Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
நீங்க சமைச்ச உணவு அடிபிடிச்சு தீய்ந்த வாசனை வருதா? அத சரிபண்ண இந்த ஈஸியான வழிகள் போதும்...!
சமைக்கும் போது நாம் பொதுவாக சந்திக்கும் சிக்கல்களில் முக்கியமானது உணவு அடிபிடித்து தீய்ந்து போவது. தீய்ந்து போன உணவை சாப்பிடுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கஷ்டப்பட்டு சமைத்த உணவு சிறிய கவனக்குறைவால் தீய்ந்து போவது துரதிர்ஷ்டவசமானது.
ஆனால் அந்த உணவை சாப்பிடவே முடியாதா என்றால் நிச்சயம் இல்லை? சில எளிய தந்திரங்கள் மூலம் உங்கள் அடிபிடித்த உணவை சாப்பிடக்கூடியதாக மாற்றலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தீய்ந்த சுவையை நீர்த்துப்போக செய்ய வேண்டும்
தீய்ந்த குழம்பை சரிசெய்ய எளிதான வழிகளில் ஒன்று தீய்ந்த சுவையை நீர்த்துப்போகச் செய்வதாகும். காய்கறி குழம்பில், தேங்காய் பால் அல்லது தண்ணீர் போன்ற அதிக திரவத்தைச் சேர்க்கவும். இது எரிந்த சுவையை நீர்த்துப்போகச் செய்வது மட்டுமல்லாமல், கறியை மிகவும் சுவையாக மாற்றும்.
இனிப்பை சேர்க்கவும்
உங்கள் தீய்ந்த உணவில் இனிப்பைச் சேர்ப்பது தீய்ந்த சுவையை சமநிலைப்படுத்த உதவும். சர்க்கரை, தேன் அல்லது மாம்பழம் அல்லது அன்னாசி போன்ற சில பழங்களை உங்கள் குழம்பில் சேர்க்கவும். இது எரிந்த சுவையை சரிசெய்ய உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் உணவில் ஒரு புதிய சுவையையும் சேர்க்கும்.
தயிர் சேர்க்கவும்
தயிர் சுவையை நடுநிலையாக்க உதவும் அதன் அற்புத நன்மைக்காக அறியப்படுகிறது. உங்கள் காய்கறி குழம்பு தீய்ந்து விட்டால், கறியில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இது தீய்ந்த சுவையை நடுநிலையாக்க உதவுகிறது மற்றும் குழம்பை கெட்டியாக மற்றும் சுவையாக மாற்றும்.
சில மசாலாக்களை சேர்க்கவும்
ப்ரெஷ் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உங்கள் தீய்ந்த குழம்புக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும். உங்கள் குழம்பில் கொத்தமல்லி, துளசி அல்லது புதினாவைச் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம். கூடுதலாக, சீரகம், கொத்தமல்லி அல்லது மஞ்சள் போன்ற சில மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது தீய்ந்த சுவையை மறைத்து, உங்கள் உணவில் புதிய மாற்றத்தைக் கொடுக்கும்.
உருளைக்கிழங்கு சேர்க்கவும்
மேற்கூறிய எதுவும் வேலை செய்யவில்லை என்றால், 1-2 உருளைக்கிழங்கை தோலுரித்து, கிரேவியில் சேர்த்து நன்கு கலக்கவும். அவற்றை 10-15 நிமிடங்கள் ஊற விடவும். ஊறவைத்தவுடன், உருளைக்கிழங்கை வெளியே எடுத்து கிரேவியை மீண்டும் சூடாக்கினால் குழம்பு சுவையாக இருக்கும்.
பிரட் அல்லது சாதத்துடன் பரிமாறவும்
உங்கள் அடிபிடித்த குழம்பை சிறிது பிரட் அல்லது சாதத்துடன் பரிமாறவும். பிரட் அல்லது சாதம் எரிந்த சுவையை உறிஞ்சி, குழம்பை மிகவும் சுவையாக மாற்ற உதவும். கூடுதலாக பிரட் அல்லது சாதத்துடன் பரிமாறுவது வயிற்றை வேகமாக நிரப்பவும், உணவை மிகவும் திருப்திகரமாகவும் மாற்ற உதவும்.



Click it and Unblock the Notifications

