Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
வாஸ்துப்படி, வீட்டின் இந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிச்சுராதீங்க.. இல்ல நிறைய பிரச்சனையை சந்திப்பீங்க
Vastu Tips In Tamil: பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவாக தனக்கு பிடித்தவாறு ஒரு சொந்த வீட்டை கட்டுவதாகவே இருக்கும். வீட்டை கட்டிய பின் அந்த வீட்டிற்கு தனது பிடித்த நிறத்தில் பெயிண்ட் அடிக்க விரும்புவோம்.
வீட்டின் அழகை மேம்படுத்துவதில், வண்ணங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் வீட்டிற்கு வண்ணங்களை தேர்வு செய்யும் போது வாஸ்து விதிகளை நினைவில் கொள்ள வேண்டும் என்பது தெரியுமா?

நிறைய பேருக்கு மஞ்சள் நிறம் பிடித்த வண்ணமாக இருக்கும். இதனால் மஞ்சள் நிற பெயிண்ட்டை தங்களின் வீட்டிற்கு அடிக்க நினைப்பார்கள். என்ன தான் மஞ்சள் ஒரு மங்களகரமான நிறமாக இருந்தாலும், அந்த மஞ்சள் நிற பெயிண்ட்டை திசைகளுக்கு ஏற்ப அடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வாஸ்து குறைபாடு ஏற்பட்டு, அதன் விளைவாக வீட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது வீட்டின் எந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிக்கலாம் மற்றும் எந்த திசையில் அடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
வீட்டின் எந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிக்கலாம்?
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் கிழக்கு சுவற்றில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிக்கலாம். ஆனால் அடர் மஞ்சள் நிற பெயிண்ட்டை மட்டும் தனியே அடிக்கக்கூடாது. வெளிரிய மஞ்சள் நிறத்தில் தான் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
* ஒவ்வொரு நிறமும் ஒரு தெய்வத்துடன் தொடர்புடையது. அந்த வகையில் மஞ்சள் நிறம் குரு பகவானுடன் தொடர்புடையது. குரு அறிவையும், ஞானத்தையும் வழங்குபவர். எனவே மஞ்சள் நிறத்தின் முழு பலனைப் பெற விரும்பினால், அதை சரியான திசையில் பயன்படுத்த வேண்டும். குரு பகவானுக்குரிய திசை வடகிழக்கு. எனவே வடகிழக்கு சுவற்றில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் அது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி போன்றவற்றைத் தரும்.
மஞ்சள் நிறத்தை எந்த திசையில் பயன்படுத்தக்கூடாது?
* வாஸ்துப்படி மஞ்சள் நிற பெயிண்ட்டை வீட்டின் தென்கிழக்கு திசையில் பயன்படுத்தக்கூடாது. அப்படி இந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை பயன்படுத்தினால், அது வீட்டில் பல பிரச்சனைகளை வரவழைக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மஞ்சள் நிறத்தை அக்னி திசையில் பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் தீங்கை உண்டாக்கும்.
* தென்கிழக்கு திசையில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ள உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதுமட்டுமின்றி, அந்த வீட்டில் இருப்போர் நிதி பிரச்சனைகள், உறவு பிரச்சனைகள் என்று பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
வீட்டில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தும்போது நினைவில் கொள்ள வேண்டியவை:
வீட்டில் மஞ்சள் நிறத்தை பயன்படுத்தும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:
* மிகவும் அடர் நிற மஞ்சளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* வெறும் மஞ்சள் நிறத்தை மட்டும் பயன்படுத்தாமல், அத்துடன் வெள்ளை, பச்சை, நீலம் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்துங்கள்.
* முக்கியமாக சிவப்பு நிறத்துடன் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எனவே உங்கள் மஞ்சள் நிறம் மிகவும் பிடித்தமானதாக இருந்தால், அவற்றை உங்கள் வீட்டிற்கு பயன்படுத்தும் முன், வாஸ்து விதிகளை அறிந்து கொண்டு, பின்னர் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், வாழ்க்கை நிம்மதியின்றி, பிரச்சனைகள் நிறைந்தாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











