Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
ஹோட்டல் மாதிரி மிருதுவான மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்தி வேணுமா? இந்த பொருளை சேர்த்து மாவு பிசையுங்க...!
இந்திய உணவு வகைகளில் சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கென்று தனியிடம் உள்ளது, இது இந்திய மக்களின் பிரதான உணவுகளில் ஒன்றாகும். ஆனால் சப்பாத்திக்கு மாவை நன்றாகப் பிசையவில்லை என்றால், சப்பாத்தி கெட்டியாகி ரப்பர் போல மாறிவிடும்.
இந்த சப்பாத்திகள் மெல்ல முடியாமல் போவது மட்டுமல்லாமல், அவற்றை வேகவைப்பதும் மிகவும் கடினமாகிவிடும். உருண்டையான மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்திகளை செய்வதற்கு பயிற்சியும், சில தந்திரங்களும் போதும். இருப்பினும், மாவை பிசைவது ரொட்டி தயாரிப்பில் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்த பதிவில் மென்மையான மற்றும் உப்பலான ஹோட்டலில் கிடைப்பது போன்ற சப்பாத்திகளை எப்படி தயாரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மாவை வெதுவெதுப்பான நீரில் பிசையவும்
சிலர் மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைவார்கள். நீங்கள் மாவை மென்மையாக்க விரும்பினால், முதலில் மாவை நன்றாக சலிக்க வேண்டும். அதன் பிறகு, அதில் 1/2 கப் வெதுவெதுப்பான நீரை சேர்த்து, மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதன் பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசையவும். மாவை நன்கு பிசைந்த பிறகு, 5 நிமிடங்கள் மூடி வைக்கவும், இது பசையம் விரிவடைவதற்கு நேரம் கொடுக்கும், இதனால் சப்பாத்தி மிருதுவாக மாறும்.
வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்தவும்
முழு மாவையும் எண்ணெயில் பிசைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு சிறிது வெதுவெதுப்பான எண்ணெயை சேர்க்க வேண்டும். மாவை பிசைவதற்கு முன், எண்ணெயை சூடாக்கவும்.
மாவில் 1 டீஸ்பூன் சூடான எண்ணெயை ஊற்றி நன்கு பிசையவும். இப்போது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். கடைசியில் மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மீண்டும் ஒரு நிமிடம் பிசைந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
ஈரத்துணியால் மூடி வைக்கவும்
மாவை அவசரமாக பிசையும் போது அந்த சப்பாத்தி நன்றாக வராது. நீங்கள் எப்போதாவது அவசரமாக மாவை பிசைகிறீர்கள் என்றால், இந்த தந்திரம் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மெல்லிய மஸ்லின் துணியை ஊறவைத்து, நன்கு பிழியவும்.
துணியில் தண்ணீர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் அது ஈரமாக இருக்க வேண்டும். இந்த துணியால் மாவை மூடி, சுமார் 10 நிமிடங்கள் ஓரமாக வைக்கவும். பின் 1 நிமிடம் மாவை பிசைந்து ரொட்டியைத் சுடவும்.
முட்டையை சேர்க்கலாம்
மாவை பஞ்சுபோன்றதாக மாற்ற முட்டையைப் பயன்படுத்தலாம். இதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை தனி கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதில் 2 துளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அடிக்கவும். வெள்ளைக்கரு மிகவும் பஞ்சுபோன்றதாக இருக்க வேண்டும். இதை 1 டேபிள் ஸ்பூன் மாவில் கலந்து தண்ணீரில் பிசைந்து மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற ரொட்டி தயாரிக்கலாம்.
தயிர் உபயோகிக்கலாம்
நீங்கள் முட்டை சேர்க்க விரும்பவில்லை என்றால், தயிர் சேர்ப்பதன் மூலம் சப்பாத்தியை மென்மையாக்கலாம். இவ்வாறு செய்யும் போது, ரொட்டி மிகவும் மென்மையாக மாறும் மற்றும் நீண்ட நேரம் ப்ரெஷாக இருக்கும். மாவை நன்றாக சலித்து விட்டு அதனுடன் 2 தேக்கரண்டி தயிர் சேர்க்கவும்.
தயிர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் வைக்கவும். கூலிங் நன்றாக குறைந்தவுடன் மாவுடன் கலக்கவும். இப்போது மாவை வெதுவெதுப்பான நீரில் பிசைந்து மூடி வைக்கவும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சப்பாத்திக்கு பஞ்சுபோன்ற தன்மையைக் கொடுக்க சேர்க்கப்படுகிறது. அதில் ஒரு சிட்டிகை மாவில் சேர்த்து கலக்கவும். இதற்கு மேல், 1/2 கப் சூடான பால் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரைக் கலக்கவும். அதன் பிறகு, மாவை 10-15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் 1-2 நிமிடங்கள் பிசையவும். அதன் பிறகு, உருண்டைகளாக செய்து சப்பாத்தி சுடலாம். ரொட்டிகளை அலுமினியத் தாளில் பேக் செய்து சேமிக்கவும். இது மாலை வரை புதியதாகவும் மென்மையாகவும் இருக்கும்.
நெய் சேர்க்கலாம்
நெய் சேர்த்தும் ரொட்டியை மென்மையாகவும் செய்யலாம். மாவை சலித்து விட்டு அதனுடன் 1 தேக்கரண்டி சூடான நெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். இந்த மாவில் உடனடியாக சப்பாத்தி செய்தால், அது மென்மையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications












