Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
வாஸ்துப்படி, இந்த பொருட்களால் வீட்டை அலங்காரம் பண்ணிடாதீங்க... இல்ல நிறைய இழப்பை சந்திப்பீங்க...
வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டின் அமைதியையும், மகிழ்ச்சியையம் அழிக்கும். எனவே ஒரு பொருளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க நினைக்கும் முன், அந்த பொருளை வீட்டில் வைக்கலாமா கூடாதா என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும்.
நம் அனைவருக்குமே நல்ல அழகான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளில் வாழ ஆசை இருக்கும். அதற்காக பலர் தங்களின் வீடுகளை பல கலைப் பொருட்கள், ஓவியங்கள், போட்டோக்கள் என்று பலவற்றால் அலங்கரிப்பார்கள். நாம் வாழும் வீடானது நமக்கு பிடித்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தால், அந்த வீடானது சொர்க்கம் போன்று இருக்கும். ஆனால் நாம் விரும்பும் அனைத்து பொருட்களையுமே வைக்க முடியாது.

ஏனெனில் வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டின் அமைதியையும், மகிழ்ச்சியையம் அழிக்கும். எனவே ஒரு பொருளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க நினைக்கும் முன், அந்த பொருளை வீட்டில் வைக்கலாமா கூடாதா என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும். கீழே வாஸ்துப்படி வீட்டை அலங்கரிக்க பயன்படுத்தக்கூடாத சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்பதையும், எதனால் வைக்கக்கூடாது என்பதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இது காதலின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு கல்லறை. எனவே தாஜ்மஹாலைக் குறிக்கும் சிறிய உருவங்கள் மற்றும் ஓவியங்கள் கொண்ட எதைக் கொண்டும் வீட்டை அலங்கரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மகாபாரதம் மற்றும் ராமாயண போர் காட்சிகள்
வாஸ்துப்படி, வீட்டில் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் உள்ள போர் காட்சிகளை கொண்ட போட்டோக்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகளை அதிகரிக்கும். என்ன தான் மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் நமக்கு பல விஷயங்கள் கற்றுக் கொடுத்தாலும், அழிவைக் குறிக்கும் எந்த ஒரு போட்டோக்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது.

சேதமடைந்த/பயன்படுத்தாத கடிகாரம்
நேரம் மிகவும் இன்றியமையாதது மற்றும் அது தான் நம்மை வளர வைக்கிறது. இப்படி வளர்ச்சியைக் குறிக்கும் கடிகாரமானது ஓடாமல் வீட்டின் ஒரு ஓரத்தில் இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் உள்ளோரின் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும்.

உடைந்த கண்ணாடி
உங்கள் வீட்டில் கண்ணாடியானது படுக்கைக்கு முன் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேப் போல் வீட்டில் உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருக்காதீர்கள். உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருந்தால், அது ஏழு வருடங்கள் துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம் முன்னோர்கள் நம்புகிறார்கள்.

நீர்வீழ்ச்சி, மழை மற்றும் கடல் போட்டோக்கள்
வீட்டின் படுக்கையறையில் நீர்வீழ்ச்சி, மழை மற்றும் கடல் போன்ற போட்டோக்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, பல இழப்புக்களை சந்திக்க வைக்கும். இருப்பினும் இந்த மாதிரியான போட்டோக்களை வைக்க சிறந்த திசை வடக்கு திசையாகும்.

விலங்குகளின் போட்டோக்கள்
விலங்குகளின் போட்டோக்கள் அல்லது ஆந்தைகள், புறாக்கள், பாம்புகள் போன்றவற்றின் சிலைகளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கக்கூடாது. வாஸ்துப்படி, இந்த விலங்குகள் வீட்டினுள் எப்போதும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கச் செய்யும். எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications











