Just In
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வெங்காயம், பூண்டு நாற்றத்தை ஏற்படுத்துதா...?
நாற்றத்தைப் போக்க இதோ சில டிப்ஸ்...
கைகளில் இருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் கைகளில் அந்த மணமானது நீண்ட நேரம் இருக்கும். அப்போது உள்ளங்கைகளில் சிறிது உப்பை வைத்து 2 நிமிடம் தேய்த்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். வேண்டுமென்றால் உப்பை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, கைகளில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் நாற்றமானது போவதுடன், சருமத்திற்கும் நல்லது.
2. தக்காளி ஜூஸில் கைகளை 4 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
3. எலுமிச்சை பழத்துண்டு சிறிது எடுத்து கைகளில் தேய்த்தால், அந்த நாற்றமானது போய்விடும்.
பாத்திரங்களில் இருந்து போக...
1. பாத்திரங்களை டிடர்ஜன்ட் சோப்பால் கழுவி, பின் சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து கழுவவும். இதனால் பாத்திரங்களில் இருந்து நாற்றமானது போகும்.
2. டம்ளர்களில் இருந்து வெங்காயம், பூண்டு நாற்றம் அவ்வளவு சுலபமாக போகாது. அதற்கு சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து, பின் டிடர்ஜன்ட் சோப்பால் அல்லது பேக்கிங் சோடாவால் கழுவலாம்.
வாயிலிருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் வாயில் இருந்து வரும் நாற்றத்தைப் போக்க, உண்டப் பின் பேஸ்ட்டால் கழுவினால் நாற்றமானது போய்விடும்.
2. உணவு உண்டப் பிறகு சிறிது கடுகு சாப்பிட்டால், வாயில் இருந்து வரும் நாற்றத்தை தடுக்கலாம்.
3. வேண்டுமென்றால் சாப்பிட்டப் பின் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், வாயானது புத்துணர்ச்சியுடன், நாற்றம் இல்லாமல் இருக்கும்.
உடைகளில் இருந்து போக...
1. உடைகளில் இருந்து வெங்காயம் மற்றும் பூண்டு நாற்றத்தை தடுக்க எலுமிச்சை சிறந்தது. முதலில் துணியை நனைத்து, பின் 20-25 நிமிடம் எலுமிச்சைப்பழ சாற்றில் ஊற வைத்து அலசினால், உடைகளில் இருந்து நாற்றமானது போய்விடும்.
2. மற்றொன்று பேக்கிங் சோடாவால் நாற்றத்தை போக்குவது. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை, அரை வாளி தண்ணீரில் போட்டு, பின் துணிகளை அதில் ஊற வைத்து துவைத்தால் நல்லது.