Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
மனதை கவரும் மலர் பராமரிப்பு

மலராத மொட்டுக்கள்
பூக்களை அலங்கரிக்க வாங்கும் போது முழுமையாக மலராத மொட்டுக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவை வீட்டினுள் வைக்கும்போது மலரும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு வாடிப்போகாமல் இருக்கும். கூடவே சுகந்தமான நறுமணமும் கிடைக்கும்.
தண்ணீர் அவசியம்
பூ ஜாடியில் அலங்கரிக்கும் முன்பு அழுகிய, சேதமடைந்த இலைகளையும், பூக்களின் இதழ்களையும் அகற்றிவிட வேண்டும். பூக்களின் காம்புகள் முழுமையாக மூழ்கும் வகையில் தண்ணீரை ஊற்றி, 24 மணி நேரம் வைக்க வேண்டும். இதன் பிறகு பூக்களை சாடியில் வைக்கலாம்.
ஐந்து இலைகளை விட்டு, காம்பை வெட்டவும். பூக்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் மற்றும் சத்து காற்றடைப்பால் சேராமல் போவதை தடுக்க காம்பைத் தண்ணீருக்கு அடியில் வைத்து வெட்ட வேண்டும். காம்பை சாய்வாக வெட்டுவதால் பூக்களுக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
பூ ஜாடியில் பாக்டீரியாக்கள் வளர்ந்து பூக்களின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை பாதிக்காமல் இருக்க சாடியில் செம்பில் தயாரிக்கப்பட்ட சிறிய பொருளை போட்டு வைக்கலாம்.
குளிர்ச்சியான இடம்
பூக்கள் அதிக நாள் வாடாமல் இருக்க அவற்றை குளிர்ந்த காற்று படும் வகையில் ஜன்னலுக்கு அருகில் வைப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் வெயில் படக்கூடாது. பழங்கள், காய்கறிகள் ஆகியவை "எத்திலீன்" என்ற வாயு வெளியிடுகின்றன. இதனால் அவற்றிர்கு அருகில் பூக்களை வைத்தால் அவை விரைவில் வாட வாய்ப்புள்ளது. எனவே எந்த பாதிப்பும் இல்லாமல் குளிர்ச்சியாக வைக்கவும். அது மட்டுமல்லாது தினமும் பூ ஜாடியில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும். இது போல கவனம் செலுத்தி பராமரித்தால் பூக்கள் நீண்ட நாட்களுக்கு வாடாமல் மலர்ந்து சிரிக்கும்.



Click it and Unblock the Notifications