Latest Updates
-
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
வேஸ்ட்டான நியூஸ் பேப்பரை தூக்கிப் போடாதீங்க...

* வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் இருந்தால், அவற்றை நன்கு சுத்தமாக எந்த ஒரு அழுக்குமின்றி அழகாக வைப்பதற்கு, பேப்பரை பயன்படுத்தி, அந்த பொருட்களை சுத்தம் செய்து அழகாக்கலாம். அதற்கு பேப்பரை நீரில் நனைத்து துடைத்து, பின் நீரில் நனைக்காத பேப்பரால் துடைத்தால், கண்ணாடிப் பொருட்கள் நன்கு பளிச்சென்று இருக்கும்.
* வீட்டின் ஷெல்ப்களில் கவர் போன்று பயன்படுத்தலாம். இதனால் வீட்டின் ஷெல்ப்களில் எந்த ஒரு கறை மற்றும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். அதிலும் இதனை கிச்சன், புத்தக அறை, பீரோ போன்றவற்றின் அடியில் வைத்து, அதன் பின்னர் அந்தந்த பொருட்களை வைத்தால், பார்ப்பதற்கு சுத்தமாகவும் அழகாகவும் காணப்படும்.
* அனைவருக்குமே பேப்பருக்கு ஈரத்தை உறிஞ்சும் திறன் அதிகம் உள்ளது என்பது நன்கு தெரியும். ஆகவே அலுவலகத்திற்கு அவசரமாக செல்லும் போது ஷூக்களில் தண்ணீர் பட்டுவிட்டால், அந்த ஈரத்தை பேப்பரால் துடைக்கலாம். வேண்டுமெனில் வீட்டில் எங்கேனும் காப்பி அல்லது டீ போன்றவை ஊற்றிவிட்டால், உடனே பேப்பரை வைத்து துடைத்தால், உடனே அந்த ஈரத்தை பேப்பர் உறிஞ்சிவிடும்.
* வீட்டை பேப்பர் வைத்து அலங்கரிக்கலாம். அதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதிலும் பூக்களை செய்து, அதற்கு கலர் அடித்து சோக்கேஸில் வைக்கலாம். இல்லையெனில் பேப்பர் லேம்ப் செய்யலாம்.
* குழந்தைகளுக்கு தூக்கிப் போட இருக்கும் பேப்பரை வைத்து விளையாட்டுப் பொருட்கள் செய்து தரலாம். அதிலும் அந்த பொருட்களில் கப்பல், விமானம், மிருகம், பறவை போன்றவற்றை செய்து, அவர்களுக்கு விளையாட கொடுக்கலாம். வேண்டுமெனில் அந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து அவர்களது அறையை அலங்கரிக்கலாம்.
* எங்காவது வெளியே செல்லும் போது அதிகமான அளவில் லிப்ஸ்டிக் போட்டுவிட்டால், டிஷ்யூ பேப்பர் போல் பேப்பரை வைத்து, பிரஸ் செய்தால், அந்த லிப்ஸ்டிக் சரியாகிவிடும்.
* காய்கறிகளை நீண்ட நாட்கள் வாடாமல், பசுமையாக வைப்பதற்கு, பேப்பரை அந்த காய்கறிகளின் மீது சுற்றிவிட்டால், காய்கறிகள் நன்கு நீண்ட நாட்கள் இருக்கும்.
* தோட்டத்தில் விதைகளை விதைத்து செடி வைக்க வேண்டும் என்று நனைத்தால், அப்போது அந்த விதைகளை ஒரு ஈரமான பேப்பரினால் சுற்றி, 2 வாரம் வைத்து, பின் பார்த்தால், விதைகள் முளைகட்டியிருக்கும். பின் எடுத்து அந்த விதைகளை விதைத்தால், செடி சூப்பராக வளரும்.
என்ன இதெல்லாம் ட்ரை பண்ணி பார்த்திருக்கிறீர்களா? வேற எப்படி பேப்பரை யூஸ் பண்ணலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications