500 கோடி நெக்லஸ் முதல் 68 கோடி ரூபாய் கடிகாரம் வரை ஆனந்த் அம்பானி திருமணத்தின் தலைசுற்ற வைக்கும் ஆடம்பரம்...!

கடந்த சில மாதங்களாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக இருந்த முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் மகனின் திருமணம் முடிந்துவிட்டது. பிரம்மாண்டமான திருமணத்திற்கு முந்தைய விழாக்களுக்குப் பிறகு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் அதைவிட பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும், இந்தியாவின் பிரம்மாண்ட திருமணங்களில் ஒன்றாக இது எப்போதும் வரலாற்றில் நிலைத்திருக்கும். அம்பானி குடும்பம் இந்த திருமணத்திற்கு எவ்வளவு பணம் செலவழித்தார்கள் என்று ஆச்சரியப்படுவதை யாராலும் நிறுத்த முடியாது, கிட்டத்தட்ட 5000 கோடிக்கு மேல் செலவழித்ததாக கூறப்படுகிறது.

Anant Ambani List of Expensive Things at Mukesh Ambani Son Wedding

அறிக்கைகளின்படி, அம்பானி திருமணத்திற்கான செலவு இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் செலவான 163 மில்லியன் டாலர்களை கடந்துவிட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் இருந்த மிகவும் ஆடம்பரமான பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன் நடந்த திருமணத்திற்கு முந்தைய செயல்பாடுகளும் திருமணத்தின் மொத்த செலவில் அடங்கும். அறிக்கைகளின்படி, திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளுக்கு மட்டுமே $300 மில்லியன் ஒதுக்கப்பட்டது, இதில் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் மற்றும் கேட்டி பெர்ரி ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன் ஆடம்பரமான நிகழ்வுகள் இருந்தது.

ஜஸ்டின் பீபர் மற்றும் ரிஹானா ஆகிய இரு வெளிநாட்டு கலைஞர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து நிகழ்ச்சிகளை நடத்தியதை உலகமே பார்த்தது. அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான ஆடைகள் மற்றும் நகைகளை புறக்கணிப்பது இயலாத காரியமாகும். 500 கோடி மதிப்பிலான மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸுடன் நீதா அம்பானி திருமண நிகழ்வில் சுற்றித் திரிந்தார். இந்த நெக்லஸ் உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களில் ஒன்று என்று கூறப்படுகிறது, மேலும் அவர் அதை தனது தங்க சேலையுடன் அணிந்திருந்தார். ஷ்லோகா அம்பானியின் கழுத்திலும் விலைமதிப்பு மிக்க நெக்லஸை காணமுடிந்தது.

இதற்கிடையில், ஆனந்த் அம்பானி ரூ.67.5 கோடி மதிப்பிலான படேக் பிலிப் கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதை அனைவரும் பார்த்தனர். ஆனந்த் அணிந்திருந்த சிவப்பு நிற ஷெர்வானி, மரகதம் மற்றும் வைர பட்டன்களைக் கொண்டிருந்ததால், சிக்கலான தங்க வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ஷெர்வானியின் விலை 214 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

அம்பானி குடும்பத்தினர் விலையுயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகளை அணிந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் விருந்தினர்களுக்கும் ஆடம்பரமான பரிசுகளையும் வழங்கினர். 2 கோடி மதிப்பிலான கடிகாரத்தை, விக்கி கவுஷல், ரன்வீர் சிங், ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலகில் உள்ள தனது நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஆனந்த் அம்பானி வழங்கினார்.

தங்கச் சங்கிலிகள், டிசைனர் ஷூக்கள் மற்றும் லூயிஸ் உய்ட்டன் பர்ஸ் போன்ற ஆடம்பர பரிசுகள் பலருருக்கும் வழங்கப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாக, கொண்டாட்டங்களின் போது நேரடியாக வெளிநாட்டு கலைஞர்களைத் தவிர, சிறந்த இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அம்பானி குடும்ப திருமணம் சந்தேகத்திற்கு இடமின்றி தனியார் விமானங்கள், ஃபேன்ஸி கார்கள் மற்றும் பிற கூடுதல் வசதிகளுடன் கூடிய ஒரு ஆடம்பரமான நிகழ்வாக நடைபெற்றது.

இந்த 5000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் இன்னும் மிகவும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்பது நெட்டிசன்கள் பதிவிட்ட வேடிக்கையான பதில்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த திருமணத்தின் செலவு முகேஷ் அம்பானியின் சொத்தில் வெறும் 0.5 சதவீதம்தான். ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் திருமணம் ஆனதால் கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும் என்று நாம் நினைக்கலாம், ஆனால் திருமணத்தை தொடர்ந்து லண்டனில் ஆடம்பரமான கொண்டாட்டம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Tuesday, July 16, 2024, 14:58 [IST]
Desktop Bottom Promotion