அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து வெளிவரும் பாலின் நாற்றத்தை நீக்க சில வழிகள்!!!

By Babu

வீட்டில் சமைக்க பயன்படுத்தும் நிறைய பாத்திரங்களில் பால், முட்டை, பூண்டு, மீன், இறைச்சி போன்றவற்றின் துர்நாற்றம் வீசும். அத்தகைய துர்நாற்றம் வீசும் பாத்திரங்களை எவ்வளவு தான் சோப்பு பயன்படுத்தி தேய்த்து கழுவினாலும், அதிலிருந்து வெளிவரும் நாற்றம் மட்டும் போகாது. ஆனால் ஒருசில ட்ரிக்ஸ் பயன்படுத்தினால், நிச்சயம் அத்தகைய துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

இப்போது அதில் பால் துர்நாற்றத்தை பாத்திரம், குழந்தைகள் பால் குடிக்கும் பாட்டில், துணி போன்றவற்றில் இருந்து நீக்குவது எப்படி என்று என்று பார்ப்போம். குறிப்பாக பால் துர்நாற்றமானது நாட்கள் போக போக அழுகிய முட்டையின் நாற்றம் போல் வீசும். ஆகவே அப்படி நாற்றம் வீசுவதற்குள், கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸ் பயன்படுத்தி பாருங்கள். இதனால் பாலின் நாற்றமானது நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடனே அலசவும்

உடனே அலசவும்

பாட்டில், கார்பெட், துணி போன்றவற்றில் பாலின் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், அதனை காய வைக்காமல், ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும். அதிலும் சோப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். அதுவே துணியில் என்றால், சுத்தமான நீரில் அலசிவிட்டு, பின் சோப்பு பயன்படுத்தி துவைக்க வேண்டும்.

சுத்தப்படுத்தும் நீர்மம்

சுத்தப்படுத்தும் நீர்மம்

கடைகளில் விற்கப்படும் நறுமணமிக்க நீர்மங்களைக் கொண்டு துணி மற்றும் தரைவிரிப்புக்களில் உள்ள பால் நாற்றத்தைப் போக்கலாம். இல்லாவிட்டால் சோப்பு நீர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிலும் சோப்பு நீர் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை சோப்பு நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள நறுமணம் அனைத்து விதமான துர்நாற்றத்தையும் போக்கிவிடும். அதற்கு எலுமிச்சை துண்டைக் கொண்டு, பாத்திரங்கள் மற்றும் பாட்டிலை தேய்த்து கழுவ வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதில் பாத்திரங்களையோ அல்லது பாட்டிலையோ ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதனால் பாலின் துர்நாற்றம் போய்விடுவதோடு, கறைகள் முற்றிலும் நீங்கிவிடும்.

வினிகர்

வினிகர்

பால் கூட கறைகளை ஏற்படுத்தும். எனவே அப்போது வினிகரைப் பயன்படுத்தினால், பாலினால் ஏற்பட்ட கறைகள் நீங்குவதோடு, பாலின் துர்நாற்றமும் போய்விடும்.

சுடுநீர்

சுடுநீர்

பாலை காய்ச்சிய பின்னர், அதில் சுடுநீரை ஊற்றி ஊற வைத்து, பின் சோப்பபு பயன்படுத்தி கழுவினாலும் துர்நாற்றம் நீங்கும். ஒருவேளை அப்படி போகாவிட்டால், அப்போது எலுமிச்சை துண்டு கொண்டு தேய்த்து கழுவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion