Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
இரண்டு துறவிகள்
இரண்டு ஜென் துறவிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தனர். அங்கே ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவளால் ஆற்றை கடக்க முடியவில்லை. எனவே தன்னை தூக்கிக் கொண்டு போய் அக்கரையில் விடுமாறு கேட்டுக்கொண்டாள்.
ஒரு துறவி மறுத்து விட்டார். மற்றொரு துறவியோ அவளை தூக்கி கொண்டு போய் அக்கரையில் விட்டார். அந்த பெண் நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
துறவிகள் இருவரும் அமைதியாக நடந்து சென்றனர். முதல்துறவியால் பொறுக்க முடியவில்லை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தார். இருந்தாலும் மெதுவாக கேட்கத் தொடங்கினார்.
“துறவு வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் ஏறிட்டு கூட பார்க்கக் கூடாது என்பது நமது கொள்கை. ஆனால் நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டு தூக்கி அக்கரையில் சேர்த்தீர்கள்?” என்று கேட்டார் முதல் துறவி.
அதற்கு பதிலளித்த இரண்டாம் துறவியோ “நான் ஆற்றங்கரையிலே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீதான் இன்னமும் தூக்கி சுமந்து வருகிறாய்” என்றார்.
கருத்து: உடலால் செய்யும் பாவத்தை விட மனதால் செய்யும் பாவமே மிகக் கொடியது



Click it and Unblock the Notifications











