Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
வெங்காயம், பூண்டு நாற்றத்தை ஏற்படுத்துதா...?

நாற்றத்தைப் போக்க இதோ சில டிப்ஸ்...
கைகளில் இருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் கைகளில் அந்த மணமானது நீண்ட நேரம் இருக்கும். அப்போது உள்ளங்கைகளில் சிறிது உப்பை வைத்து 2 நிமிடம் தேய்த்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். வேண்டுமென்றால் உப்பை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, கைகளில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் நாற்றமானது போவதுடன், சருமத்திற்கும் நல்லது.
2. தக்காளி ஜூஸில் கைகளை 4 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
3. எலுமிச்சை பழத்துண்டு சிறிது எடுத்து கைகளில் தேய்த்தால், அந்த நாற்றமானது போய்விடும்.
பாத்திரங்களில் இருந்து போக...
1. பாத்திரங்களை டிடர்ஜன்ட் சோப்பால் கழுவி, பின் சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து கழுவவும். இதனால் பாத்திரங்களில் இருந்து நாற்றமானது போகும்.
2. டம்ளர்களில் இருந்து வெங்காயம், பூண்டு நாற்றம் அவ்வளவு சுலபமாக போகாது. அதற்கு சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து, பின் டிடர்ஜன்ட் சோப்பால் அல்லது பேக்கிங் சோடாவால் கழுவலாம்.
வாயிலிருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் வாயில் இருந்து வரும் நாற்றத்தைப் போக்க, உண்டப் பின் பேஸ்ட்டால் கழுவினால் நாற்றமானது போய்விடும்.
2. உணவு உண்டப் பிறகு சிறிது கடுகு சாப்பிட்டால், வாயில் இருந்து வரும் நாற்றத்தை தடுக்கலாம்.
3. வேண்டுமென்றால் சாப்பிட்டப் பின் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், வாயானது புத்துணர்ச்சியுடன், நாற்றம் இல்லாமல் இருக்கும்.
உடைகளில் இருந்து போக...
1. உடைகளில் இருந்து வெங்காயம் மற்றும் பூண்டு நாற்றத்தை தடுக்க எலுமிச்சை சிறந்தது. முதலில் துணியை நனைத்து, பின் 20-25 நிமிடம் எலுமிச்சைப்பழ சாற்றில் ஊற வைத்து அலசினால், உடைகளில் இருந்து நாற்றமானது போய்விடும்.
2. மற்றொன்று பேக்கிங் சோடாவால் நாற்றத்தை போக்குவது. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை, அரை வாளி தண்ணீரில் போட்டு, பின் துணிகளை அதில் ஊற வைத்து துவைத்தால் நல்லது.



Click it and Unblock the Notifications