Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சோப்பே இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த 6 பொருட்களை வைத்து பாத்திரத்தை சுத்தமாக கழுவலாமாம் தெரியுமா?
மர சாம்பல் என்பது நமக்குத் தெரிந்த பழமையான இயற்கை கிளீனர்களில் ஒன்றாகும். பாத்திரங்களைக் கழுவும் சோப்புகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, பாத்திரங்களை சுத்தம் செய்ய மர சாம்பல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
பாத்திரங்களைக் கழுவும் சோப்பு தீர்ந்துவிட்டதா? அல்லது பாத்திர சோப்பு மற்றும் பவுடரை வாங்க நீங்கள் மறந்துவிட்டீர்களா? இப்போது அவசரமாக பாத்திரங்களைக் கழுவ வேண்டுமா? அல்லது தீங்கு விளைவிக்கும் சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமா? ஆம். எனில், இக்கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்று வழிகள் மூலம், எந்த வித சோப்பும் பயன்படுத்தாமல் உங்கள் பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்யலாம். இயற்கையான பொருட்களை கொண்டு நீங்கள் செய்யும் இந்த கலவைகள், உங்கள் பாத்திரங்களில் அழுக்கு மற்றும் கிருமிகளை நீக்குகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.

இந்த மாற்றுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும். இந்த இயற்கையான மாற்றீடுகளை நீங்கள் தேர்வு செய்யலாம் மற்றும் உணவுகளில் இருந்து கிரீஸ் மற்றும் வாசனையை திறமையாக போக்கலாம். பாத்திரங்களைக் கழுவும் சோப்பு இல்லாமல் பாத்திரங்களை எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

சமையல் சோடா
பாத்திரங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி, அவற்றின் மீது பேக்கிங் சோடாவை தெளிக்கவும். சோடாவை சிறிது சிறிதாகக் குமிழித்து, பஞ்சைப் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யவும். தட்டுகள் க்ரீஸ் என்றால், 5-6 நிமிடங்களுக்கு தட்டில் பேக்கிங் சோடாவை விட்டு விடுங்கள். நன்றாக ஸ்க்ரப் செய்த பின், வெதுவெதுப்பான நீரில் பாத்திரங்களை மீண்டும் கழுவுங்கள்.

கிளீனர்
வீட்டில் பாத்திரத்தை சுத்தம் செய்ய, உங்களுக்கு ஒரு சில பொருட்கள் தேவை. 1 கப் வெந்நீரை எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 1 முழு எலுமிச்சை சாறு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்துகொள்ளவும். இந்த கலவையை பாத்திரங்களில் ஊற்றி நன்கு தேய்க்கவும். உணவு பாத்திரங்களிலிருந்து உணவுத் துகள்களை அகற்ற உப்பு உதவுகிறது. எலுமிச்சை எந்த வகையான வாசனையையும் நீக்குகிறது.

மர சாம்பல்
மர சாம்பல் என்பது நமக்குத் தெரிந்த பழமையான இயற்கை கிளீனர்களில் ஒன்றாகும். பாத்திரங்களைக் கழுவும் சோப்புகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, பாத்திரங்களை சுத்தம் செய்ய மர சாம்பல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இது பாத்திரங்களை சுத்தம் செய்யவும், துர்நாற்றத்தை போக்கவும், கிருமி நீக்கம் செய்யவும் உதவுகிறது. மர சாம்பலை நேரடியாக உணவு பாத்திரங்களில் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் மற்றும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யலாம்.

அரிசி தண்ணீர்
அரிசி நீரில் மாவுச்சத்து மற்றும் சிட்ரிக் அமிலம் இருப்பதால் கிரீஸ் எளிதில் வெளியேற உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு கிண்ணத்தில் அரிசி தண்ணீரை நிரப்பி அதில் பாத்திரங்களை சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், பாத்திரங்களைத் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, அரிசி நீரின் தனித்துவமான வாசனையைப் போக்க வேண்டும்.

வினிகர்
ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து, 4-5 தேக்கரண்டி வினிகருடன் 1 கப் தண்ணீரை அந்த பாட்டிலில் சேர்க்கவும். பாட்டிலை நன்றாக அசைத்து, பாத்திரங்கள் முழுவதும் தெளிக்கவும். உங்கள் உணவு பாத்திரங்களில் சில நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும், பின்னர் ஸ்க்ரப் மற்றும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி நன்கு தேய்க்கவும்.

சோடா - எலுமிச்சை
ஒரு சிறிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை சேர்க்கவும். அதில் எலுமிச்சை சாற்றை பிழியவும். தேவையான அளவு சாறு சேர்த்து நன்கு கலந்து கலவையை தயார் செய்யவும். இப்போது ஒரு ஸ்க்ரப்பை அந்த கலவையில் நனைத்து, பாத்திரங்களைக் கழுவ அதைப் பயன்படுத்தவும். சோடா எலுமிச்சை என்பது பாத்திரங்களில் இருந்து கிரீஸ் மற்றும் வாசனை இரண்டையும் நீக்கும் ஒரு வலுவான கலவையாகும்.



Click it and Unblock the Notifications