, கற்றல் மற்றும் ஞானத்தின் கிரகம்) சரியான நிலையில் இருக்கும் நாள் போன்ற ஒட்டுமொத்த அம்சங்கள் ஒரே நாளில் வருகின்றன.
இது குறித்து பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி கூறுகையில், 2026 ஆம் ஆண்டு வரை இது போன்ற மங்களகரமான மஹீராத் வராது. எனவே ஜனவரி 22 ஆம் தேதியின் சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
ராமர் கோயில் இன்னும் முழுமையடையவில்லையா?
தற்போது வரை கோயிலின் முதல் தளம் மட்டுமே முழுமையடைந்து உள்ளது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் கோவில் முழுவதும் தயாராகி விடும். கோயில் முழுமையடைவதற்குள் பிரான் பிரதிஷ்டை செய்யலாமா? ஒரு கோயிலுக்கு பிரான் பிரதிஷ்டை பண்ணும் போது கோயில் முழுமையடைந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பகிரகம், முழுமையான கதவுகள், சுவர்கள் மற்றும் கூரைகள் போன்றவை முழுமையாக தயாராகி விடும். ஒரு சிலை செய்த உடனேயே பிரான் பிரதிஷ்டையை செய்யலாம் என்றும், கோவில் கட்டி முடித்தவுடன் கலச பிரதிஷ்டையை பிற்காலத்தில் செய்யலாம் என பல மகான்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே ஜனவரி 22 ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதே மாதிரி ஒரு இடத்தை புனிதமாக்க இந்து நம்பிக்கையின் படி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்து நம்பிக்கையின் படி, ராம ஜென்மபூமி பல நூற்றாண்டுகளாக புனிதமாக கருதப்பட்டு வருகிறது.
எனவே வருகிற ஜனவரி 22 ஆம் தேதியில் ராம லல்லாவின் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதன் மூலம் புனிதமான ராமர் சிலைக்கு உயிர்ப்பூட்ட முடியும் என்று பல மகான்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.



Click it and Unblock the Notifications











