Latest Updates
-
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
வாஸ்து படி உங்கள் வீட்டின் முன் இந்த வகை செடி இருந்தால் உங்கள் வீட்டில் செல்வமும், அமைதியும் இருக்காதாம்!
வாஸ்து படி வடிவமைக்கப்பட்ட அல்லது அலங்கரிக்கப்பட்ட வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டிடக்கலை மற்றும் கட்டுமான அறிவியல் பற்றி கூறும் சாஸ்திரம் ஆகும். வாஸ்து படி வடிவமைக்கப்பட்ட அல்லது அலங்கரிக்கப்பட்ட வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு இந்து பாரம்பரியமாகும், இது நம் வீட்டில் உள்ள ஆற்றலை ஒருங்கிணைப்பதன் மூலம் இயற்கை சக்திகளுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து நடைமுறைகளைப் பின்பற்றி உங்கள் வீட்டில் பொருட்களை வைத்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திருக்கும். கடின உழைப்பு இருந்தபோதிலும், உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டம், நிம்மதியின்மை மற்றும் சிக்கல்கள் நிறைந்திருக்க வாஸ்து குறைபாடு காரணாமாக இருக்கலாம். அதன்படி உங்கள் வீட்டின் முன்புறத்தில் மற்றும் உட்புறத்தில் சில பொருட்களை வைக்கக்கூடாது. இல்லையெனில், நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
வீட்டின் நுழைவாயில்
வீட்டின் பிரதான கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூலம் மட்டுமே ஆற்றல் வீட்டிற்குள் நுழைகிறது, மேலும் வீட்டின் பிரதான கதவுக்கு முன்னால் ஏதேனும் தடைகள் இருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்கலாம்.
வீட்டின் முன் இருக்கக்கூடாதவை
உங்கள் வீட்டின் முன் ஒரு மரம் அல்லது கம்பம் நின்றால் அல்லது குழி இருந்தால், அது ஒரு அசுப அறிகுறியாகும். இது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தும். அதன் தீய விளைவுகளைத் தடுக்க, வீட்டின் பிரதான வாயிலில் தினமும் ஸ்வஸ்திகா அடையாளம் வைத்து, வீட்டிற்கு வெளியே உள்ள குழியை உடனடியாக நிரப்ப வேண்டும்.
செடிகள்
பல சமயங்களில் வீட்டின் அலங்காரத்துக்காக வீட்டின் வெளியே பிரதான வாசலில் கொடி படரும் செடிகளை வளர்ப்போம். இது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு நல்லதல்ல. அதற்குப் பதிலாக, பிரதான கதவில் ஒரு கிரிஸ்டல் பந்தைத் தொங்க விடுங்கள் அல்லது பிரதான கதவில் சிவப்பு நிற ரிப்பனைக் கட்டுவது, எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கிறது. வீட்டிற்குள் இருக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
போர் காட்சிகள்
வீட்டிற்குள் ஓவியங்களை வைப்பது உங்கள் வீட்டிற்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும் என்பது சந்தேகமில்லாது. ஆனால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களுடைய போர்க்காட்சிகளின் ஓவியங்களை வீட்டிற்க்குள் வைக்கக்கூடாது. இது குடும்ப உறுப்பினர்களிடையே விரோதத்தை அதிகரிக்கிறது.
தாஜ்மஹால்
தாஜ்மஹாலின் பொம்மை அல்லது ஓவியத்தை வீட்டிற்குள் வைக்கக்கூடாது. ஏனெனில் அது ஒரு கல்லறை மற்றும் மரணத்தைக் குறிக்கும் சின்னமாக இருக்கிறது. தாஜ்மஹால் காதலின் சின்னமாக கருதப்பட்டாலும் அது ஒரு கல்லறை என்பதை மறந்துவிடக்கூடாது. இது உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டுவரும்.
மிருகங்களின் பொம்மைகள் மற்றும் படங்கள்
பன்றி, பாம்பு, கழுதை, கழுகு, ஆந்தை, வௌவால், கழுகு மற்றும் காகம் போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை உங்கள் வீட்டில் வைக்கக்கூடாது. வாஸ்து படி, ஒரு தம்பதியின் படுக்கையறையில் ஒரு பறவை அல்லது விலங்கு படங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. இது தம்பதிகளின் வாழ்க்கையில் பல தம்பதிகளின் வாழ்க்கையில் பல சிக்கலை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications