Latest Updates
-
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
அம்பானியின் வீட்டில் உள்ள தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாட்டின் பணக்கார குடும்பமான அம்பானியின் ஆடம்பரமான வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று உங்கள் கண்களை கலங்க வைக்கும் அம்பானியின் இல்லமான ஆண்டிலியா கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
மும்பையில் உள்ள அம்பானியின் வீடான ஆண்டிலியா சுமார் 4,00,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 600 பேர் கொண்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில் வீட்டின் கோவிலுக்கு அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணியான மும்பை இந்தியன் இதுவரை அதிக சீசன் கோப்பைகளை வென்றுள்ள அம்பானியின் அணி என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்... கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லும் போதெல்லாம், அதனை நீத்தா அம்பானி அண்டிலியாவில் உள்ள கோவிலில் கடவுளின் காலடியில் வைத்து வணங்குவார்...
ஊடக அறிக்கையின்படி, அண்டிலியாவில் உள்ள கோவிலில், சிலைகள் முதல் கதவுகள் மற்றும் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியால் மட்டுமே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனுடன், கடவுள் சிலைகளிலும் வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
ஆண்டிலியா உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். அம்பானி குடும்பத்திற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பெரும்பாலும் இந்த முழு குடும்பமும் பூஜை, யாகம் மற்றும் ஹவனம் போன்ற சடங்குகளை எந்த ஒரு நல்ல வேலையையும் செய்வதற்கு முன் செய்துவிடுவார்கள்..
இதனுடன், பல்வேறு மதங்கள் தொடர்பான விலையுயர்ந்த சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டில் ஒரு இடமும் உள்ளது. நீத்தா அம்பானி அடிக்கடி இங்கு நேரத்தை செலவிடுவது அவருக்கு அமைதியை அளிக்கிறது.
'ஆண்டிலியா' சிகாகோவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் 'பெர்கின்ஸ்' என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ஆஸ்திரேலிய கட்டுமான நிறுவனமான 'லாக்டன் ஹோல்டிங்' என்பவரால் கட்டப்பட்டது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஆன்டிலியா, 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்ச்சியையும் தாங்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், முகேஷ் மற்றும் நீத்தா அம்பானி இருவரும் தங்கள் வீட்டைக் கட்டும் போது வீட்டின் கோயில் பட்ஜெட்டில் பெரும் பகுதியை செலவழித்துள்ளனர். அதற்கு காரணம் நீத்தா அம்பானி அதிகமாக கடவுள் நம்பிக்கைக் கொண்டவராம்..
இந்நிலையில் உண்மையில், நீத்தா அம்பானிக்கு அரியவகை வைரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது கோவிலை சிறப்பிக்கும் வகையில் விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் திருமணம் நடந்து முடிந்தது..



Click it and Unblock the Notifications