Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மனதை கவரும் மலர் பராமரிப்பு

மலராத மொட்டுக்கள்
பூக்களை அலங்கரிக்க வாங்கும் போது முழுமையாக மலராத மொட்டுக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவை வீட்டினுள் வைக்கும்போது மலரும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு வாடிப்போகாமல் இருக்கும். கூடவே சுகந்தமான நறுமணமும் கிடைக்கும்.
தண்ணீர் அவசியம்
பூ ஜாடியில் அலங்கரிக்கும் முன்பு அழுகிய, சேதமடைந்த இலைகளையும், பூக்களின் இதழ்களையும் அகற்றிவிட வேண்டும். பூக்களின் காம்புகள் முழுமையாக மூழ்கும் வகையில் தண்ணீரை ஊற்றி, 24 மணி நேரம் வைக்க வேண்டும். இதன் பிறகு பூக்களை சாடியில் வைக்கலாம்.
ஐந்து இலைகளை விட்டு, காம்பை வெட்டவும். பூக்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் மற்றும் சத்து காற்றடைப்பால் சேராமல் போவதை தடுக்க காம்பைத் தண்ணீருக்கு அடியில் வைத்து வெட்ட வேண்டும். காம்பை சாய்வாக வெட்டுவதால் பூக்களுக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
பூ ஜாடியில் பாக்டீரியாக்கள் வளர்ந்து பூக்களின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை பாதிக்காமல் இருக்க சாடியில் செம்பில் தயாரிக்கப்பட்ட சிறிய பொருளை போட்டு வைக்கலாம்.
குளிர்ச்சியான இடம்
பூக்கள் அதிக நாள் வாடாமல் இருக்க அவற்றை குளிர்ந்த காற்று படும் வகையில் ஜன்னலுக்கு அருகில் வைப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் வெயில் படக்கூடாது. பழங்கள், காய்கறிகள் ஆகியவை "எத்திலீன்" என்ற வாயு வெளியிடுகின்றன. இதனால் அவற்றிர்கு அருகில் பூக்களை வைத்தால் அவை விரைவில் வாட வாய்ப்புள்ளது. எனவே எந்த பாதிப்பும் இல்லாமல் குளிர்ச்சியாக வைக்கவும். அது மட்டுமல்லாது தினமும் பூ ஜாடியில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும். இது போல கவனம் செலுத்தி பராமரித்தால் பூக்கள் நீண்ட நாட்களுக்கு வாடாமல் மலர்ந்து சிரிக்கும்.



Click it and Unblock the Notifications











