சிட்ரஸ் பழங்களை வெச்சு வீட்டையும் சுத்தம் பண்ணலாம்!!!

By Maha

Citrus fruits
சிட்ரஸ் பழங்களில் உடலுக்கு தேவையான புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை உண்பதால், உடல் எடை குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த பழங்களில் இருந்து வரும் சாற்றை மட்டும் நாம் குடித்துவிட்டு, இதன் தோலை வெளியே தூக்கிப் போடாமல், இதனை சருமத்திற்கு அல்லது வீட்டை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தலாம். ஆகவே அவ்வாறு அந்த பழத்தை வைத்து எவ்வாறெல்லாம் சுத்தம் செய்யலாம் என்பதை சற்று படித்து பாருங்களேன்...

எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை வைத்து, காப்பர், மெட்டல் மற்றும் அலங்காரப் பொருட்களை மிகவும் அழகாக எந்த கறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் கடினமாக பிளாஸ்டிக், டப்பர்வேர், கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றில் இருக்கும் கறைகள் மற்றும் இரும்புகளில் இருக்கும் துருக்கறைகள் போன்ற அனைத்தையும் மிகவும் சுத்தமாக நீக்கும். அதுமட்டுமல்லாமல், துணிகளில் இருக்கும் கறைகளையும் எலுமிச்சையின் சாறு மற்றும் தோலை வைத்தும் நீக்கலாம். அதிலும் எலுமிச்சையின் தோலை எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு அரைத்து, பேஸ்ட் போல் செய்தும் கறையை நீக்கலாம்.

இதன் தோலை குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் வைத்தால், நாற்றம் அடிக்காமல் இருக்கும். மேலும் அதன் தோலை வைத்து, காய்கறி நறுக்கும் தட்டில் தேய்த்தால், தட்டில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். கைகளில் அடிக்கும் வெங்காயம், பூண்டு, மீன் மற்றும் சிக்கன் போன்றவற்றை தொட்டு சமைக்கும் போது, கைகளில் ஏற்படும் நாற்றத்தை எலுமிச்சையின் ஒரு துண்டுகளை வைத்து தேய்த்தால், நாற்றம் போய்விடும்.

ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தின் தோல் மற்றும் சதைப்பகுதி நிறையவற்றை சுத்தம் செய்யப் பயன்படுகிறது. ஆகவே ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு காய வைத்து, அதனை நன்கு பொடி செய்து கொள்ளவும். பின் அதில் சிறிது வெள்ளை வினிகரை கலந்து, பாத்திரங்கள், டேபிள், தட்டுக்கள் போன்றவற்றை தேய்த்தால், அழுக்குகள் பறந்தே போய்விடும். மேலும் நீண்ட நாட்களாக துணிகளில் போகாத கறைகளையும், இதனைக் கொண்டு நீக்கலாம்.

ஆரஞ்சு பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ரூம் ஃப்ரஸ்னர் ஆக பயன்படுத்தலாம். மேலும் ஆரஞ்சு பழத்தின் துண்டுகளை குப்பைத் தொட்டிகளில் போட்டாலும், அங்கு கிருமிகள் வராமல் இருப்பதோடு, துர்நாற்றமும் வராமல் இருக்கும்.

திராட்சை : அனைவருக்கும தெரியும் திராட்சை ஒரு சிறந்த, சருமத்திற்கு ஏற்ற ஒரு ஸ்கரப், ஃபேஸ் பேக் மற்றும் துளைகளை போக்கும் திறன் கொண்டது. ஆகவே வீட்டை சுத்தம் செவ்தற்கு திராட்சையின் தோலை காய வைத்து, அதில் உப்பை போட்டு, பாத்திரங்கள் மற்றும் இதரப் பொருட்களைச் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இது எந்த ஒரு கறையையும் நீக்கவல்லது. ஆரஞ்சை போலவே, திராட்சையின் தோலை காய வைத்து அரைத்து அல்லது அதன் ஜூஸை, வெள்ளை வினிகருடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

ஆகவே இவையெல்லாம், உடலை மட்டும் பிட்டாக அழகாக வைக்கப் பயன்படுவதில்லை, வீட்டில் இருக்கும் கறைகளை நீக்கியும் அழகாக வைக்கிறது.

Story first published: Friday, August 31, 2012, 16:26 [IST]
Desktop Bottom Promotion