வாஸ்துப்படி, இந்த சிலைகளை வீட்டில் வாங்கி வைத்தால் அதிர்ஷ்டத்துடன் செல்வமும் அதிகரிக்குமாம்...

Vastu Tips In Tamil: ஒருவரது முன்னேற்றத்தில் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது தெரியுமா? ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை வெளியிடுகின்றன.

இந்த ஆற்றல்கள் அந்த வீட்டில் உள்ளோரின் தொழில் வாழ்க்கை, ஆரோக்கியம், நிதி நிலை, உறவுகள், முன்னேற்றம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர வீட்டில் உள்ள சில பொருட்கள் ஒருவரது தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பி பிரகாசிக்க வைக்கும் திறன் கொண்டது.

Vastu Tips: Keep These Statue At Home For Good Luck In Tamil

சிலருக்கு வீட்டை அழகான சிலைகளால் அலங்கரிக்க விரும்புவார்கள். நீங்களும் சிலைகளால் வீட்டை அலங்கரிக்க விரும்புபவராயின், உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை அதிகரிக்கும் சிலைகளை வாங்கி வையுங்கள். கீழே அவை எந்த சிலைகள் என்று கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பிடித்ததை வாங்கி வையுங்கள்.

கிளி சிலை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிளியின் சிலை அல்லது கிளியின் படங்களை குழந்தைகள் படிக்கும் அறையில் வைத்திருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே உங்கள் குழந்தைகள் சிறந்து படிக்க வேண்டுமென விரும்பினால், படிக்கும் அறையின் வடக்கு திசையில் கிளி சிலையை வைக்க வேண்டும். மேலும் கிளி அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

யானை சிலை

வாஸ்துப்படி, வெள்ளி அல்லது பித்தளையால் ஆன யானையின் சிலையை வீட்டில் வாங்கி வைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் யானை செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் யானையின் சிலையை வைத்திருந்தால், அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டின் வறுமையை நீக்கி, செல்வத்தைப் பெருக்கும். இது தவிர ராகு தோஷம் இருந்தாலும் அது நீங்கும்.

அன்னப்பறவை சிலை

வாஸ்துப்படி அன்னப்பறவையின் சிலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் ஜோடி அன்னப்பறவை சிலைகளை வாங்கி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே இருந்த சண்டைகள் குறைந்து, அன்பு அதிகரிக்கும். மேலும் வீட்டின் சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும்.

ஆமை சிலை

வாஸ்து சாஸ்திரத்தில் ஆமை சிலை செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த ஆமை சிலையை வீட்டில் வைத்திருநதால், வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, வீட்டின் சூழல் எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த சிலையை வடக்கு, கிழக்கு திசையை வைத்திருக்க வேண்டும். அதுவும் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் ஆமை சிலையை வைத்து, வீட்டின் ஹாலில் வைக்க வேண்டும்.

ஒட்டக சிலை

வாஸ்துப்படி, ஒட்டக சிலையை வீட்டில் வைத்திருப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. ஒட்டகம் கடின உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே ஒட்டக சிலையை வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் வியாபாரம் செய்வோருக்கு எப்போதும் நல்ல லாபம் கிடைக்கும். அதுவும் ஒட்டக சிலையை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும்.

Story first published: Thursday, April 20, 2023, 19:35 [IST]
Desktop Bottom Promotion