Latest Updates
-
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
வாஸ்துப்படி, வீட்டில் இந்த பறவைகளின் படங்களை வைத்தால், பணப் பிரச்சனை குறைந்து.. செல்வம் பெருகுமாம்..
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு மட்டுமின்றி, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும், அப்பொருட்கள் இருக்கும் திசைகளும் ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதுடன் தொடர்பு கொண்டுள்ளன. எனவே தான் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ வாஸ்துப்படி எதையும் மேற்கொள்ளுமாறு பெரியோர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் வீட்டில் ஒருசில மாற்றங்களை செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஒருவரது அதிர்ஷ்டத்தை மாற்றக்கூடிய பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் ஜோதிடத்தின் படி, ஒருசில பறவைகளின் போட்டோக்களை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வெற்றிகளும், பண வரவும் அதிகரிக்கும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் எந்த மாதிரியான பறவைகளின் போட்டோக்களை வைத்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
அன்னப்பறவை
அன்னப்பறவை ஒரு அழகான பறவை. வாஸ்து சாஸ்திரத்தில் இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அன்னப்பறவையின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். அதுவும் இந்த அன்னப்பறவையின் போட்டோவை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி இந்த திசையில் இந்த பறவையின் போட்டோவை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, பண வரவில் உள்ள தடைகளையும் நீக்கும்.
மயில்
மயில் முருக பெருமானின் வாகனம் மட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரத்திலும் மயில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தோகையை விரித்து மயில் இருக்கும் போது, அதன் அழகு மிகவும் கவரச்சியானது. இந்த மயில் நேர்மறை ஆற்றலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட மயிலின் போட்டோவை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் வீட்டில் உள்ள தோஷங்களைப் போக்கும். வாஸ்துப்படி, மயிலின் போட்டோவை வீட்டின் கிழக்கு சுவற்றில் வைக்க வேண்டும்.
மீன்கொத்தி பறவை
வாஸ்துப்படி மீன்கொத்தி பறவையை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் இந்த பறவையின் போட்டோவை வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த பறவையின் போட்டோவை வீட்டில் வைத்திருந்தால், மகிழ்ச்சி பெருகும், செல்வம் அதிகரிக்கும் மற்றும் வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications