Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
செல்லப்பிராணியை ஏன் வெச்சுக்கணும் தெரியுமா!!!

* அலுவலகத்தில் உள்ள அதிக வேலையின் காரணமாக, மனஅழுத்தத்துடன் வீட்டிற்கு வருவோம். அப்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை பார்க்கும் போது, ஆசையோடு தாவிக்குதித்து நம்முடன் விளையாடும். அந்த நேரத்தில் நம்மிடம் விளையாடுவதைப் பார்க்கும் போது, மனஅழுத்தம் குறைந்து, சற்று நிம்மதியாக இருக்கும். இந்த கட்டத்தில் நம்மை சமாதானப்படுத்துவதில், நம் செல்லப்பிராணியை தவிர யாராலும் நமது மனஅழுத்தத்தை குறைக்க முடியாது. ஆகவே அத்தகைய நம் செல்லப்பிராணியை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அதன் மேல் இருக்கும் கிருமிகள் நம்மைத் தாக்கி உடலில் நோயை ஏற்படுத்தும்.
* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் போது, நம்முடன் அந்த செல்லப்பிராணிகளையும் அழைத்துக் செல்லலாம். செல்லப்பிராணிகளுடன் விளையாட நிறைய விளையாட்டுக்கள் இருக்கின்றன. மேலும் நீங்கள் சோம்பேறியாக இருப்பவராக இருந்தால், நமது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியை அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் அதை நாம் வெளியில் அழைத்துச் செல்கிறோம் என்றால் மிகுந்த ஆசையோடு, அங்கம் இங்கும் ஓடி நம்முடன் விளையாடும். மேலும் இதுவே ஒரு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
* வீட்டில் செல்லப்பிராணிகள் வாங்குகிறோம் என்றால், அதனை நமது நண்பனாகத் தான் நினைப்போம். மேலும் அவை நமக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும், எந்த நேரத்திலும் துரோகம் விளைவிக்காது. என்ன தான் பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், யார் உங்களை விட்டுச் சென்றாலும், நாம் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை விட்டுச் செல்லாது. இவற்றில் நாய்கள் தான் மிகவும் சிறந்தது.
* எத்தனை பேர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, நீங்கள் சொல்வதை கேட்கிறார்கள்? யாரும் இல்லையா? கவலைப்பட வேண்டாம். எந்த நேரத்திலும் நீங்கள் சொல்வதை மற்றும் நீங்கள் செய்வதை திரும்பி செய்யும் ஒரு உயிர், செல்லப்பிராணிகள் தான். அந்த நேரத்தில் உங்களுக்கு செல்லப்பிராணியை விட சிறந்த நண்பர் யாராகவும் இருக்க முடியாது. மேலும் என்ன கஷ்டம் என்றாலும், எந்த இரகசியம் என்றாலும் அதனை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால், அதை நமது செல்லப்பிராணிகளிடம் சொல்லலாம். சொல்லப்போனால், இந்த உலகில் யாரை நம்புகிறோமோ, இல்லையோ, நமது செல்லப்பிராணிகளை நம்பலாம்.
* செல்லப்பிராணிகள் வீட்டில் இருந்தால், நமக்கு வீட்டில் ஒரு பாதுகாப்பு இருப்பது போல் இருக்கும். செல்லப்பிராணிகள் நமக்கு ஒரு சிறந்த நண்பன் என்று சொல்வதோடு, நமக்கு ஒரு நல்ல பாதுகாப்பையும் தரும். அது நம்முடன் இருக்கும் போது, கெட்ட எண்ணத்துடன் பழகும் எவரையும் விரைவில் காட்டிக் கொடுத்துவிடும்.



Click it and Unblock the Notifications