Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து வெளிவரும் பாலின் நாற்றத்தை நீக்க சில வழிகள்!!!
வீட்டில் சமைக்க பயன்படுத்தும் நிறைய பாத்திரங்களில் பால், முட்டை, பூண்டு, மீன், இறைச்சி போன்றவற்றின் துர்நாற்றம் வீசும். அத்தகைய துர்நாற்றம் வீசும் பாத்திரங்களை எவ்வளவு தான் சோப்பு பயன்படுத்தி தேய்த்து கழுவினாலும், அதிலிருந்து வெளிவரும் நாற்றம் மட்டும் போகாது. ஆனால் ஒருசில ட்ரிக்ஸ் பயன்படுத்தினால், நிச்சயம் அத்தகைய துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
இப்போது அதில் பால் துர்நாற்றத்தை பாத்திரம், குழந்தைகள் பால் குடிக்கும் பாட்டில், துணி போன்றவற்றில் இருந்து நீக்குவது எப்படி என்று என்று பார்ப்போம். குறிப்பாக பால் துர்நாற்றமானது நாட்கள் போக போக அழுகிய முட்டையின் நாற்றம் போல் வீசும். ஆகவே அப்படி நாற்றம் வீசுவதற்குள், கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸ் பயன்படுத்தி பாருங்கள். இதனால் பாலின் நாற்றமானது நீங்கிவிடும்.

உடனே அலசவும்
பாட்டில், கார்பெட், துணி போன்றவற்றில் பாலின் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், அதனை காய வைக்காமல், ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும். அதிலும் சோப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். அதுவே துணியில் என்றால், சுத்தமான நீரில் அலசிவிட்டு, பின் சோப்பு பயன்படுத்தி துவைக்க வேண்டும்.

சுத்தப்படுத்தும் நீர்மம்
கடைகளில் விற்கப்படும் நறுமணமிக்க நீர்மங்களைக் கொண்டு துணி மற்றும் தரைவிரிப்புக்களில் உள்ள பால் நாற்றத்தைப் போக்கலாம். இல்லாவிட்டால் சோப்பு நீர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிலும் சோப்பு நீர் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை சோப்பு நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள நறுமணம் அனைத்து விதமான துர்நாற்றத்தையும் போக்கிவிடும். அதற்கு எலுமிச்சை துண்டைக் கொண்டு, பாத்திரங்கள் மற்றும் பாட்டிலை தேய்த்து கழுவ வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதில் பாத்திரங்களையோ அல்லது பாட்டிலையோ ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதனால் பாலின் துர்நாற்றம் போய்விடுவதோடு, கறைகள் முற்றிலும் நீங்கிவிடும்.

வினிகர்
பால் கூட கறைகளை ஏற்படுத்தும். எனவே அப்போது வினிகரைப் பயன்படுத்தினால், பாலினால் ஏற்பட்ட கறைகள் நீங்குவதோடு, பாலின் துர்நாற்றமும் போய்விடும்.

சுடுநீர்
பாலை காய்ச்சிய பின்னர், அதில் சுடுநீரை ஊற்றி ஊற வைத்து, பின் சோப்பபு பயன்படுத்தி கழுவினாலும் துர்நாற்றம் நீங்கும். ஒருவேளை அப்படி போகாவிட்டால், அப்போது எலுமிச்சை துண்டு கொண்டு தேய்த்து கழுவுங்கள்.



Click it and Unblock the Notifications











