Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வேஸ்ட்டான நியூஸ் பேப்பரை தூக்கிப் போடாதீங்க...

* வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் இருந்தால், அவற்றை நன்கு சுத்தமாக எந்த ஒரு அழுக்குமின்றி அழகாக வைப்பதற்கு, பேப்பரை பயன்படுத்தி, அந்த பொருட்களை சுத்தம் செய்து அழகாக்கலாம். அதற்கு பேப்பரை நீரில் நனைத்து துடைத்து, பின் நீரில் நனைக்காத பேப்பரால் துடைத்தால், கண்ணாடிப் பொருட்கள் நன்கு பளிச்சென்று இருக்கும்.
* வீட்டின் ஷெல்ப்களில் கவர் போன்று பயன்படுத்தலாம். இதனால் வீட்டின் ஷெல்ப்களில் எந்த ஒரு கறை மற்றும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். அதிலும் இதனை கிச்சன், புத்தக அறை, பீரோ போன்றவற்றின் அடியில் வைத்து, அதன் பின்னர் அந்தந்த பொருட்களை வைத்தால், பார்ப்பதற்கு சுத்தமாகவும் அழகாகவும் காணப்படும்.
* அனைவருக்குமே பேப்பருக்கு ஈரத்தை உறிஞ்சும் திறன் அதிகம் உள்ளது என்பது நன்கு தெரியும். ஆகவே அலுவலகத்திற்கு அவசரமாக செல்லும் போது ஷூக்களில் தண்ணீர் பட்டுவிட்டால், அந்த ஈரத்தை பேப்பரால் துடைக்கலாம். வேண்டுமெனில் வீட்டில் எங்கேனும் காப்பி அல்லது டீ போன்றவை ஊற்றிவிட்டால், உடனே பேப்பரை வைத்து துடைத்தால், உடனே அந்த ஈரத்தை பேப்பர் உறிஞ்சிவிடும்.
* வீட்டை பேப்பர் வைத்து அலங்கரிக்கலாம். அதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதிலும் பூக்களை செய்து, அதற்கு கலர் அடித்து சோக்கேஸில் வைக்கலாம். இல்லையெனில் பேப்பர் லேம்ப் செய்யலாம்.
* குழந்தைகளுக்கு தூக்கிப் போட இருக்கும் பேப்பரை வைத்து விளையாட்டுப் பொருட்கள் செய்து தரலாம். அதிலும் அந்த பொருட்களில் கப்பல், விமானம், மிருகம், பறவை போன்றவற்றை செய்து, அவர்களுக்கு விளையாட கொடுக்கலாம். வேண்டுமெனில் அந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து அவர்களது அறையை அலங்கரிக்கலாம்.
* எங்காவது வெளியே செல்லும் போது அதிகமான அளவில் லிப்ஸ்டிக் போட்டுவிட்டால், டிஷ்யூ பேப்பர் போல் பேப்பரை வைத்து, பிரஸ் செய்தால், அந்த லிப்ஸ்டிக் சரியாகிவிடும்.
* காய்கறிகளை நீண்ட நாட்கள் வாடாமல், பசுமையாக வைப்பதற்கு, பேப்பரை அந்த காய்கறிகளின் மீது சுற்றிவிட்டால், காய்கறிகள் நன்கு நீண்ட நாட்கள் இருக்கும்.
* தோட்டத்தில் விதைகளை விதைத்து செடி வைக்க வேண்டும் என்று நனைத்தால், அப்போது அந்த விதைகளை ஒரு ஈரமான பேப்பரினால் சுற்றி, 2 வாரம் வைத்து, பின் பார்த்தால், விதைகள் முளைகட்டியிருக்கும். பின் எடுத்து அந்த விதைகளை விதைத்தால், செடி சூப்பராக வளரும்.
என்ன இதெல்லாம் ட்ரை பண்ணி பார்த்திருக்கிறீர்களா? வேற எப்படி பேப்பரை யூஸ் பண்ணலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











