Just In
- 16 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
செல்லப்பிராணியை ஏன் வெச்சுக்கணும் தெரியுமா!!!
* அலுவலகத்தில் உள்ள அதிக வேலையின் காரணமாக, மனஅழுத்தத்துடன் வீட்டிற்கு வருவோம். அப்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை பார்க்கும் போது, ஆசையோடு தாவிக்குதித்து நம்முடன் விளையாடும். அந்த நேரத்தில் நம்மிடம் விளையாடுவதைப் பார்க்கும் போது, மனஅழுத்தம் குறைந்து, சற்று நிம்மதியாக இருக்கும். இந்த கட்டத்தில் நம்மை சமாதானப்படுத்துவதில், நம் செல்லப்பிராணியை தவிர யாராலும் நமது மனஅழுத்தத்தை குறைக்க முடியாது. ஆகவே அத்தகைய நம் செல்லப்பிராணியை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அதன் மேல் இருக்கும் கிருமிகள் நம்மைத் தாக்கி உடலில் நோயை ஏற்படுத்தும்.
* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் போது, நம்முடன் அந்த செல்லப்பிராணிகளையும் அழைத்துக் செல்லலாம். செல்லப்பிராணிகளுடன் விளையாட நிறைய விளையாட்டுக்கள் இருக்கின்றன. மேலும் நீங்கள் சோம்பேறியாக இருப்பவராக இருந்தால், நமது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியை அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் அதை நாம் வெளியில் அழைத்துச் செல்கிறோம் என்றால் மிகுந்த ஆசையோடு, அங்கம் இங்கும் ஓடி நம்முடன் விளையாடும். மேலும் இதுவே ஒரு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
* வீட்டில் செல்லப்பிராணிகள் வாங்குகிறோம் என்றால், அதனை நமது நண்பனாகத் தான் நினைப்போம். மேலும் அவை நமக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும், எந்த நேரத்திலும் துரோகம் விளைவிக்காது. என்ன தான் பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், யார் உங்களை விட்டுச் சென்றாலும், நாம் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை விட்டுச் செல்லாது. இவற்றில் நாய்கள் தான் மிகவும் சிறந்தது.
* எத்தனை பேர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, நீங்கள் சொல்வதை கேட்கிறார்கள்? யாரும் இல்லையா? கவலைப்பட வேண்டாம். எந்த நேரத்திலும் நீங்கள் சொல்வதை மற்றும் நீங்கள் செய்வதை திரும்பி செய்யும் ஒரு உயிர், செல்லப்பிராணிகள் தான். அந்த நேரத்தில் உங்களுக்கு செல்லப்பிராணியை விட சிறந்த நண்பர் யாராகவும் இருக்க முடியாது. மேலும் என்ன கஷ்டம் என்றாலும், எந்த இரகசியம் என்றாலும் அதனை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால், அதை நமது செல்லப்பிராணிகளிடம் சொல்லலாம். சொல்லப்போனால், இந்த உலகில் யாரை நம்புகிறோமோ, இல்லையோ, நமது செல்லப்பிராணிகளை நம்பலாம்.
* செல்லப்பிராணிகள் வீட்டில் இருந்தால், நமக்கு வீட்டில் ஒரு பாதுகாப்பு இருப்பது போல் இருக்கும். செல்லப்பிராணிகள் நமக்கு ஒரு சிறந்த நண்பன் என்று சொல்வதோடு, நமக்கு ஒரு நல்ல பாதுகாப்பையும் தரும். அது நம்முடன் இருக்கும் போது, கெட்ட எண்ணத்துடன் பழகும் எவரையும் விரைவில் காட்டிக் கொடுத்துவிடும்.