Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
குருவின் நன்றி!!!
ஓர் ஊரில் துறவி ஒருவர் தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடும் வெயில் அடித்தது. இருப்பினும் அவர்கள் கால்களில் செருப்புகளை அணியமால் பயணத்தை தொடர்ந்தனர். அந்த பயணத்தின் போது, அவர்கள் செல்லும் வழிகளில் தாகம் மற்றும் பசியை ஆற்றுவதற்கு என்று எந்த ஒரு வசதியும் இல்லை.
மெதுவாக இரவும் நெருங்கியது. துறவியும் அவரது சீடர்களும் உணவு சாப்பிடாமல், தூங்குவதற்கு தயாராகினர். துறவி எப்போது இரவு தூங்கம் முன் கடவுளை வணங்கி தூங்கும் பழக்கம் உடையவர். அந்த இரவும் துறவி இறைவனிடம், "கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி" என்று சத்தமாக கூறினார். அதைக் கேட்ட சீடர்களுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் துறவியிடம் "கடவுள் நமக்கு இன்று எதுவுமே தரவில்லை. பிறகு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.
துறவி சிரித்துக் கொண்டே "இந்த உலகில் பிறந்த அனைவரும் கடவுளின் குழந்தைகள். அத்தகைய கடவுளுக்கு தன் குழந்தைகளுக்கு என்ன தர வேண்டும், என்ன தரக்கூடாது என்பது நன்கு தெரியும். அதேப்போல் தான் இன்றும் கடவுள் நமக்கு என்ன தர வேண்டுமோ, அதைக் கொடுத்துள்ளார். மேலும் அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்கே! ஆகவே அவருக்கு நன்றி சொன்னேன்!" என்று தனது சீடர்களுக்கு சொல்லிப் புரிய வைத்தார்.



Click it and Unblock the Notifications