Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது!
வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப வாஸ்துப்படி இந்த சிலைகளை வாங்கி வையுங்க...
வீட்டில் சிலைகளைக் கொண்டு அலங்கரிக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வகையான சிலைகள் வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
நாம் அனைவருமே வீட்டை அழகாக வெளிக்காட்ட விரும்புவோம். அதற்காக வீட்டை பல அழகான பொருட்களை வாங்கி அலங்கரிப்போம். வாஸ்துப்படி வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டை அலங்கரிப்பதற்கு ஏராளமான பொருட்கள் உள்ளன. சிலர் வீட்டில் பல அழகான போட்டோக்களை வாங்கி மாட்டுவார்கள், சிலர் உள்அலங்கார செடிகளைக் கொண்டு வீட்டை அலங்கரிப்பார்கள். இன்னும் சிலர் சிலைகளை வாங்கி வைத்து வீட்டை அலங்கரிப்பார்கள்.

ஆனால் வீட்டில் சிலைகளைக் கொண்டு அலங்கரிக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வகையான சிலைகள் வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இன்னும் சில வகையான சிலைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் செல்வம் பெருக வழிவகை செய்யும். இப்போது ஒருவரது வீட்டில் செல்வம் அதிகரிக்க வாஸ்துப்படி எந்த சிலைகளை வாங்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

விநாயகர் சிலை
வீட்டில் விநாயகர் சிலையை வைப்பது நல்லது. அதுவும் பித்தளையாலான விநாயகர் சிலையை வைத்தால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, அந்த வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும். முக்கியமாக விநாயகர் சிலையை வைத்துள்ள வீட்டில் பணம் அதிகம் சேரும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். வீட்டின் வாசலில் விநாயகர் சிலையை வைத்தால், வாஸ்து தோஷம் நீங்கும்.

உலோக யானை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உலோகத்தால ஆன யானைகளை வீட்டில் வைப்பது நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதோடு வீட்டில் மகிழ்ச்சி பெருகுவதோடு, செல்வமும் அதிகரிக்கும். எந்த வீட்டில் யானை சிலை உள்ளதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடிபுகுவாள்.

பசுவின் சிலை
வீட்டில் பசுவின் சிலையை வைப்பது வாஸ்துப்படி நல்லதாக கருதப்படுகிறது. இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பசுவானது அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் ஒரு மங்களகரமான விலங்காக கருதப்படுகிறது. எனவே பசுவின் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம், அனைத்து தெய்வங்களும் வீட்டில் இருப்பதற்கு சமம். முக்கியமாக பசுவின் சிலை வாஸ்து தோஷத்தை போக்கும்.

ஆமை சிலை
ஆமை விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறது. அதனால் ஆமை சிலையை வீட்டில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. எந்த வீட்டில் ஆமை சிலை உள்ளதோ, அந்த வீட்டில் செல்வம் பெருகும். வாஸ்துப்படி ஆமை சிலையை வடக்கு திசையில் வைப்பது மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும்.

ஓடும் குதிரை சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் குதிரை சிலையை வைப்பது, அந்த வீட்டில் உள்ளோருக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். அதுவும் ஓடும் குதிரையின் சிலையானது வேகம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது. ஆகவே இந்த மாதிரியான சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், அந்த வீட்டில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.



Click it and Unblock the Notifications











