Just In
- 27 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 54 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டில் கல் உப்பை ஒரு டம்ளர் நீரில் போட்டு இந்த இடத்துல வெச்சா.. பணப் பிரச்சனையே வராதாம்...
கல் உப்பு வாஸ்து குறைபாடுகளைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அந்த கல் உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
Vastu Tips With Salt: நாம் அனைவருமே பணம் சம்பாதிப்பதற்கு தான் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் அனைவரது கனவும் நிறைய பணம் சம்பாதிப்பதாகவே இருக்கும். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு உழைக்கும் போது, அதற்கான பலன் கிடைக்காத போது ஏமாற்றம் மிச்சமாக இருக்கும். இதற்கு வாஸ்து குறைபாடும் ஓர் முக்கிய காரணம் என்பது தெரியுமா? ஆம், ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்து தோஷங்களைக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் உள்ளோரின் கையில் பணம் நிலைத்திருக்காது மற்றும் நிறைய பணப்பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நம் வீட்டு சமையலறையில் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் உப்பு. அதுவும் கல் உப்பு வாஸ்து குறைபாடுகளைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அந்த கல் உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
பணப்பற்றாக்குறை நீங்க...
நீங்கள் பணப் பற்றாக்குறையை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் வாஸ்துப்படி ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்து, அதில் கல் உப்பை நிரப்பி வீட்டில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பணப்பற்றாக்குறை நீங்குவதோடு, வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும்.
வீட்டில் நிறைய பணம் சேர...
உங்கள் வீட்டில் நிறைய பணம் சேர வேண்டுமா? அப்படியென்றால் ஒரு கண்ணாடி பௌலில் சிறிது கல் உப்பை எடுத்து, அத்துடன் 4-5 கிராம்புகளை போட்டு, வீட்டின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் பணம் அதிகம் சேர்வதோடு, எப்போதும் செழிப்பாக இருக்கும். மேலும் வீட்டின் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
எதிர்மறை ஆற்றல் வெளியேற...
வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்க வேண்டுமானால், குளியலறையில் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு ஒரு மூலையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். ஆனால் இந்த கண்ணாடி டம்ளரை யாரும் தொட முடியாத இடத்தில் வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை நீரை மாற்ற வேண்டும்.
திருமண வாழ்வில் உள்ள பிரச்சனை குறைய...
உங்கள் திருமண வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஒரு சிறு கண்ணாடி டம்ளரில் கல் உப்பை நிரப்பி, அதை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருங்கள். இது உறவில் இனிமையை ஏற்படுத்தும்.
குறிப்பு:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் வைக்கும் உப்பை ஸ்டீல் பாத்திரங்களில் வைத்து பயன்படுத்தக்கூடாது. எப்போதுமே உப்பை கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் தான் வைத்து பயன்படுத்த வேண்டும். ஸ்டீல் பாத்திரத்தில் உப்பை வைத்து பயன்படுத்தினால், வீட்டின் அமைதி பாதிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)