Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
வாஸ்துப்படி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருக வீட்டு வாசலில் எந்த செடிகளை வைக்கணும் தெரியுமா?
Vastu Tips In Tamil: ஒருவர் குடியிருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றலானது வீட்டின் பிரதான நுழைவாயிலின் வழியாகத் தான் நுழைகின்றன. குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால், அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
மேலும், வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதில் செடிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. உங்கள் வீட்டை நீங்கள் செடிகளால் அலங்கரிக்க விரும்புவீர்களா?

அப்படியானால் வாஸ்துப்படி வீட்டில் செடிகளை வாங்கி வையுங்கள். அதுவும் நேர்மறை ஆற்றல் நுழையும் வீட்டின் பிரதான வாசலில் ஒருசில செடிகளை வாங்கி வைத்தால், அது அதிர்ஷ்டத்துடன் வீட்டில் செல்வம் பெருக வழிவகை செய்யும்.
வாஸ்துப்படி, சில செடிகள் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதோடு, லட்சுமி தேவியின் அருளைப் பெற உதவும். இப்போது அதிர்ஷ்டத்திற்கு எந்த செடிகளை வீட்டு வாசலின் பிரதான நுழைவாயிலில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
துளசி செடி
துளசி செடி மிகவும் புனிதமான செடி. துளசி செடி இருக்கும் வீட்டில் லட்சுமி தேவி குடியிருப்பாள் என்பது நம்பிக்கை. மேலும் துளசி செடியானது நல்ல வாசனையைக் கொண்டிருப்பதால், அது சுற்றுப்புறத்தை நல்ல மணத்துடன் வைத்திருக்கும். இது தவிர துளசி செடி வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுக்கும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக நினைத்தால், துளசி செடியை வீட்டு வாசலில் வாங்கி வையுங்கள்.
மல்லிகை செடி
வாஸ்துப்படி, வீட்டு வாசலில் மல்லிகை செடியை வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது. மல்லிகை நல்ல மணம் கொண்டது. நல்ல மணம் நிறைந்த இடத்தில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். எனவே மல்லிகை செடியை வாசலில் வைத்தால், அது வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இந்த செடியில் இருந்து மலரும் பூக்கள் சுற்றுச்சூழலை நல்ல மணத்துடன் வைப்பதுடன், செல்வத்தை அதிகரிக்கும்.
மணி பிளான்ட்
வாஸ்து சாஸ்திரத்தில் மணி பிளான்ட் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் பணத்தை அதிகரிக்கும் ஒரு மங்களகரமான செடியாக கருதப்படுகிறது. இந்த மணி பிளான்ட்டை வீட்டின் வாசலில் படர வைத்தால், அந்த மணி பிளான்ட் வளர்வதைப் போன்றே, வீட்டில் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. அதோடு மணி பிளான்ட் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடியது. எனவே இந்த மணி பிளான்ட்டை வாங்கி வைக்கலாம்.
மார்னிங் குளோரி
மார்னிங் குளோரி ஒரு அலங்கார செடி. இதை வீட்டில் வளர்த்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். அதுவும் வீட்டின் வாசலில் வைத்து வளர்த்தால், அந்த வீட்டில் உள்ளோரின் கனவுகள் நனவாகும், வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பெருகும். இந்த செடியை வீட்டின் பிரதான வாசலில் வைத்து வளர்க்கும் போது, அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றலை தடுத்து, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்வதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications













