Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
வாஸ்துப்படி பூஜை அறையில் இதை வெக்காதீங்க.. இல்ல தெய்வங்களின் கோபத்துக்கு ஆளாகி கஷ்டப்படுவீங்க..
Vastu Tips For Pooja Room In Tamil: வாஸ்து சாஸ்திரம் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் நாம் குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளைப் பின்பற்றி கட்டப்பட்டிருந்தால் மட்டும் தான் அந்த வீட்டில் செல்வம் நிலைத்திருப்பதோடு, மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும்.
வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் நிறைந்திருக்கும். இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். என்ன தான் நமது வீட்டில் தெய்வங்கள் குடியிருக்கும் பூஜை அறை இருந்தாலும், அந்த பூஜை அறையிலும் வாஸ்து விதிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும்.

அதாவது பூஜை அறையின் திசை, பூஜை அறையில் வைக்கும் தெய்வங்களின் திசை, தெய்வங்களை வழிபடும் போது எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த மாதிரியான தெய்வங்களை வைத்திருக்க வேண்டும், எவற்றை வைத்திருக்கக்கூடாது என்று பல விஷயங்களை யோசித்து, வீட்டின் பூஜை அறையை அமைக்க வேண்டும். இப்போது இதுக்குறித்து சற்று விரிவாக காண்போம்.
இறந்தவர்களின் போட்டோ
பிடித்த ஒருவர் இறக்கும் போது, அவரை தெய்வமாக நினைத்து, அவரது போட்டோவை வீட்டின் பூஜை அறையில் வைத்து பலரும் வழிபடுவதுண்டு. ஆனால் வாஸ்துப்படி இறந்தவர்களின் போட்டோக்களை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது. அதேப் போல் இறந்தவர்களின் போட்டோ உள்ள இடத்தில் எந்த ஒரு துறவியின் போட்டோவையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வலது பக்க துதிக்கை கொண்ட விநாயகர் சிலை
விநாயகர் போட்டோக்கள் அல்லது சிலைகள் பல வடிவங்களில் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த விநாயகர் சிலை அல்லது போட்டோவை வீட்டில் வைப்பதாக இருந்தால், வலது பக்கம் துதிக்கையைக் கொண்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் வலது பக்க துதிக்கையைக் கொண்ட விநாயகர் இருந்தால், வீட்டில் உள்ள மற்ற தெய்வங்களை சாந்தப்படுவது என்பது கடினமாக இருக்கும் மற்றும் வழக்கமாக மேற்கொள்ளும் வழிபாட்டை விட அதிக கவனிப்பு இந்த வகை துதிக்கையைக் கொண்ட விநாயகருக்கு தேவைப்பபடுவதாக நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த வகை விநாயகர் சிலை கோவில்களில் வைத்து வழிபடப்படுகிறது.
எந்த சிலைகளை வைத்திருக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, காளி, சனி பகவான், ராகு-கேது போன்ற தெய்வங்களின் சிலைகளை வீட்டின் பூஜை அறையில் வைதது வழிடக்கூடாது. ஏனெனில் இந்த தெய்வங்கள் அனைத்தும் சற்று உக்கிரமான நிலையில் இருப்பவையாக கருதப்படுகின்றன. மேலும் இந்த தெய்வங்களை வழிபடும் முறை சற்று கடினமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்க வேண்டுமானால், தெய்வங்கள் எப்போதும் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகளையே வைக்க வேண்டும்.
லட்சுமி தேவியின் எந்த நிலையை வைத்திருக்கக்கூடாது?
செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது தான். ஆனால் லட்சுமி தேவியின் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவதாக இருந்தால், சரியான நிலையில் உள்ள சிலைகளை வைத்து வழிபட வேண்டும். லட்சுமி தேவியை வீட்டில் வைத்து வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மேலும் வீட்டில் வறுமை எதுவும் இருக்காது.
வீட்டில் லட்சுமி தேவியின் சிலைகளை வைப்பதாக இருந்தால், உட்கார்ந்த நிலையில் உள்ள லட்சுமி தேவியின் சிலைகளைத் தான் வைக்க வேண்டும். நின்ற நிலையில் உள்ள சிலைகளை பூஜை அறையில் வைக்கக்கூடாது. அதுவும் இன்னும் சிறப்பான பலனைப் பெற நினைத்தால், விஷ்ணுவுடன் உள்ள லட்சுமி தேவியின் சிலையை வைத்திருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications