Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பொங்கல் பண்டிகைக்கு கோலம் போட போறீங்களா? முதல்ல இத பாருங்க!!!
பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும் அழகான கோலங்கள் போட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் சில பண்டிகை நாட்களில் கோலப் போட்டியே நடைபெறும். முக்கியமாக பொங்கல் பண்டிகையன்று நிச்சயம் பெண்களுக்காக கோலப் போட்டிகள் நடைபெறும். கோலம் போடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது ஒரு கலை. அந்த கலை உணர்வு இருந்தால், நிச்சயம் கோலம் போட முடியும்.
அன்றைய காலத்தில் எல்லாம் புள்ளி வைத்து தான் கோலங்களைப் போடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ரங்கோலி தான் பிரபலமாக உள்ளது. பெரும்பாலானோர் ரங்கோலி போடுவதில் தான் அதிக ஆர்வத்தை செலுத்துகின்றனர். ஏனெனில் ரங்கோலி என்றால், இப்படி தான் என்று இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் என்று இருப்பதாலேயே அனைவரும் இதை போடுகின்றனர்.
இத்தகைய ரங்கோலி போடும் போது, அதில் நிறங்களை நிரப்ப பொதுவாக கோலப் பொடியில் கலந்து தான் நிரப்புவோம். ஆனால் தற்போது சற்று வித்தியாசமாக உப்பில் கலந்தும் போடலாம். இப்போது அந்த ரங்கோலி டிசைனில் சிலவற்றை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு விருப்பமான ஐடியாவை தேர்ந்தெடுத்து, கோலப் போட்டியில் வெற்றி பெறுங்கள்!!!

ரோஜாப்பூ கோலம்
இந்த டிசைனில் அரிசி மாவால் கோலத்தைப் போட்டு, வண்ணங்களால் நிரப்பி, கோலத்தின் மேல் ரோஜாப்பூக்களை வைத்து அலங்கரிக்கலாம்.

மலர்ந்த பூ போன்ற டிசைன்
இதில் பூவானது மலர்ந்தது போல் முதலில் ஒரு சாக்பீஸால் வரைந்து, பின் அந்த கோலத்தை வண்ணமயமான பூக்களால் நிரப்பலாம். இதனால் கோலமானது அழகாக காண்பதோடு, நன்கு மணத்தோடு இருக்கும்.

தாமரை டிசைன்
இந்த ரங்கோலியில் ஏதாவது ஒரு டிசைனை வரைந்து, பின் அதனை சுற்றி தாமரைப் பூக்களை வரைந்து விட வேண்டும். இதனால், கோலம் நன்கு பெரிதாக தெரிவதோடு, பிங்க் நிறத்தில் இருக்கும் தாமரைப் பூ மிகுந்த அழகைக் கொடுக்கும்.

சிம்பிள் மற்றும் மார்டன் டிசைன்
இந்த டிசைன் பார்ப்பதற்கு சிம்பிளாக, ஆனால் சற்று மார்டன் போன்று காணப்படும். அதற்கு காரணம், இதில் கலர் பொடியை கொடுத்துவிட்டு, பின் அதனுள் வெள்ளைப் பொடியால் அலங்கரித்திருப்பதே ஆகும்.

மின்னும் கோலம்
இந்த கோலத்தில் டிசைனை வரைந்துவிட்டு, அதில் நிறங்களை நிரப்புவதற்கு இதுவரை பொடியை வைத்து தான் செய்திருப்போம். ஆனால் இந்த கோலத்தில் கலர் பொடியை கல் உப்பில் கலந்து, கலர் கொடுத்திருப்பதால், அவை லேசாக மின்னுகிறது. இவ்வாறு செய்தால், அவை கோலத்திற்கு அழகை அதிகரிக்கும்.

வட்ட கோலம்
இந்த மாதிரியான ரங்கோலியில் எந்த ஒரு கடினமான டிசைனும் இல்லை. இதில் வட்டம் போட்டு, அதனுள் நிறங்களை நிரப்பி, பின் ஆங்காங்கு டிசைனை வரைந்துவிட்டால் போதுமானது.

ஸ்டைலிஸ் ரங்கோலி
இதிலும் கல் உப்பில் கலந்த நிறத்தை வைத்து தான் நிறங்களை நிரப்புகிறோம். ஆனால் என்ன இதில் ஆங்காங்கு கட்ட கட்டமாக வரைந்து, அதனுள் நிறங்களை நிரப்பி, பின் எஞ்சிய இடங்களில் வெள்ளை நிற உப்பை வைத்து நிரப்பி விட்டு, சுற்றி கருப்பு நிறத்தை கொடுத்துவிட்டால், அவ்வளவு தான்.

பொங்கல் டிசைன்
பொதுவாக பெரும்பாலானோர் பொங்கல் அன்று பொங்கல் பொங்குவது போன்ற டிசைனைத் தான் போடுவார்கள். அதிலும் பானை வரைந்துவிட்டு, அதற்கு நிறங்களை நிரப்புவதில் தான் விஷயமே இருக்கிறது. என்னதான் பொங்கல் பானை வைத்தாலும், அனைவருமே அழகான, இயற்கையான பொங்கல் பானை போன்றே வரைந்து, நிறம் கொடுத்துவிட முடியாது. அவ்வாறு நிறம் கொடுக்கும் போது சிறிது மாறிவிட்டாலும் அவ்வளவுதான்.



Click it and Unblock the Notifications