கோடையில மீன் தொட்டியை கூலா வைங்க!

By Mayura Akilan

Fish Tank
மனிதர்களை மட்டுமல்ல வனத்தில் உள்ள விலங்குகளையும் விட்டு வைப்பதில்லை கோடை. விலங்குகளும் குளுமையான இடம்தேடி இடம்பெயர்வது வாடிக்கை. வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளையும் கோடையில் குளுமையாய் வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை பாதுகாப்பாய் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருக்கும் மீன்களைக்கூட கோடையில் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மீன் ஆராய்ச்சியாளர்கள்.

தண்ணீரை மாத்துங்க

கூலான தண்ணீராக இருந்தாலும் கோடையில் சுத்தமான தண்ணீரை மாற்றவேண்டும். அதுவும் மாலை நேரத்தில்தான் தொட்டியில் உள்ள தண்ணீரை மாற்றவேண்டும். தொட்டியில் உள்ள செடிகளை வேறு தொட்டிக்கு மாற்றிவிட்டு, மீன்களை வலைகளால் பிடித்து தண்ணீர் உள்ள பாட்டிலில் போடவேண்டும். பின்னர் மீன் தொட்டியில் புதிய தண்ணீரை ஊற்றவேண்டும்.

லைட் நிறுத்துங்க

மீன் தொட்டியில் அலங்காரத்திற்காக விளக்குகளை எரிய விட்டிருந்தால் அவற்றினால் உஷ்ணம் அதிகரிக்கும். எனவே கோடையில் மாலை நேரத்தில் விளக்குகளை ஆப் செய்து விடலாம். இதனால் குளிர்ச்சி ஏற்படும். அறை விளக்குகளை போட்டு வைத்திருக்கலாம். மீன்கள் நீந்துவதை காண முடியும்.

ஜன்னலை மூடுங்க

கோடை காலத்தில் வெப்பம் நேரடியாக தொட்டியை தாக்காதவாறு ஜன்னலை மூடுங்கள். கூடுமானவரை வெப்பம் தாக்காத பகுதியில் தொட்டியினை வைப்பது நல்லது.

டேங்க் மீது சீலிங்கில் குட்டி பேன்களை மாட்டி சுழல விடுங்கள். இதனால் தண்ணீர் குளுமையாகும்.

மீன்வளத்துறையினர் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் கோடையிலும் வீட்டுத் தொட்டிகளில் மீன்கள் துள்ளி விளையாடும்.

Story first published: Wednesday, April 25, 2012, 13:56 [IST]
Desktop Bottom Promotion