Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வாஸ்துப்படி, இந்த பொருட்களால் வீட்டை அலங்காரம் பண்ணிடாதீங்க... இல்ல நிறைய இழப்பை சந்திப்பீங்க...
வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டின் அமைதியையும், மகிழ்ச்சியையம் அழிக்கும். எனவே ஒரு பொருளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க நினைக்கும் முன், அந்த பொருளை வீட்டில் வைக்கலாமா கூடாதா என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும்.
நம் அனைவருக்குமே நல்ல அழகான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளில் வாழ ஆசை இருக்கும். அதற்காக பலர் தங்களின் வீடுகளை பல கலைப் பொருட்கள், ஓவியங்கள், போட்டோக்கள் என்று பலவற்றால் அலங்கரிப்பார்கள். நாம் வாழும் வீடானது நமக்கு பிடித்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தால், அந்த வீடானது சொர்க்கம் போன்று இருக்கும். ஆனால் நாம் விரும்பும் அனைத்து பொருட்களையுமே வைக்க முடியாது.

ஏனெனில் வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டின் அமைதியையும், மகிழ்ச்சியையம் அழிக்கும். எனவே ஒரு பொருளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க நினைக்கும் முன், அந்த பொருளை வீட்டில் வைக்கலாமா கூடாதா என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும். கீழே வாஸ்துப்படி வீட்டை அலங்கரிக்க பயன்படுத்தக்கூடாத சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்பதையும், எதனால் வைக்கக்கூடாது என்பதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இது காதலின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு கல்லறை. எனவே தாஜ்மஹாலைக் குறிக்கும் சிறிய உருவங்கள் மற்றும் ஓவியங்கள் கொண்ட எதைக் கொண்டும் வீட்டை அலங்கரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மகாபாரதம் மற்றும் ராமாயண போர் காட்சிகள்
வாஸ்துப்படி, வீட்டில் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் உள்ள போர் காட்சிகளை கொண்ட போட்டோக்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகளை அதிகரிக்கும். என்ன தான் மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் நமக்கு பல விஷயங்கள் கற்றுக் கொடுத்தாலும், அழிவைக் குறிக்கும் எந்த ஒரு போட்டோக்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது.

சேதமடைந்த/பயன்படுத்தாத கடிகாரம்
நேரம் மிகவும் இன்றியமையாதது மற்றும் அது தான் நம்மை வளர வைக்கிறது. இப்படி வளர்ச்சியைக் குறிக்கும் கடிகாரமானது ஓடாமல் வீட்டின் ஒரு ஓரத்தில் இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் உள்ளோரின் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும்.

உடைந்த கண்ணாடி
உங்கள் வீட்டில் கண்ணாடியானது படுக்கைக்கு முன் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேப் போல் வீட்டில் உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருக்காதீர்கள். உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருந்தால், அது ஏழு வருடங்கள் துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம் முன்னோர்கள் நம்புகிறார்கள்.

நீர்வீழ்ச்சி, மழை மற்றும் கடல் போட்டோக்கள்
வீட்டின் படுக்கையறையில் நீர்வீழ்ச்சி, மழை மற்றும் கடல் போன்ற போட்டோக்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, பல இழப்புக்களை சந்திக்க வைக்கும். இருப்பினும் இந்த மாதிரியான போட்டோக்களை வைக்க சிறந்த திசை வடக்கு திசையாகும்.

விலங்குகளின் போட்டோக்கள்
விலங்குகளின் போட்டோக்கள் அல்லது ஆந்தைகள், புறாக்கள், பாம்புகள் போன்றவற்றின் சிலைகளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கக்கூடாது. வாஸ்துப்படி, இந்த விலங்குகள் வீட்டினுள் எப்போதும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கச் செய்யும். எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications