Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இரண்டு துறவிகள்
இரண்டு ஜென் துறவிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தனர். அங்கே ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவளால் ஆற்றை கடக்க முடியவில்லை. எனவே தன்னை தூக்கிக் கொண்டு போய் அக்கரையில் விடுமாறு கேட்டுக்கொண்டாள்.
ஒரு துறவி மறுத்து விட்டார். மற்றொரு துறவியோ அவளை தூக்கி கொண்டு போய் அக்கரையில் விட்டார். அந்த பெண் நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
துறவிகள் இருவரும் அமைதியாக நடந்து சென்றனர். முதல்துறவியால் பொறுக்க முடியவில்லை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தார். இருந்தாலும் மெதுவாக கேட்கத் தொடங்கினார்.
“துறவு வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் ஏறிட்டு கூட பார்க்கக் கூடாது என்பது நமது கொள்கை. ஆனால் நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டு தூக்கி அக்கரையில் சேர்த்தீர்கள்?” என்று கேட்டார் முதல் துறவி.
அதற்கு பதிலளித்த இரண்டாம் துறவியோ “நான் ஆற்றங்கரையிலே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீதான் இன்னமும் தூக்கி சுமந்து வருகிறாய்” என்றார்.
கருத்து: உடலால் செய்யும் பாவத்தை விட மனதால் செய்யும் பாவமே மிகக் கொடியது



Click it and Unblock the Notifications