Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
வாஸ்துப்படி, வீட்டின் இந்த இடங்களில் பச்சை நிறத்தை யூஸ் பண்ணாதீங்க.. இல்லன்னா முன்னேற்றமே ஏற்படாது...
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணங்கள் பிடிக்கும். நிறைய பேர் தங்கள் வீடுகளுக்கு தங்களுக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்துவார்கள். நிறங்களில் மஞ்சள் மங்களகரமாகவும், பச்சை பசுமையையும் குறிக்கிறது.
அதுவும் பச்சை நிறம் கண்களுக்கு குளிர்ச்சியை மற்றும் மனதிற்கு ஒருவித அமைதியைத் தருவதாக நம்புகின்றனர். அதன் விளைவாக நிறைய பேர் தங்கள் வீடுகளுக்கு பச்சை நிற பெயிண்ட்டை பயன்படுத்துகிறார்கள். மேலும் பச்சை நிறம் வீட்டிற்கு செழிப்பை கொண்டு வருவதாகவும் நினைத்து அந்த நிற பெயிண்ட்டை தங்கள் வீடுகளில் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஜோதிடத்தின் படி, வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அது வீட்டிற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் மற்றும் அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். இப்போது வீட்டின் எந்த பகுதியில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது, ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதைக் காண்போம்.
தெற்கு திசையில் பயன்படுத்தக்கூடாது
வீட்டின் தெற்கு திசையில் மட்டும் பச்சை நிறத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தெற்கு திசையானது செவ்வாய் பகவானுக்கு உரிய திசையாக கருதப்படுகிறது மற்றும் செவ்வாய் பகவானுக்கு உரிய நிறம் சிவப்பு. பச்சை நிறமானது குளிர்ச்சியான ஆற்றலை உற்பத்தி செய்யும், சிவப்பு அதற்கு எதிர்மாறாக வெதுவெதுப்பான ஆற்றலைக் கொண்டது. எனவே சிவப்பு நிறத்தை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தினால், அது முன்னேற்ற பாதையில் தடையை ஏற்படுத்தும்.
மேற்கு திசையில் கூடாது
வாஸ்துப்படி, மேற்கு திசையான சனி பகவானுக்கு உரிய திசையாக கருதப்படுகிறது. எனவே இந்த மேற்கு திசையில் பச்சை நிறத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு செல்வ செழிப்போது இருக்க வேண்டுமானால், இந்த திசையில் பச்சை நிறத்திற்கு பதிலாக மெட்டாலிக் நிறங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
பிரம்ம பகுதியில் கூடாது
வீட்டின் பிரம்ம பகுதி ஆகாயத்தைக் குறிக்கிறது. எனவே வீட்டின் மைய பகுதியான பிரம்ம ஸ்தானத்தில் பச்சை நிறத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் இந்த பகுதியில், வெள்ளை, வெளிரிய மஞ்சள் அல்லது நீல நிறங்களைப் பயன்படுத்தலாம். ஒருவேளை இந்த பகுதியில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, வீட்டில் உள்ளோரிடையே நல்லுறவை பேண முடியாமல் நிறைய சண்டைகளை வரவழைக்கும்.
சீலிங்கில் கூடாது
வீட்டின் சீலிங்கில் எப்போதும் பச்சை நிற பெயிண்ட்டை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ளோரின் வளர்ச்சி பாதையில் தடைகளை ஏற்படுத்தும். எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள்.
தெற்கு பார்த்த வீடுகள்
உங்கள் வீடு தெற்கு பார்த்த வீடு என்றால், வீட்டிற்கு முன் பச்சை நிறத்தைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் அது எதிர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கும். வேண்டுமானால் பச்சை நிற செடிகளை அந்த பகுதியில் வைத்து பசுமையாக வைத்துக் கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications