Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
தோட்டத்து செடிகளுக்கான இயற்கைப் பூச்சிக் கொல்லிகள்!!!

* முட்டை ஓட்டை நன்கு உடைத்து, உப்புடன் சேர்த்து தோட்டத்தில் போட்டால், நத்தைகள் போன்ற பூச்சிகள் வராமல் தடுக்கலாம். எப்படியெனில் முட்டை ஓடுகள் அவற்றிற்கு கண்ணாடித்துகள்களைப் போன்று இருக்கும். மேலும் உப்பு எந்த ஒரு பூச்சியையும் வராமல் தடுக்கும்.
* சிறிது பூண்டை தோலுடன் நசுக்கி, சிறிது மிளகுத்தூள், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நீர் ஆகியவற்றை கரைத்து, செடிகளின் மேல் தெளித்தால், அவை செடிகளை எந்த ஒரு பூச்சிகளும் அரிக்காமல் பாதுக்காக்கும்.
* டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை நீருடன் கலந்து, தோட்டத்தில் விட்டால், தோட்டம் நன்கு சுத்தமாக காணப்படும்.
* தக்காளியின் இலைகளில் நிறைய அல்கலாய்டுகள் உள்ளன. அவை செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. ஆகவே தக்காளியின் இலைகள் எங்காவது கிடைத்தால், அவற்றை நசுக்கி நீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, பின் அந்த நீரை செடிகளுக்கு தெளித்தால், செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
* வேப்பிலையில் நிறைய பூச்சிகளை அழிக்கும் திறன் உள்ளது. ஆகவே அவற்றை அரைத்து நீரில் கரைத்து, செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் அழிவதோடு, மீண்டும் பூச்சிகள் வராமலும், வேறு எந்த ஒரு நோயும் தாக்காமலும் இருக்கும்.
* காப்பி போடும் போது, அதனை வடிகட்டினால் வரும் மண்டியை வெளியே தூக்கிப் போடாமல், செடிகளைச் சுற்றி போட்டால், அவை எந்த ஒரு பூச்சியும் செடியை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். மேலும் செடிகள் பூச்சியின் தாக்கத்தினால், வலுவிழந்து காணப்பட்டாலும், அதனை சரிசெய்துவிடும்.
வேறு என்னவெல்லம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...



Click it and Unblock the Notifications