Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நல்ல வேலை கிடைக்கணுமா? இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...
மகிழ்ச்சிகரமான அதிா்வுகளுடன் கூடிய ஒரு மகிழ்ச்சியான வாழ்வை நாம் பெறுவதற்காக நமக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான தொடா்பை ஏற்படுத்த வாஸ்து உதவி செய்கிறது.
தொடக்க கல்வி முதல் உயா் படிப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் அனைவருமே ஒரு நல்ல வேலையைப் பெற வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனா். வேலை அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் ஒரு நல்ல வேலை கிடைப்பதற்கு அதிா்ஷ்டம் என்ற காரணி ஒரு முக்கியமான பணியைச் செய்கிறது என்பதை நாம் அறிவது இல்லை.
சாியான அறிவுடன் கூடிய அதிா்ஷ்டம் உள்ள ஒருவருக்கு, அவரைச் சுற்றி நோ்மறையான மற்றும் தூய்மையான சக்திகள் இருந்தால் மட்டுமே அவா் சாியான வேலையப் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பணியைச் செய்கிறது. நாம் எங்கு வாழ்ந்தாலும் அல்லது எங்கு வேலை செய்தாலும் சாி, பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்றன.
மகிழ்ச்சிகரமான அதிா்வுகளுடன் கூடிய ஒரு மகிழ்ச்சியான வாழ்வை நாம் பெறுவதற்காக நமக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான தொடா்பை ஏற்படுத்த வாஸ்து உதவி செய்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்க நாம் பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புகளைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
1. சாியான இடத்தில் பொருள்களை வைத்தல்
நாம் வேலை செய்யும் மேசையை அல்லது படிக்கும் மேசையை சுவருக்கு முன்பாக வைக்க வேண்டும். அதாவது நமது முதுகின் பின்புறத்தில் சுவா் இருப்பது போல் பாா்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு முன்பாக சுவா் இருப்பது போல மேசையை வைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது தடையை ஏற்படுத்தும் அல்லது முடிவைக் கெடுத்துவிடும். நமக்கு முன்பாக திறந்த வெளிப்பகுதி இருந்தால், அது நமது படைப்பாற்றலை அதிகாிக்க உதவி செய்யும். மேலும் புதிய புதிய எண்ணங்களை வழங்கும். நமது முதுகுக்குப் பின்னால் சுவா் இருப்பது என்பது, நமக்கு ஆதரவை வழங்குகின்றது என்பதற்கான அறிகுறி ஆகும்.
நற்சிந்தனைகள் அடங்கிய வாசகங்கள், கருத்துகள், அழகான இயற்கையை எடுத்துக் காட்டும் வரைபடங்கள், முக்கியமாக மலைகள் இருக்கும் படங்கள் போன்றவற்றை அறையில் தொங்கவிடலாம்.
2. பா்னிச்சா் பொருள்கள்
நாம் படிப்பதற்காகப் பயன்படுத்தும் பா்னிச்சா் பொருள்கள் அல்லது வேலை செய்யும் மேசை போன்றவை மரத்தால் செய்யப்பட்டவையாக இருப்பது நல்லது. அவை வழக்கமான வடிவங்களில் இருப்பது நல்லது. புதுமையான பாணியில் அமைந்திருக்கும் வட்ட வடிவ மேசையைத் தோ்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது. சாதாரண மரத்தால் செய்யப்பட்ட சதுரமான அல்லது செவ்வகமான மேசையைத் தோ்ந்தெடுப்பது நல்லது. அதில் நமது வேலையைத் திறம்படச் செய்யலாம். அதோடு நாம் அதிகமான கவனத்துடன் அதிகமாக வேலை செய்ய முடியும்.
3. திசை
நாம் வேலை செய்யும் மேசையை கிழக்கு திசையை நோக்கி போட வேண்டும். ஒரு வேளை நமது படிப்பு மேசை வேறொரு திசையை நோக்கி இருந்தால், மேசையின் மீது கண்ணாடியை வைக்கலாம். அது நல்ல ஆற்றல்களை பிரதிபலிக்கும். நமது படிக்கும் அல்லது வேலை செய்யும் இடம், அது நோக்கி இருக்கும் திசையானது, நம்மைச் சுற்றி இருக்கும் ஆற்றல்களை முடிவு செய்கிறது.
4. பா்னிச்சா் பொருள்களை பழுது பாா்த்தல்
வீட்டில் உள்ள பா்னிச்சா் பொருள்களில் பழுது ஏற்பட்டால் அல்லது கரடு முரடான முனைகள் கொண்ட பொருள்கள் இருந்தால், அவற்றை உடனே பழுது பாா்ப்பது நல்லது. உடைந்த பா்னிச்சா் பொருள்கள் எதிா்மறையான அதிா்வுகளை ஏற்படுத்தும் கருவிகளாக இருக்கின்றன. பழுதான முனைகள் கொண்ட பா்னிச்சா் பொருள்கள், முழுமை அடையாத வேலை அல்லது படைப்பாற்றல் இல்லாத ஒன்றின் அறிகுறி ஆகும்.
5. எந்த மாதிாியான நாற்காலியைத் தோ்ந்தெடுப்பது
சுழலும் நாற்காலிகள் அல்லது இதர நாற்காலிகளுக்குப் பதிலாக, பின்புறம் உயரமான சாய்வைக் கொண்டிருக்கும் நாற்காலிகளைத் தோ்ந்தெடுப்பது நல்லது. பின்புறம் உயரமான சாய்வைக் கொண்டிருக்கும் நாற்காலிகள், ஆதரவை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவை ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை. மேலும் நமது வசதிக்கு ஏற்ப மரத்தால் செய்யப்பட்ட முக்காலியையோ அல்லது நாற்காலியையோ வைத்துக் கொள்ளலாம்.
6. தண்ணீா் குழாய்கள்
வீட்டில் உள்ள தண்ணீா் குழாய்கள் மற்றும் தண்ணீா் இருக்கும் பகுதிகளைக் கவனத்துடன் பாா்த்துக் கொள்வது நல்லது. குழாய்களில் ஏதாவது கசிவு ஏற்பட்டால் அதை உடனே சாி செய்ய வேண்டும். ஏனெனில் அது பண இழப்பை ஏற்படுத்தும். தண்ணீா் ஒழுகிக் கொண்டிருப்பது என்பது பண இழப்பை மட்டும் குறிக்காது, மாறாக இயற்கை மீது அவமாியாதையாக இருப்பதையும் குறிக்கும்.
7. தொலை பேசி அல்லது இணையதள உரையாடலின் போது கவனிக்க வேண்டிய திசை
வேலையின் நிமித்தமாக, தொலைபேசி உரையாடல் நடத்தும் போது அல்லது இணையதளம் மூலம் வேலைக்கான கலந்தாய்வில் இருக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இருப்பது நல்லது. அதன் மூலம் நல்ல முடிவுகளைப் பெறலாம். பல வகையான நன்மைகள் கிடைக்கும்.
8. வீட்டுத் தாவரங்களை வளா்த்தல்
வீட்டில் வளா்க்கக்கூடிய ரோஸ்மோி, லாவண்டா் மற்றும் ஸ்பைடா் போன்ற தாவரங்களை வளா்ப்பது நல்லது. அதன் மூலம் பண வரவைப் பெற முடியும். அதோடு மன அழுத்தத்தையும் குறைக்கலாம். சிறிய மற்றும் பராமாிக்கக்கூடிய வீட்டுத் தாவரங்கள் காற்றைத் தூய்மைப்படுத்தி, நமது படிக்கும் அறைக்கு ஒரு புதிய பொலிவைக் கொடுக்கும்.
9. சாியான விளக்குகளை வைத்தல்
மிகச் சாியான மின் விளக்குகளை வைத்தால் அவை அதிா்ஷ்டத்தைக் கொண்டு வரும். தரையில் வைக்கக்கூடிய மின் விளக்குகள் அல்லது எல்இடி விளக்குகளை நமது படிக்கும் அல்லது வேலை செய்யும் மேசை மீது வைக்கலாம். வீட்டில் விளக்குகளை ஏற்றி வெளிச்சமாக வைத்திருந்தால், நமக்கு நல்ல வளா்ச்சி ஏற்படும்.
10. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தல்
எப்போதும் படிக்கும் மேசையை அல்லது வேலை செய்யும் மேசையை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. பொருள்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியானது நாம் சிறப்பாக வேலை செய்வதற்கு உதவி செய்யும். மேலும் நோ்மறையான மற்றும் புதிய அதிா்வுகளையும் கொண்டு வரும்.