Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
உங்க தோட்டத்து செடி வாடிப்போகுதா? கவனம் தேவை!

தண்ணீர் விடுங்கள்
தாவரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அவை வாடிப்போய்விடும். எனவே அனைத்து செடிகளுக்கும் உரிய இடைவெளியில் தண்ணீர் விடவேண்டும். அதிக அளவு தண்ணீர் ஊற்றினாலும் ஆபத்து. எனவே செடிகளின் வேர்ப்பகுதியில் படுமாறு தண்ணீர் விடுவதோடு தெளிப்பான் மூலம் இலைகளில் படுமாறு தண்ணீர் விடுவது செடிகளுக்கு உயிரோட்டத்தை தரும்.
நிழல் ஏற்படுத்தலாம்
ஒரு சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் செடிகள் வாடிப்போகலாம். அதுமாதிரியான நேரத்தில் தொட்டியை இடம் மாற்றி வைக்கலாம். தரையில் வளரும் செடிகள் எனில் அவற்றிர்கு நிழலை ஏற்படுத்தி தரலாம்.
பூச்சி தாக்குதல்
செடியின் ஏதேனும் ஒரு இலையில் பூச்சித் தாக்குதல் இருந்தால் அந்த இலையை அகற்ற வேண்டும். அனைத்து இலைகளுமே பூச்சிதாக்குதலுக்கு ஆளாகியிருந்தால் அவற்றை அகற்றிவிடுவது செடிகளுக்கு பாதுகாப்பானது. பின்னர் முளைக்கும் இலைகள் புதிதாக ஆரோக்கியமானதாக இருக்கும்.
ஏதேனும் ஒரு செடியில் பூச்சி தாக்கினால் அதை கண்டறிந்து உரிய உரம் இடம் இடவேண்டும். இல்லையெனில் அந்த செடியில் உள்ள நோய் பாதிப்பு பிற செடிகளுக்கு பரவி பாதிப்பு ஏற்படும். ஒரு சில செடிகளில் தண்டில் புழு தாக்குதல் இருக்கும். அப்போது தண்டுப்பகுதியை லேசாக வெட்டிவிட வேரினை ஆதாரமாகக் கொண்டு செடிகள் வளரும்.
நம் வீட்டுத்தோட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செடிகளை வாடிப்போகாமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications