Just In
- 14 min ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 2 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 2 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 7 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- Movies
தலைவி, குயினுக்கு தடையில்லை.. "இது கற்பனை கதை" என அறிவிப்பு விட வேண்டும்: ஹைகோர்ட்
- News
ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை ரிசல்ட் இப்போதைக்கு இல்லை.. ஜனவரிக்கு வழக்கு ஒத்திவைப்பு
- Sports
அண்ணே! ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர் வீரருக்கு கல்தா.. சோலியை முடித்த ராகுல்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது..!
- Automobiles
2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...
- Technology
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- Education
விண்ணப்பித்துவிட்டீர்களா? ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்ல பச்சை மிளகாய் செடி போட்டிருக்கீங்களா? இதப்படிங்க!
தரமான மிளகாய் செடி வளர்ப்பு பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
பயிரிடும் பருவம்
பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடலாம். ஜனவரி – பிப்ரவரி, ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் ஆகிய மாதங்கள் பயிரிடலாம். மிளகாய் வளர மித வெப்பமான பருவமே ஏற்றது அதிக குளிரோ, அதிக வறட்சியோ ஏற்றதல்ல. எனவே சூரிய வெப்பம் நிலத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சாத பருவமாக இருந்தால் பச்சை மிளகாய் வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும். அதேபோல் அதிக தண்ணீர் ஊற்றி நிலம் களிமண்ணாக இருந்தாலும் ஏற்றதல்ல என்கின்றனர் வேளாண்துறையினர்.
நோய் தாக்குதல்
பச்சை மிளகாயை நாற்றழுகல் நோய், பழ அழுகல் நோய் தாக்கும். பச்சைமிளகாயின் நாற்றுக்கள் மடிந்து சொட்டையாக மாறிவிடும். இதற்கு பூஞ்சைத்தாக்குதலே காரணமாகும். மண்ணில் காணப்படும் இந்த பூஞ்சைகள் விதை விதைத்த உடன் நாற்றாங்களை தாக்கத் தொடங்குகின்றன.
இப்பூஞ்சை தாக்குதலினால் செடிகள் வளராமல் திட்டு திட்டாக காணப்படும்.
நாற்றங்கால் நிலத்தை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும். போதிய அளவு விதையை மட்டும் கலக்கமாக விதைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். விதைகளை விதைப்பதற்கு முன்பு திராம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் மருந்திட்டு விதைக்க வேண்டும். மண்ணிலிருந்து தாக்கும் பூசணங்களையும் சிறிது காலத்திற்கு தடுத்து விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கும். இதனால் நாற்றுக்கள் நன்கு வளரமுடியும்.
பூக்கும், காய்க்கும் பருவம்
மிளகாய் செடி நன்றாக பூக்க வேண்டுமெனில் பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இதனால் பூ நன்றாக பூக்கும். இதேபோல் டிரை கார்டினாலை ஒரு லிட்டர் தண்ணீரில் 25 மில்லி லிட்டர் கலந்து தெளிக்க நன்றாக காய் பிடிக்கும்.
பூச்சித்தாக்குதல்
மிளகாய் செடியை இலைப்பேன், அசுஉணி, செஞ்சிலந்து ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அதேபோல் காய் பிடித்திருக்கும் பருவத்தில் காய் துளைப்பான் பூச்சிகள் தாக்கும். இவற்றை விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை அளிக்கலாம். மிளகாய் காய்த்த உடன் அவற்றை பறித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் புதிய பச்சை மிளகாய் காய்க்கும்.
அதேபோல் மிளகாய் செடிகளுக்கு அருகில் உளுந்து, பாசிப்பயறு செடிகளை பயிரிட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி விளைச்சல் நன்றாக இருக்கும் என்கின்றனர் வேளாண்மைத்துறையினர். இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மிளகாய் உற்பத்தி அதிகரிக்கும்.