Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
வெங்காயம், பூண்டு நாற்றத்தை ஏற்படுத்துதா...?

நாற்றத்தைப் போக்க இதோ சில டிப்ஸ்...
கைகளில் இருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் கைகளில் அந்த மணமானது நீண்ட நேரம் இருக்கும். அப்போது உள்ளங்கைகளில் சிறிது உப்பை வைத்து 2 நிமிடம் தேய்த்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். வேண்டுமென்றால் உப்பை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, கைகளில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் நாற்றமானது போவதுடன், சருமத்திற்கும் நல்லது.
2. தக்காளி ஜூஸில் கைகளை 4 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
3. எலுமிச்சை பழத்துண்டு சிறிது எடுத்து கைகளில் தேய்த்தால், அந்த நாற்றமானது போய்விடும்.
பாத்திரங்களில் இருந்து போக...
1. பாத்திரங்களை டிடர்ஜன்ட் சோப்பால் கழுவி, பின் சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து கழுவவும். இதனால் பாத்திரங்களில் இருந்து நாற்றமானது போகும்.
2. டம்ளர்களில் இருந்து வெங்காயம், பூண்டு நாற்றம் அவ்வளவு சுலபமாக போகாது. அதற்கு சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து, பின் டிடர்ஜன்ட் சோப்பால் அல்லது பேக்கிங் சோடாவால் கழுவலாம்.
வாயிலிருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் வாயில் இருந்து வரும் நாற்றத்தைப் போக்க, உண்டப் பின் பேஸ்ட்டால் கழுவினால் நாற்றமானது போய்விடும்.
2. உணவு உண்டப் பிறகு சிறிது கடுகு சாப்பிட்டால், வாயில் இருந்து வரும் நாற்றத்தை தடுக்கலாம்.
3. வேண்டுமென்றால் சாப்பிட்டப் பின் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், வாயானது புத்துணர்ச்சியுடன், நாற்றம் இல்லாமல் இருக்கும்.
உடைகளில் இருந்து போக...
1. உடைகளில் இருந்து வெங்காயம் மற்றும் பூண்டு நாற்றத்தை தடுக்க எலுமிச்சை சிறந்தது. முதலில் துணியை நனைத்து, பின் 20-25 நிமிடம் எலுமிச்சைப்பழ சாற்றில் ஊற வைத்து அலசினால், உடைகளில் இருந்து நாற்றமானது போய்விடும்.
2. மற்றொன்று பேக்கிங் சோடாவால் நாற்றத்தை போக்குவது. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை, அரை வாளி தண்ணீரில் போட்டு, பின் துணிகளை அதில் ஊற வைத்து துவைத்தால் நல்லது.



Click it and Unblock the Notifications