Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இரண்டு துறவிகள்
இரண்டு ஜென் துறவிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தனர். அங்கே ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவளால் ஆற்றை கடக்க முடியவில்லை. எனவே தன்னை தூக்கிக் கொண்டு போய் அக்கரையில் விடுமாறு கேட்டுக்கொண்டாள்.
ஒரு துறவி மறுத்து விட்டார். மற்றொரு துறவியோ அவளை தூக்கி கொண்டு போய் அக்கரையில் விட்டார். அந்த பெண் நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
துறவிகள் இருவரும் அமைதியாக நடந்து சென்றனர். முதல்துறவியால் பொறுக்க முடியவில்லை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தார். இருந்தாலும் மெதுவாக கேட்கத் தொடங்கினார்.
“துறவு வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் ஏறிட்டு கூட பார்க்கக் கூடாது என்பது நமது கொள்கை. ஆனால் நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டு தூக்கி அக்கரையில் சேர்த்தீர்கள்?” என்று கேட்டார் முதல் துறவி.
அதற்கு பதிலளித்த இரண்டாம் துறவியோ “நான் ஆற்றங்கரையிலே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீதான் இன்னமும் தூக்கி சுமந்து வருகிறாய்” என்றார்.
கருத்து: உடலால் செய்யும் பாவத்தை விட மனதால் செய்யும் பாவமே மிகக் கொடியது



Click it and Unblock the Notifications