Latest Updates
-
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க..
வாஸ்துப்படி வீட்டின் முன் 'இத' வெச்சா நேர்மறை ஆற்றல் அதிகரிச்சு.. வீட்டுல செல்வம் பெருகுமாம்..
ஒருவரது வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நுழைய வேண்டுமானால், வீட்டு வாசலை சுத்தமாகவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையான பொருட்களையும் வைக்க வேண்டும்.
நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான் அந்த வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில், ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும், எந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும், எந்த பொருட்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்பன பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் வீட்டை ஒருவர் அலங்கரிக்கும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது அந்த வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.

ஒருவரது வீட்டு வாசலின் வழியாக ஆற்றல்கள் நுழைகிறது. எனவே ஒருவரது வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நுழைய வேண்டுமானால், வீட்டு வாசலை சுத்தமாகவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையான பொருட்களையும் வைக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் நுழைவதோடு மட்டுமின்றி, லட்சுமி தேவியும் வீட்டிற்கு வருவார் என்பது நம்பிக்கை. இப்போது நேர்மறை ஆற்றல் அதிகம் நுழைய ஒருவரது வீட்டின் பிரதான நுழைவாயில் தொடர்பான சில வாஸ்து குறிப்புகளைக் காண்போம்.

சுத்தம் அவசியம்
வீட்டின் பிரதான நுழைவாயின் வழியே ஆற்றல்கள் நுழைவதால், நுழைவாயிலானது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கும் நுழைவாயிலின் வழியே எதிர்மறை ஆற்றல் தான் நுழையும். இதன் காரணமாக வீட்டில் உள்ளோரிடையே சண்டைகள் அதிகரிக்கும்.

ஸ்வஸ்திக், ஓம் அடையாளம்
வீட்டில் பிரதான நுழைவாயிலின் கதவில் ஓம், ஸ்வஸ்திக் போன்ற அடையாளங்களை வைக்க வேண்டும். மேலும் பிரதான நுழைவாயிலின் முன் ரங்கோலியைப் போடுங்கள். இது மங்களகரமானது மட்டுமின்றி, வீட்டில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.

விநாயர் மற்றும் லட்சுமி சிலை
வீட்டின் நுழைவாயிலை சிலைகளைக் கொண்டு அலங்கரிக்க விரும்பினால், விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகளை வைத்து அலங்கரிக்கலாம். இது அந்த வீட்டில் உள்ளோருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு, செல்வம் மற்றும் செழிப்பைத் தரும்.

குதிரை லாடம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுக்க பிரதான நுழைவாயிலில் குதிரை லாடத்தை தொங்கவிடுங்கள். அதுவும் கருப்பு குதிரை லாடத்தை வீட்டின் வாசல் கதவில் தொடங்கவிட லேண்டும்.

மிதியடி
வீட்டின் பிரதான நுழைவாயிலில் எப்போதும் ஒரு சுத்தமான மிதியடியை வைக்க வேண்டும். இதனால் வீட்டிற்கு வருவோரின் பாதங்களில் உள்ள அழுக்குகள் அந்த மிதியடியில் தங்கி, வீட்டில் நுழைய விடாமல் தடுக்கும்.

மணிபிளாண்ட்/துளசி செடி
வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நுழைய வேண்டுமானால், வாஸ்துப்படி வீட்டின் பிரதான நுழைவாயிலின் அருகில் ஒரு மணிபிளாண்ட் அல்லது துளசி செடியை வைத்து வளர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











