நம்பிக்கையின் ஒரு துண்டு!!!

By Maha

மாரா என்பவர் தீய மந்திர சக்தியை உடையவர். அவர் ஒரு நாள் தனது சீடர்களுடன் மந்திர சக்தியை பற்றி பயிற்சி செய்ய இந்திய கிராமங்களின் வழியே ஒரு பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர்கள் வழியில் ஒருவன் நடந்து கொண்டே தியானம் செய்வதைக் கண்டு நின்றனர். அவனோ கீழிருந்து எதையோ கண்டு வியர்ந்து, அங்கு இருந்த ஒரு கல்லை எடுத்து, அந்த கல்லானது பிள்ளையார் என்று கருதி, அந்த கல்லை அவனுடைய சட்டை பையில் வைத்து கொண்டான்.

அப்போது மாராவின் சீடர்கள், அது என்ன என்பதை, மாராவிடம் விசாரித்தனர். மாராவும் சீடர்களிடம், "அது உண்மை என்று நினைக்கும் நம்பிக்கையின் ஒரு துண்டு" என்று கூறினார்.

இதை கேட்ட அவர்களுக்கு மாராவின் மீது கோபம் ஏற்பட்டு " தீய சக்தியான உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல், ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரே, இது உம்மை பாதிக்கவில்லையா?" என்று கேட்டனர்.

அதற்கு 'இல்லை' என்று பதில் அளித்த மாரா, பின் அவர்களிடம் அமைதியாக ''அது மனிதர்களின் ஒரு புதிய நம்பிக்கையாக விளங்குகிறது, இதனால் எனக்கு எதற்கு கோபம் வர வேண்டும்" என்றார்.

Story first published: Monday, August 6, 2012, 15:49 [IST]
Desktop Bottom Promotion