Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
வீட்டை அழகாக்கும் நிழல் மரங்கள்

நிழல் தரும் மரங்கள்
மரங்கள் சூழ்ந்த இடத்தை சோலை என்பர். சோலையின் அழகை எல்லோரும் விரும்புவார்கள். ஏதாவது ஒரு காரண காரியத்தோடுதான் மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுந்த இடத்தில் நடப்படுகின்றன. இயற்கைத் தோட்டம் அமைக்கும் போது மரங்களின் பங்கு அதிகம். எங்கும் எப்போதும் கட்டிடங்களையே பார்த்து பார்த்து சலித்த கண்களுக்கு அவைகளோடு பசுமையான மரங்களையும் செடிகளையும் காணும்போது அந்த சலிப்பு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படகிறது. வீட்டை அழகு படுத்தும் மரங்களை மலர் மரங்கள், நிழல் மரங்கள், இலை அழகு மரங்கள் என பிரிக்கலாம்.
மரம் நட ஏற்ற இடம்
மரங்களை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவைகளை நடுவதற்கான இடத்தை தேர்வு செய்வது. பெரும்பாலும் கட்டிடங்களுக்கு அழகூட்டும் மரங்களை நடுவதற்கு முன் அவைகளின் உபயோகங்களுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து நடவேண்டும்.
நிழல் மட்டும் தேவைப்படும் இடங்களில் கட்டிடத்திலிருந்து ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு மரங்கள் நட வேண்டும். நிழல் மரங்களின் வடிவங்களைப் பொருத்து நிழல் கொடுக்கும் தன்மை அமையும். நல்ல நிழல் பெற கிளைகள் நீளமாகவும் நாற்புறங்களிலும் வட்ட வடிவமாக படர்ந்து வளரும் மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் நிழல் மரங்கள் அதன் வடிவங்களைப் பொருத்து பல விதமாக பிரிக்கப்படுகின்றன.
மரங்களில் பல வித வடிவங்கள் உள்ளன. அவை கோழி முட்டை வடிவம், உருண்டை வடிவம், தொங்கும் கிளைகளுடையது, குடை வடிவமுள்ளது, கூம்பு வடிவமுள்ளது, நேராக மேல் நோக்கி வளர்வது என பலவகையாக பிரிக்கப்படுகிறது.
வேண்டாத இடங்களை பளிச்சென்று கண்களுக்கு தெரியா வண்ணம் மறைப்பதற்கு மரங்கள் உதவுகின்றன. இதற்காக மரங்களை கூட்டமாக நடும்போது மரங்களின் பலவித வடிவங்களும் , இலை , மலர் ஆகியவைகளின் வண்ணங்களும் கண்களுக்கு புலப்படாமல் செய்து விடுகின்றன.
தூசுகள் தடுக்கப்படும்
பின்புற காட்சிக்காக நடப்படும் மரங்கள் வளர்ந்து முதிர்ந்ததும் அவைகளின் கிளைகள் கட்டத்தில் கூரைக்கு மேலாக இருக்க வேண்டும் இம்மரங்களின் இலைகள் கூரையின் தோற்றத்தை எடுப்பாக காட்டும். கட்டிடத்தின் முன்பக்கமிருந்து பார்க்கும் போது இத்தகைய மரங்களினால் ஒரு பின்புற காட்சி அமைப்பு கிட்டும். உயரமாக , அடர்த்தியாக வளரக்கூடிய இலையுதிர்க்கால மரங்களை பல வரிசைகளில் அடர்த்தியாக நடும்போது காற்றின் வேகம் குறைக்கப்படுகிறது. மேலும் காற்றில் வரும் தூசுகளையும் தடுக்கிறது.
மலர் மரங்கள்
கண்கவர் மலர்களுடன் விநோதமான கிளைகளுடன் கூடிய சிறிய ஊசி இலைகளுடன் கூடிய மரங்களை தனி ஒரு மரமாக நட்டால் அந்த இடத்திற்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது. புல் தரையின் ஓரம், கட்டிடத்தின் முன் பக்க ஓரம், மதில் ஓரம் நடப்படும் இத்தகைய மரங்கள் கவர்ச்சியுடன் மிளிரும்.



Click it and Unblock the Notifications











