Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சமைச்சதும் தாளிச்சு கொட்றாங்களே அது எப்படி வந்துச்சுங்கிற ரகசியம் தெரியுமா?
இங்கே நம்முடைய இந்திய சமையலில் உள்ள ஒரு முக்கியமான விஷயம் பற்றி பார்க்கப்போகிறோம். ஏன் நாம் சமையலில் தாளிப்பு செய்கிறோம் என்பது தான் அது.
தாளிப்பு என்றால் என்ன? நமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன? இந்த கேள்வியை எப்போதாவது நாம் நமக்குள் கேட்டிருக்கிறோமா? இல்லவே இல்லை. மணக்க மணக்க யாராவது சமைத்துக் கொடுத்தால் சாப்பிட்டு விட்டு, அவ்வளவு தான்.
மணக்க மணக்க சாம்பாரோ, சட்னியோ வைத்துவிட்டு, கடைசியில் தாளிச்சக் கொட்டுவதற்குள்ளேயும் சில ரகசியங்கள் இருக்கின்றன. ஆனால் நாமோ அது அழகுக்கு என்றும் சுவைக்கு என்றும் மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் இல்லை. அதற்குள் சில ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களும் இருக்கின்றன.
தாளிப்பு ரகசியம்
இந்திய சமையலில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்யை கடாயில் விட்டு, மிதமான சூடு வந்தவுடன், கடுகு, சீரகம், போன்றவற்றை சேர்த்து அதனை பொரிய விடுவார்கள். அவை நன்கு பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, பச்சை அல்லது சிவப்பு மிளகாய் போன்றவற்றை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் அல்லது மிளகு தூள் சேர்ப்பார்கள். இவை அனைத்தும் நன்கு பொரிந்தவுடன் இந்த கலவையை, சுவை மிகுந்த பருப்பு , வறுவல், போரியல், சாம்பார், சட்னி ஆகியவற்றில் சேர்ப்பார்கள். பொதுவாக ஒரு உணவில் தாளிப்பு சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. உண்மையில் இந்த தாளிப்பில் மிகப் பெரிய ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்.
ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள்
தாளிப்பு பற்றிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், மஞ்சள், மிளகு போன்ற மசாலா பொருட்களை அரை மணி நேரத்திற்கு அதிகமாக சமைக்கும்போது அதில் உள்ள செயல்படும் சேர்மங்களான குர்குமின் மற்றும் பைபரின் போன்றவைகள் அதன் தன்மையை இழக்கின்றன. ஆனால் அவற்றை தாளிப்பில் பயன்படுத்தும்போது, அதன் தன்மை தக்க வைக்கப்பட்டு குடலுக்கும் உடலுக்கும் நன்மையைச் செய்கின்றன.
பூண்டு
கிருமி எதிர்ப்பு தன்மை பூண்டுக்கு அதிகம் உண்டு. அதனால் தான் பூண்டை தாளிப்பின் போது அந்த சாறு இறங்கும்படி நம்முடைய பாட்டி தட்டிப் போட்டு தாளிப்பார்கள்.
இந்திய சமையலில் பூண்டு கூட தாளிப்பில் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும். பூண்டிற்கு கிருமி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்பு உண்டு. இதனால் தொற்று மற்றும் கிருமிகள் மனித உடலைத் தாக்குவதில்லை. தாளிப்பில் பூண்டை பயன்படுத்தும்போது ஒரு பாதி அளவே சமைக்கப்படுவதால் அதன் மருத்துவ குணங்கள் தக்க வைக்கப்படுகின்றன. ஆனால் பூண்டு விழுதை சமையலில் சேர்க்கும்போது முழுவதுமாக சமைக்கப்படுவதால் அதிக வெப்பத்தின் காரணமாக அதன் மருத்துவ தன்மை மறைகிறது.
வயிற்று பிடிப்புக்கு
சாம்பார் அல்லது பருப்பு போன்றவற்றில் கொத்துமல்லி இலைகளை பொடியாக நறுக்கி போடாமல் தாளிப்பு நிறைவடையாது. இதனைச் செய்வதால் அந்த உணவின் சுவை மட்டும் அதிகரிப்பதில்லை, உங்கள் செரிமான மண்டலமும் மேம்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவற்றில் உடற்காப்பு மூலக்கூறுகள் உள்ளன, மேலும் அவை செரிமான தசைகளை மேலும் தளர்த்தும். வயிற்று பிடிப்பு அல்லது குடல் நோய்க்குறி மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.
அசிடிட்டிக்கு சீரகம்
எல்லா தாளிப்பிலும் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடக்கின்றது. செரிமான கோளாறுகளை சமன் செய்ய மட்டுமில்லாமல், அசிடிட்டி மற்றும் வயிற்றுபோக்கிற்கும் சிறந்த தீர்வைத் தருகின்றன.
மிளகாய் விதைகளின் நன்மைகள்
சிவப்பு மற்றும் பச்சை மிளகாயின் விதைகளில் வைட்டமின் ஏ, பி, கே ஆகியவை அதிகமாக உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.
மஞ்சளின் மகிமை
மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் போற்றப்படும் ஒரு உணவுப்பொருள் ஆகும். மஞ்சள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அது மட்டுமில்லாமல், மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு, தொற்று பாதிப்பைப் போக்கவும், இருமல் மற்றும் தொண்டையில் உண்டாகும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இது சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.
தசைவலிக்கு கடுகு
கடுகில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது, இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை, கீல்வாதம், தசை வலி ஆகியவற்றிற்கு நன்மையைச் செய்கின்றது.
முடிவுரை
ஆகவே தாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டீர்களா? உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் தாளிப்பு உதவுகிறது என்பதால் உடனடியாக உங்கள் உணவில் இதனை இணைத்துக் கொள்ளுங்கள். இதன் நன்மையைப் பெற்றிடுங்கள்.