Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
3500 ஆண்டு பழமையான 'இறந்தவர்களின் புத்தகம்' எகிப்தில் கிடைத்துள்ளது..அந்த புத்தகத்தில் என்ன இருக்கு தெரியுமா?
எகிப்து எப்போதுமே உலகின் மிகவும் மர்மமான நகரமாக இருந்துள்ளது, இப்போதும் இருக்கிறது. எகிப்தைச் சுற்றி ஏராளமான புராணக்கதைகளும், மர்மங்களும் இப்போது சுற்றிக் கொண்டே இருக்கிறது. பண்டைய எகிப்திய மக்களின் மறுபிறவி பற்றிய நம்பிக்கைகள், வினோதமான அடக்க சடங்குகள், இப்போதும் தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கிடைக்கும் அரிய மற்றும் மர்மமான கலைப்பொருட்கள், குறிப்பாக எகிப்து பற்றிய திரைப்படங்கள் அதனை மிகவும் சுவாரஸ்யமான இடமாக மாற்றி வருகிறது.
சமீபத்தில், மத்திய எகிப்தில் பணிபுரியும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் New Kingdom சகாப்தத்தைச் சேர்ந்த ஒரு புதைகுழியைக் கண்டுபிடித்தனர், இது சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையது, இது எகிப்து இராஜ்ஜியத்தைப் பற்றிய இதுவரை சொல்லப்படாத ரகசியங்களைக் கொண்டுள்ளது.

புதிய இராஜ்ஜிய கல்லறையில் ஒரு அரிய ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
எகிப்தின் டுனா அல்-கெபல் அல்லது அல்-குரைஃபா பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புதிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு அபூர்வ கல்லறையைக் கண்டுபிடித்தனர், இது கிமு 1550-1070-யை சேர்ந்ததாகும். இந்த கல்லறையில் கிடைத்த கண்டுபிடிப்புகளில் 43 முதல் 49 அடி நீளம் கொண்ட ஒரு ஓலைச்சுவடி சுருள் இருந்தது, மேலும் அதில்ன் இறந்தவர்களின் புத்தகத்தின் ஒரு பகுதி இருப்பதாக நம்பப்படுகிறது.
அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதல் முழுமையான ஓலைச்சுவடி இதுவாகும், மேலும் இது நல்ல நிலையில் இருப்பதாக எகிப்திய உச்ச பழங்கால கவுன்சிலின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார், அவர் சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் மொழிபெயர்க்கப்பட்ட அரபு அறிக்கையில் இதை கூறியுள்ளார்.
புதிய இராஜ்ஜிய கல்லறையில் ஒரு அரிய பாப்பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது
எகிப்தின் டுனா அல்-கெபல் அல்லது அல்-குரைஃபா பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புதிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு கல்லறையைக் கண்டுபிடித்தனர், இது கிமு 1550-1070 ஆகும். புதைகுழியில் கிடைத்த கண்டுபிடிப்புகளில் 43 முதல் 49 அடி நீளம் கொண்ட ஒரு பாப்பிரஸ் சுருள் இருந்தது, அதில் இறந்தவர்களின் புத்தகத்தின் ஒரு பகுதி இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த சுருள் ஏன் முக்கியமானது?
இறந்தவர்களின் புத்தகத்தின் பகுதிகள் அல்லது சிறிய பதிப்புகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பது வழக்கமானதுதான், ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு கல்லறையில் ஒரு முழு சுருளைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது.
சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எகிப்தியலாளர் ஃபோய் ஸ்கால்ஃப், இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார், ஏனெனில் அதன் ஒரிஜினல் புதைக்கப்பட்ட இடத்திலேயே அதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது இல்லை. ரோமர் மற்றும் பெலிசாயஸ் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த லாரா வெய்ஸும் இந்த கண்டுபிடிப்பைப் பாராட்டினார்.
இறந்தவர்களின் புத்தகம் என்றால் என்ன?
இறந்தவர்களின் புத்தகம், பொதுவாக "The Book of Going Forth by Day" என்று அழைக்கப்படுகிறது, இது பண்டைய எகிப்தியர்களுக்கு ஒரு ஆன்மீக வழிகாட்டி புத்தகமாக இருந்தது. இது மந்திரங்கள், பிரார்த்தனைகள் மற்றும் படங்களால் நிரம்பியிருந்தது, இது ஒருவர் இறந்த பிறகு அவரின் ஆன்மா மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கையைக் கண்டறியவும், இறந்தவர்களின் கடவுளான ஒசைரிஸைப் பாதுகாப்பாக அடையவும், அடுத்த உலகில் அவருடன் சேரவும் உதவும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. புதிய இராஜ்ஜி யத்தின் போது, கிமு 1550 ஆம் ஆண்டில் எகிப்தியர்கள் இந்த நூல்களைப் பயன்படுத்தத் தொடங்கினர், மேலும் அவை பல நூற்றாண்டுகளாக, டோலமிக் காலம் வரை கூட முக்கியமானதாக இருந்தன.
இந்த இடத்தில் கிடைத்த மற்ற பொருட்கள்
இந்த தளத்தில் இறந்தவர்களின் புத்தகத்தின் ஓலைச்சுவடி மட்டும் கிடைக்கவில்லை, அதைவிட அதிகமாக பல பொருட்கள் கிடைத்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மர மற்றும் கல் சவப்பெட்டிகளுக்குள் மம்மிகள், 25,000 க்கும் மேற்பட்ட உஷாப்தி சிலைகள் அதாவது மரணத்திற்கு பிறகான வாழ்க்கையில் உதவ புதைக்கப்பட்ட மினி வேலைக்கார சிலைகள், கனோபிக் ஜாடிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தாயத்துக்கள் மற்றும் ஆபரணங்களையும் கண்டுபிடித்தனர்.



Click it and Unblock the Notifications
