Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
அயோத்தி ராமர் கோயில் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
Ayodhya Ram Mandir: இந்தியாவில் உள்ள அயோத்தி ராமர் கோயில் பல வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயில் இந்துக் கடவுளான ராமரின் பிறப்பு இடமாகவும், மத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமரின் சிறப்பை இந்த உலகிற்கே பறைசாற்றும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகமானது வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகரம் கெளதம புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற சமண மற்றும் பெளத்த நியதி நூல்களுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் வருங்காலத்தில் இந்த கோயில் இந்துக்களின் புனித யாத்திரை தலமாக சிறப்பு பெற்று நிற்கும் என்பதில் ஐயமில்லை. இது நம் மத மற்றும் கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாக நிற்கிறது. இந்த கோயிலின் கூடுதல் சிறப்பம்சங்களை பற்றி இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்வோம்.
அயோத்தியின் வரலாற்று பரிமாணம்:
அயோத்தியின் வரலாற்றுப் பரிணாமம் அதன் பழங்காலப் பெயரான சாகேதாவுடன் பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகளின் படி, கி.மு. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டின் அடிப்படையாக இந்த கோயில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த அழகான அயோத்தி கோயில் வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சராயு நதிக்கரையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் இந்த அயோத்தி கோயில் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் மையப் புள்ளியாக இருந்து, யாத்ரீகர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் புகலிடமாக அமைகிறது.
இந்திய சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவரும் விதத்தில் இந்த கோயில் உள்ளது. இது எதிர்காலத்தில் நம்முடைய மிகப்பெரிய வரலாற்று சின்னமாக திகழும் என்பதில் ஐயமில்லை. கோயிலின் பிரமாண்டமும் அதன் வரலாற்று புராணங்களும் காண்போரை வெகுவாக கவரக்கூடியது.
ஆழமாக பதிந்த ராம காவியம்
இந்து புராணங்களின் படி, ராமாயண காவியத்தின் ஆழமான பொக்கிஷம் இந்த கோயில் எனலாம். ராமரின் சிறப்பம்சங்களும் அவரின் போதனைகளும் இங்கே இடம்பெற்று உள்ளன. இந்து சாஸ்திரங்களின்படி, அயோத்தி பண்டைய கோசல சாம்ராஜ்யத்தின் தலைநகராகவும், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் பிறந்த இடமாகவும் உள்ளது. இந்த நகரம் ராமரின் தந்தையான தசரத மன்னரால் ஆளப்பட்ட நகரமாகும். மேலும் இது பெரும்பாலும் வளமான மற்றும் இணக்கமான ராஜ்யமாக திகழ்ந்தது.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மௌரிய மற்றும் குப்த வம்சங்களின் ஆட்சியின் போது அயோத்தி புத்த மதத்தின் செழிப்பான நகரமாக மாறியது. அப்பொழுது இந்த நகரம் பல புத்த மடங்கள் மற்றும் ஸ்தூபிகள் ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது.
16 ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டதன் மூலம் அயோத்தி ஒரு மத மையமாக முக்கியத்துவம் வாய்ந்தது. 2019 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வரும் வரை பாபர் மசூதி பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்தது. பிறகு சாதகமான தீர்ப்புக்கு பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கான வழி கிடைத்தது.
பிறகு நம்முடைய பாரம்பரிய கட்டடக்கலையைக் கொண்டு இந்த ராமர் கோயில் சிறப்பாக கட்டப்பட்டது. ராமாயணத்தின் அத்தியாயங்களை விவரிக்கும் சிக்கலான சிற்பங்கள் மற்றும் நம்முடைய இந்திய கட்டடக்கலையை பறைசாற்றும் சிற்பங்கள் என நிறைய சிற்பங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
கருவறையில் ராமரின் தெய்வ சிலை இடம் பெற்றுள்ளது. ராமர் அங்கிருந்து எழுந்தருளி தன்னுடைய அன்பான மக்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும் கோயில் வளாகம் பக்தி மற்றும் கட்டிடக்கலை நுணுக்கத்திற்கு ஒரு பரந்த சான்றாக என்றென்றும் திகழ்கிறது.
அயோத்தி ராமர் கோயில் பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள்
இந்து அண்டவியல் படி, நான்கு யுகங்களின் சுழற்சியில் இரண்டாவது யுகமான திரேதா யுகத்திலிருந்து அயோத்தி நகரம் இருந்ததாக நம்பப்படுகிறது. பண்டைய காலங்களுடனான இந்த தொடர்பு நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
ராமருக்கு பலவிதத்தில் உதவி செய்தவர் அனுமன் ஆவார். எனவே அவரின் நட்பை பறைசாற்றும் விதத்தில் அயோத்தியில் ஹனுமான் கர்ஹி உள்ளது. இது அனுமனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஒரு மலையின் மேல் இந்த கோயில் அமைந்து அயோத்தியின் பறந்த காட்சிகளை நமக்கு அளிக்கிறது.
சீதாவின் சமையல் கூடாரமும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. சீதா தேவி அயோத்தி நகரில் தங்கியிருந்த போது உணவு சமைத்த இடமாக இது பார்க்கப்படுகிறது. இந்த இடம் ஒரு சமையலறை குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. யாத்ரீகர்கள் தங்கள் மத பயணத்தின் ஒரு பகுதியாக இதைப் பார்வையிடுகிறார்கள்.
இந்த அயோத்தி நகரில் வருடாந்திர தீபோத்சவ் அயோத்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நாளில் அயோத்தி நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான மண் விளக்குகளால் நகரத்தை ஒளிரச் செய்கிறார்கள். இது பார்ப்பவர்களை வெகுவாக ஈர்க்கிறது.
அயோத்தியின் வரலாறு புராணங்கள், கலாச்சார பரிணாமம் மற்றும் மத முக்கியத்துவத்துடன் பின்னப்பட்டுள்ளது. எனவே அயோத்திக்கு யாத்ரீகர்களும் சுற்றுலாப் பயணிகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் என்பதில் எந்தளவும் சந்தேகமில்லை.
நீங்களும் ஒரு தடவை அயோத்தி ராமர் கோயில் சென்று அந்த ஸ்ரீ ராமரை வழிபட்டு வாருங்கள். நன்மை உண்டாகும்.



Click it and Unblock the Notifications











