Just In
- 13 min ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 46 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 49 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மழைக்காலத்தில் மசாலா பொருட்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் எளிய வழிகள் என்ன தெரியுமா?
மழைக்காலங்களில் நாம் சமைக்கும் உணவுகள் விரைவில் கெட்டுப் போய்விடுவதை நாம் கவனித்து இருப்போம். மசாலா பொருட்களுக்கும் இதே நிலைதான், அவை ஈரப்பதமான வானிலைக்கு ஆளாகும்போது தங்களின் சுவையையும் இழக்கின்றன.
இந்திய மசாலாப் பொருட்கள் சுவைகள் மற்றும் நறுமணங்களின் தனித்துவமான கலவையாகும், இது எந்த உணவுப்பொருளின் சுவையையும் அதிகரிக்கும். பல நூற்றாண்டுகளாக இந்திய மசாலாப்பொருட்கள் அவற்றின் தனித்துவத்திற்காக புகழ்பெற்றவையாகும். இந்தியர்களையும், இந்தியாவின் மசாலா பொருட்களையும் எப்போதும் பிரிக்க முடியாது.
உணவைத் தயாரிப்பதில் மிகவும் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், எந்த ஒரு உணவுக்கும் ஒரே மாதிரியான சுவை இல்லை, அதனை மசாலாப் பொருட்களால் மட்டுமே உருவாக்க முடியும். ஒவ்வொரு வீட்டிலும் மசாலாக்களின் ரகசியம் அதனுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. சில ரகசிய மசாலா கலவைகள் குடும்பத்தின் உணவு கலாச்சாரத்தை வைத்திருக்கும் தலைமுறைகள் வழியாக அனுப்பப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் மசாலாப்பொருட்களை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய மசாலாக்கள்
ஒவ்வொரு இந்திய சமையலறையிலும், உணவின் சுவையை வலியுறுத்தும் ஆரோக்கியமான மசாலா மற்றும் கலவைகள் நிறைந்த ஒரு புதையலை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். இந்த விலைமதிப்பற்ற மசாலா பொருட்களை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக மழைக்காலங்களில் வானிலை இருண்டதாகவும், ஈரப்பதமாகவும் மாறும் போது உணவு எளிதில் கெட்டுப்போகத் தொடங்குகிறது. ஈரமான பருவமழை காரணமாக மசாலாப் பொருட்கள் எளிதில் ஈரப்பதமாகிறது. நறுமணமும் மங்கத் தொடங்குகிறது.
மழைக்காலம்
மழைக்காலங்களில் நாம் சமைக்கும் உணவுகள் விரைவில் கெட்டுப் போய்விடுவதை நாம் கவனித்து இருப்போம். மசாலா பொருட்களுக்கும் இதே நிலைதான், அவை ஈரப்பதமான வானிலைக்கு ஆளாகும்போது தங்களின் சுவையையும் இழக்கின்றன. எனவே உங்கள் மசாலா பொருட்களை சேமிக்கும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் மசாலா பொருட்களை எப்படி வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
மசாலாப் பொருள்களை காற்று புகாத டப்பாவில் வைக்கவும்
மழைக்காலம் வருவதற்கு முன், உங்கள் சமையலறையை சுத்தம் செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் அனைத்து மசாலா பொருட்களையும் போட்டு வைக்கவும். இவ்வாறு செய்வது உங்கள் மசாலாவை பூஞ்சையிலிருந்து விலக்குவது மட்டுமல்லாமல், அவை நீண்ட நேரம் புதியதாக இருப்பதை உறுதி செய்யும்.
MOST READ:மரணம் பற்றிய கனவுகளால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
வெப்பத்தில் இருந்து விலக்கி வைக்கவும்
நாம் பெரும்பாலும் மசாலா பொருட்களை அடுப்பிற்கு பக்கத்தில்தான் வைத்திருக்கிறோம். இது வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை அதிகளவில் வெளிப்படுத்துகிறது. மசாலாப் பொருட்களில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களும் நறுமணமும் குறிப்பாக மழைக்காலங்களில் மெல்லிய காற்றில் ஆவியாகின்றன. உங்கள் மசாலா பொருட்களை எப்போதும் சூரிய ஒளியில் படாதபடியும், அடுப்பிற்கு பக்கத்தில் இல்லாதபடியும் பார்த்துக் கொள்ளவும். வெப்பத்தை எளிதில் ஊடுருவுவதைத் தவிர்க்க இருண்ட வண்ண ஜாடிக்குள் உங்கள் மசாலாக்களையும் சேமிக்கலாம்.
பிளாஸ்டிக் கவருடன் பிரிட்ஜில் வைக்கக்கூடாது
ஃப்ரிட்ஜ் பெரும்பாலும் மசாலாப் பொருட்களின் இயற்கையான சுவையையும் நறுமணத்தையும் மாற்றுகிறது. உங்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும்போது கூட பிளாஸ்டிக் கவர்களில் வைக்கும்போது அவற்றில் கட்டிகள் ஏற்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். குளிர்சாதன பெட்டியில் உள்ள ஈரப்பதம் காரணமாக இது நிகழ்கிறது மற்றும் உலர்ந்த கொள்கலனில் அல்லது இருண்ட கண்ணாடி ஜாடிக்குள் உங்கள் மசாலாப் பொருட்களை சேமிப்பதன் மூலம் இதைத் தீர்க்க முடியும்.
மசாலா பொருட்களை நிமிர்ந்த நிலையில் வைக்கவும்
ஸ்மார்ட் சமையலறைக்கான அடிப்படை மற்றும் எளிய விதி எல்லாவற்றையும் நிமிர்ந்த நிலையில் சேமிப்பதாகும். இது வசதியானது, பார்ப்பதற்கும் அழகானது மேலும் மசாலா பொருட்களின் ஆயுளையும் அதிகரிக்கிறது. மசாலாக்களை நிமிர்ந்த நிலையில் வைத்திருப்பது அவை எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதை உறுதி செய்யும்.
MOST READ:ஆண்கள் அவங்க ராசிப்படி தன்னோட காதலிக்கிட்ட உண்மையா எதிர்பார்க்கறது என்னனு தெரியுமா?
உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்
எந்த விதமான ஈரப்பதமும் உங்கள் மசாலாப் பொருட்களின் நிறம், நறுமணம் மற்றும் சுவையை கெடுத்துவிடும். ஈரப்பதமான பருவத்தில் உங்கள் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஈரமான கைகளுடனேயோ அல்லது ஈரமான கரண்டிகளுடனோ எப்போதும் மசாலா பொருட்களைத் தொடாதீர்கள், ஏனெனில் அது பூஞ்சை உருவாவதைத் தூண்டும். மடித்த வாசனையையும் சுவையையும் இழப்பதைத் தவிர்க்க, உங்கள் மசாலாப் பொருள்களை தண்ணீரிலிருந்து விலக்கி வைக்கவும். உங்கள் மசாலாப் பொருள்களை நீர் மற்றும் ஒளி மூலத்திலிருந்து விலகி, உலர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் எப்போதும் சேமிக்கவும்.